Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நீங்களும் ஆயத்தமாயிருங்கள்!, அக்டோபர் 17

    “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுழகுமாரன் வருவார்: ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.” - மத்தேயு 24:44Mar 579.1

    ஒருவேளை, கிறிஸ்து வானத்து மேகங்கள்மீது இன்றே வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது எத்தனை பேர் அவரைச் சந்திக்க ஆயத்தமாயிருப்போம். நாம் இருக்கிற இந்த நிலையிலேயே மறுரூபமாகி பரலோக இராஜ்ஜியத்திற்குப் போவோமானால், அங்கிருக்கிற தேவனுடைய பரிசுத்தவான்களோடு சேர, அந்த இராஜரீகக் குடும்பத்தோடு இணைந்து வாழ, பரலோக இராஜாவுடைய குழந்தைகளோடு சேர்ந்திருக்க, நாம் ஆயத்தத்தோடிருப்போமா? நியாயத்தீர்ப்பிற்காக என்ன ஆயத்தங்களை நீங்கள் செய்திருக்கிறீர்கள்? தேவனோடு சமாதானமாயிருக்கிறீர்களா?... உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்கள், உங்களைச் சுற்றிலுமிருப்பவர்கள், உங்களுடைய அண்டை அயலகத்தார், நீங்கள் தொடர்புகொண்டுள்ள தேவனுடைய கற்பனைகளை கைக்கொள்ளாத மக்கள், ஆகியோருக்கு நீங்கள் உதவிசெய்ய நாடுகிறீர்களா?... வெறுமனே நாங்கள் கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொண்டு, அன்றாட வாழ்க்கையில் அதின் கொள்கைகளை செயல்முறைப்படுத்தாதிருப்பது, ஒரு தகுதியற்ற நிலை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அவருடைய கற்ப்பனைகளை உண்மையாகவே நாம் கைக்கொள்ளுகிறோமா என்பதை தேவன் அறிந்திருக்கிறார். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம், னாம் என்ன சிந்தித்துக்கொண்டிருக்கிறோம், நாம் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம், என்பது அவருக்குத் தெரியும். இராஜாவைச் சந்திக்க நாம் ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோமா? அவர் வானத்து மேகங்கள் மேல் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வரும்போது: “இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்” (ஏசாயா 25:9) என்று நம்மால் சொல்லமுடியுமா? அப்படிச் சொல்லமுடியும் என்கிறவர்களைப் பார்த்து: “மேலே வாருங்கள். உலகத்தில் நீங்கள் என்னிடத்தில் அன்புகூர்ந்தீர்கள்; என் சித்தத்தை நடப்பிப்பதில் விருப்பமாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் பரிசுத்த நகரத்திற்க்குள் பிரவேசித்து, நித்தியஜீவனுக்கான கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று கிறிஸ்து கூறுவார்...Mar 579.2

    நாம் இப்போது இருக்கிறவண்ணமாகவே பரலோகத்தில் அனுமதிக்கப்படுவோமானால், எத்தனை பேரால் நம் தேவனை நோக்கிப்பார்க்கமுடியும்? நம்மில் எத்தனைபேர் கல்யாண வஸ்திரத்தை தரித்திருக்கிறோம்? நம்மில் எத்தனைபேர் கறை திரை மற்றும் இதைப்போன்ற எதுவுமின்று இருக்கிறோம்?...Mar 580.1

    இந்தச் சமயந்த்தான் நம்மைச் சுத்திகரித்து காரியங்களைச் சரிப்படுத்த வேண்டிய நேரம். நம் குணங்களாகிய வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்து வெளிக்கின்ற நேரமும் இதுவே. “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவான் 1:29) என்று யோவான் கூறுகிறார். நமது பாவங்கள் அகற்றப்பட நாம் அனுமதிக்க வேண்டாமா?...Mar 580.2

    சகோதரர்களே, சகோதரிகளே, நித்தியஜீவனுக்கான கிரீடத்தை பெற்றுக்கொள்ளும்படி ஊக்கமாக உழையுங்கள் என்று உங்களை கெஞ்சி மன்றாடுகிறேன். நாம் போராடிக்கொண்டிருக்கிற போராட்டத்திற்கு ஏற்ற, நம்முடைய முயற்ச்சிகளுக்குத் தகுதியான வெகுமதி நமக்கு இருக்கிறது... நாம் ஆடிக்கொண்டிருக்கிற இந்த பந்தயத்திலே, எல்லாருக்கும் பரிசு உண்டு... அதுதான் நித்தியஜீவன் என்னும் ஒரு கிரீடம். எனக்கு அந்தக்கிரீடம் வேண்டும். தேவனுடைய உதவியினால் அதைப் பெற்றுக்கொள்வேன், என்று நான் கருதுகிறேன். இராஜாவை அவரது அழகிலே காணவேண்டும் என்று சத்தியத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக்கொள்ளவேண்டும் என்று எண்ணிகிறேன்.⋆Mar 580.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 580.4

    “...நான் உங்களைக்கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டிவேன்; உங்களைப் பிடுங்கமாட்டேன்...” - எரேமியா 42:10.Mar 580.5