Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    என்றுமே ஏற்பட்டிராத ஓர் கொடிய இக்கட்டுக்காலம்!, செப்டம்பர் 14

    “உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலம்மட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படிகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படிவார்கள்.” - தானியேல் 12:1.Mar 513.1

    மூன்றாம் தூதனின் தூது முடிவடைகிறபோது, பாவிகளுக்காக இரக்கம் இனி ஒருபோதும் பூமியில் மன்றாடுகிறதில்லை. தேவனுடைய மக்கள் தங்களுடைய வேலையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்கள் “பின்மாரியை” அதாவது “தேவசமூகத்தின்று வருகிற இளைப்பாறுதலை” பெற்றுக்கொண்டுவிட்டார்கள். தங்கள்முன் இருக்கிற இக்கட்டுக்காலத்திற்காக, ஆயத்தமாகி விட்டார்கள். தூதன்: ‘தன் வேலை முடிவடைந்துவிட்டது’ என்று அறிவிக்கிறான். பூமியிம்மேல் கடைசிச் சோதனை அனுப்பப்பட்டாயிற்று. தெய்வீகப் பிரமாணங்களுக்கு உண்மையாக இருந்தவர்கள் “ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையை” பெற்றுக்கொண்டார்கள்; பின்பு, இயேசு தமது ஆசரிப்புக்கூடார மத்தியஸ்த வேலையை முடிக்கிறார். தமது கரங்களை உயர்த்தி: “ஆயிற்று” என்று முழங்குகிறார்…Mar 513.2

    அவர் ஆசரிப்புக்கூடாரத்திலுருந்து வெளியேறினபோது, இருள் பூமியின் குடிகளைச் சூழ்ந்துகொண்டது. அந்த பயங்கரமான நேரத்திலே, மத்தியஸ்தர் இல்லாமல் நீதிமான்கள் பரிசுத்த தேவனுக்கு முன்பாக நிற்கவேண்டும். துன்மார்க்கர்மேல் விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. மனதைக் கடினப்படுத்தி, மனந்திரும்பாதிருந்த மக்கள்மீது சாத்தானுக்கு முழு அதிகாரமும் கிடைக்கிறது. தேவனுடைய நீடிய பொறுமை முடிவடைந்து விடுகிறது, உலகம் அவரது இரக்கத்தைத் தள்ளிப்போட்டது; அவரது அன்பை இகழ்ந்தது; அவரது கற்பனைகளை மிதித்துப் போட்டது. துன்மார்க்கர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காலத்தைக் கடந்துவிட்டார்கள். தொடர்ந்து மறுக்கப்பட்ட தேவ ஆவியானவர், கடைசியாக எடுத்துக்கொள்ளப்பட்டார். தெய்வீகக் கிருபையின் மறைவு இல்லாதபொழுது, துன்மார்க்கர்களுக்கு எதிரான வேறு பாதுகாப்பு அவர்களுக்கு இல்லை; அப்போது ஒரு மாபெரும் இறுதி இக்கட்டிற்குள்ளாக, சாத்தான் பூமியின் குடிகள் அனைவரையும் அமிழ்த்திவிடுவான்; மானிட இச்சைகளினால் ஏற்படும் அந்தக் கொடிய வெறித்தனத்தை கட்டுப்படுத்துவதை தேவ தூதர்கள் நிறுத்திவிட்டார்கள். சண்டைகளுக்கான எல்லா வழிமுறைகளும் கட்டவிழ்த்துவிடப்படும். முந்தைய எருசலேமின்மேல் வந்த அழிவைக் காட்டிலும், மிகவும் பயங்கரமான கொடிய அழிவிற்குள் உலகம் முழுவதும் சிக்கிக்கொள்ளும்.Mar 513.3

    கைகளில் சுத்தமுள்ளவர்களும் இதயத்தில் மாசில்லாதவர்களும் மாத்திரமே அந்த சோதனைக்காலத்தில் நிலைத்துநிற்பார்கள்…நான்கு தூதர்களும் காற்றுகளைப் பிடித்திருக்கிற இந்த நேரமே, நம்முடைய அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் நிச்சயப் படுத்திக்கொள்வதற்கேற்ற, சரியான நேரம்.⋆Mar 514.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 514.2

    “கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.” - ஏசாயா 42:7.Mar 514.3