Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    துன்மார்க்கர் ஒருவரையொருவர் தாக்கி அழிகின்றனர்!, அக்டோபர் 13

    “என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.” - எசேக்கியேல் 38:21.Mar 571.1

    துன்மார்க்கர் மிகவும் வருத்தத்தால் நிறைந்திருக்கிறார்கள். தேவனைத் தாங்களும் சக மனிதர்களும் பாவத்தினால் அலட்சியப்படுத்திவிட்டதற்காக அல்ல, தேவன் வெற்றிபெற்று விட்டாரே என்பதற்காக வருந்தினார்கள். முடிவு இப்படியாகி விட்டதே என்று புலப்புகிறார்கள். தங்களது துன்மார்க்கத்தைக்குறித்து அவர்கள் மனந்திருப்புகிறதில்லை. தாங்கள்மட்டும் வெற்றிபெறக் கூடுமானால், எந்த வழிமுறையையும் விட்டுவைக்க மாட்டார்கள்.Mar 571.2

    ஊழியக்காரரும் மக்களும் தாங்கள் தேவனிடத்தில் சரியான தொடர்பு வைத்திருக்கவில்லை என்கிறதைக் காண்கிறார்கள். எல்லா நியாயத்திற்கும் நீதிக்கும் முதல்வராயிருக்கிற ஆண்டவருக்கு விரோதமாகக் கலகஞ்செய்ததை அவர்கள் காண்கிறார்கள். தெய்வீக நியமங்களை புறம்பே தள்ளிவைத்துவிட்டதினால் ஏற்பட்ட ஆயிரமாயிரம் தீமைகள், பொல்லாப்பு, பிரிவினை, பகை, அக்கிரமம் ஆகியவற்றால் பூமி நிறைந்து, அதி ஒரு யுத்தக்களமாகவும் ஊழல் நிறைந்த தொட்டியாகவும் மாறிவிட்டது. சத்தியத்தை மறுத்து, தீவினையில் களிகூர்ந்தவர்களுக்கு இப்பொழுது தென்படுகிறதெல்லாம் இந்தக் காட்சிதான். என்றைக்குமாக இழந்துவிட்ட நித்தியஜீவனுக்காக, கீழ்ப்படியாதவர்களும் உண்மையில்லாதவர்களும் கொண்ட ஏக்கத்தை, எந்த மொழியினாலும் விவரிக்கமுடியாது. பேச்சுத் திறமை, மற்ற வெவ்வேறு திறமைகளுக்காக இந்த உலகத்தாரால் யார் யாரெல்லாம் கனப்படுத்தப்பட்டிருந்தார்களோ, அவர்கள் அவைகளின் உண்மையான நிலையை சத்திய வெளிச்சத்தில் காண் கிறார்கள். மீறுதலினாலே தாங்கள் எதை இழந்துவிட்டோம் என்பதை உணர்ந்து பார்க்கிறார்கள். யாருடைய விசுவாசத்தை அவர்கள் நிந்தித்துப் பரிகசித்து ஏளனஞ்செய்தார்களோ, அவர்களுடைய பாதங்களிலேயே விழுந்து, ஆண்டவர் அவர்களை நேசித்ததை அறிக்கைசெய்கிறார்கள்.Mar 571.3

    மக்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதைக் காண்கிறார்கள். தங்களை அழிவிற்கு நடத்தினவர்கள் நீங்கள்தான் என்று சொல்லி, ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டுகிறார்கள். அனைவரும் ஒன்றுகூடி தங்கள் கசப்பான கண்டனங்களை ஊழியக்காரர்மேல் குவிக்கிறார்கள். உண்மையற்ற போதகர்கள் சமாதான வார்த்தைகளையே தீர்க்கதரிசனமாக உரைத்துக்கொண்டிருந்தார்கள். தேவனுடைய கற்பனைகளை அலட்சியப்படுத்துவதற்கும், அவைகளை பரிசுத்தமாகக் கைகொள்ளுகிறவர்களை உபத்திரவப்படுத்துவதற்கும் தங்களது நம்பிக்கையற்ற-வேதனை நிறைந்த-நிலையில், இந்தப் போதகர்கள் தாங்கள் செய்த ஏமாற்று வித்தையை இந்த உலகத்திற்கு முன்பாக அறிக்கைசெய்கிறார்கள். பெருங்கூட்டமாகிய மக்கள் வெறிகொண்டவர்களாக: “நாங்கள் இழந்துவிட்டோம்”; “நீங்கள் தான் எங்கள் அழிவுக்குக் காரணம்” என்று கதறி, பொய்யான போதகர்களைத் தாக்கும்படி முனைகிறார்கள். ஒரு காலத்திலே அவர்களை மிகவும் மெச்சிக் கொண்ட அதே நபர்கள், இபொழுது அவர்கள்மேல் பயங்கரமான சாபங்களைச் சொல்லுகிறார்கள். அவர்களை அழிக்கத்தக்கதாக உயரும். தேவனுடைய மக்களை அழிக்கும்படிவந்த அதே பட்டயங்கள், தங்கள் சத்துருக்களை அழிக்க உபயோகப்படுத்தப்படும். எல்லா இடங்களிலும் கலகமும் இரத்தஞ்சிந்துதலுமாயிருக்கும்.⋆Mar 572.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 572.2

    “ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக்காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.” - 2 பேதுரு 3:14.Mar 572.3