Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அர்மெகதோனில் தேவன் குறுக்கிடுகிறார்!, அக்டோபர் 15

    “ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார்” என்று கர்த்தர் சொல்லுகிறார். - எரேமியா 25:31.Mar 575.1

    ஆறாயிரம் ஆண்டுகளாக, இந்தப் பெரிய போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. மனிதர்களை எச்சரித்து, அறிவுறுத்தி, அவர்களைக் காப்பாற்றுவதற்க்காக தேவனுடைய குமாரனும், அவருடைய பரலோக தூதுவர்களும் தீமையின் வல்லமையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்; இப்பொழுது அனைவரும் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டாயிற்று. துன்மார்க்கர் சாத்தானோடு முழுமையாக இணைந்து, தேவனுக்கு விரோதமான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிதிக்கப்பட்டுபோன தமது கற்பனைகளின் அதிகாரத்தை நிலை நாட்டத் தக்கதான வேளை தேவனுக்கு வந்துவிட்டது; இப்பொழுது, போரட்டம் சாத்தானோடு மாத்திரமல்ல, அவனைச்சார்ந்த மனிதர்களோடும் இருக்கிறது. “ஜாதிகளோடு கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; துன்மார்க்கரைப் பட்டயத்திற்க்கு ஒப்புக்கொடுப்பார்.” (எரேமியா 25:31).Mar 575.2

    “செய்யப்படுகிற சகல அறுவறுப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டழுகிற” மனுஷரின் நெற்றிகளில் விடுதலையின் அடையாளம் போடப்பட்டாயிற்று. “முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்த்ரீகளையும், சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள்” என்ற மேற்கூறப்பட்ட கட்டளையானது ஆயுதம் தாங்கிய மனிதர்கள் சென்று வெட்டும்படியாக, எசேக்கியேலுக்கு கொடுக்கப்பட்ட தரிசனத்தில் காட்டப்பட்டுள்ளது: “அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்” (எசேக். 9:1,2-6) என்று எசேக்கியேல் சொல்லுகிறான். மக்களுக்கு ஆவிகளுக்குரிய வழிகாட்டிகளாக தாங்கள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் மத்தியிலே அழிவு ஆரம்பமாகிறது. பொய் காவற்காரன் தான் முதலாவது விழுவான். பரிதாபப்படவும், காப்பாற்றவும் அங்கு எவருமில்லை; எவரையும் விட்டுவிடமாட்டார்கள்; ஆண்களும், பெண்களும், கன்னியரும், குழந்தைகளும் அனைவரும் ஒன்றாக அழிந்துபோகிறார்கள்.Mar 575.3

    “இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்” - ஏசாயா 26:21. அவரவருடைய முரட்டுக்கோபத்தினாலும், ஆண்டவருடைய உக்கிர கோபம் பயங்கரமாக ஊற்றப்படுவதாலும், ஆசாரியர்களும், அதிகாரிகளும், மக்களில் உயர்ந்தோரும், தாழ்ந்தோரும், தனவந்தரும், வறியோரும் ஆகிய துன்மார்க்கமான பூமியின் குடிகள் அனைவரும் ஏகமாய் அழிவார்கள். “அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவங்கி, பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேலே எருவாவார்கள்” - எரேமியா 25:33⋆Mar 576.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 576.2

    “உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால், உன் பிராணன் உனக்கு கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்...” - எரேமியா 39:18. Mar 576.3