Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    குடும்பங்கள் மீண்டும் இணைகின்றன!, அக்டோபர் 27

    “நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்;... அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பி வருவார்கள். உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார். - எரேமியா 31:16,17.Mar 599.1

    கிறிஸ்து மேகங்கள்மீது மிகுந்த மகிமையோடு வருகிறார். எண்ணிலண்டங்காத திரள்கூட்டமான பிரகாசமான தூதர்கள் அவரோடு கூட வருவார்கள். மரித்தவர்களை உயிரோடெழுப்பவும், உயிரோடிருக்கிற பரிசுத்தவாங்களை மகிமையின்மேல் மகிமையடையச்செய்யவும் வருவார். அவரை நேசித்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டவர்களைக் கனம்பண்ணி, தம்மோடு சேர்த்துக்கொள்ளத்தக்கதாக வருவார். அவர்களையும் அவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களையும் அவர் மறக்கவில்லை. குடும்பச்சங்கிலிகள் மீண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.Mar 599.2

    பயபக்த்தியான தாய்மார்களுக்கு இந்த உலகம் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறது என்பதை தேவனுடைய நாள் வெளிப்படுத்தும்.Mar 599.3

    நியாயசங்கம் உட்கார்ந்து, புத்தகங்கள் திறக்கப்பட்டு, “நல்லது, உண்மையும் உத்தமமுள்ள ஊழியக்காரனே” என்று மாபெரும் நியாயாதிபதியாகிய இயேசு தீர்ப்பை அழுத்தந்திருத்தமாக வழங்கும்போது, அழியாத, மகிமை பொருந்திய கிரீடம் ஜெயம் பெற்றவருடைய சிரசின்மீது வைக்கப்படுகிறது. அவர்களில் அநேகர் தங்கள் கிரீடங்களைக்கழற்றி, உயர்த்திக்காட்டி: “நான் இப்பொழுதிருக்கிற நிலைக்கு ஆண்டவருடைய கிருபையினால் என்னைக் கொண்டுவந்தவர்கள் எனது அன்னையே; அவர்களுடைய ஆலோசனைகளும், ஜெபங்களுமே இந்த நித்திய இரட்சிப்பை நான் பெற்றுக்கொள்ளக் காரணமாக இருந்தது” என்று கூடியிருக்கும் அண்டசராசரத்தின் மகா சபைக்கு முன்பாக சாட்சசி கூறுவார்கள்.Mar 599.4

    பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கிரீடம், அங்கி, சுரமண்டலம் இவைகளைக் கண்டு, விவரிக்கமுடியாத அளவிற்கு மகிழ்ச்சி அடைகிறார்கள். பயமும் எதிர்பார்ப்பும் நிறைந்த நாட்க்கள் முடிவிற்கு வந்தன. கண்ணீரோடும் ஜெபத்தோடும் விதைக்கப்பட்ட விதைகள் வீணாயின எனக்கூடத் தோன்றலாம்; ஆனால், முடிவிலே அது மகிழ்ச்சியோடு அறுவடை செய்யப்பட்டது. அவர்களது குழந்தைகள் மீட்க்கப்பட்டுவிட்டார்கள்.Mar 600.1

    ஆ! அதிசயமான மீட்ப்பு. நீண்டகாலம் பேசப்பட்ட-நீண்ட காலம் நம்பப்பட்ட-ஆவலோடு எதிர்பார்த்து சிந்தித்திருந்த-ஆனால் ஒருபோதும் முற்றிலுமாக விளங்கிக்கொள்ளப்படாததுதான்-மீட்பு-என்ன ஆச்சர்யமான மீட்பு!Mar 600.2

    கிறிஸ்து தம்மைஉத்தமமாகப் பின்பற்றியவர்களுக்கு அனுதின தோழனாகவும், நன்றாகத் தெரிந்திருந்த நண்பனாகவும் இதுவரை இருந்திருக்கிறார். மிகவும் நெருக்கமான தொடர்புகொண்டு அவரோடு வாழ்ந்திருக்கிறார்கள். தேவனோடு நிலையான ஆன்மீக உறவு கொண்டவர்களாயிருக்கிறார்கள். அவர்கள்மீது ஆண்டவருடைய மகிமை உதித்திருக்கிறது. கிறிஸ்த்துவின் முகத்திலிருந்து, தேவனுடைய மகிமையை அறிந்துகொள்ளுகிற அறிவின் ஒளி அவர்களிடத்தில் பிரதிபலித்திருந்தது; இராஜாவை அவருடைய மேன்மையின் மகிமையிலும், பிரகாசத்திலும் பிரகாசத்தின் மங்காத ஒளிக்கதிர்களிலும் கண்டு அவர்கள் களிகூருகிறார்கள். பரலோகத்துடன் இணைவதற்க்கு அவர்கள் ஆயத்தப்பட்டிருக்கிறார்கள்; ஏனெனில், அவர்கள் உள்ளத்திலேயே பரலோகம் இருக்கிறது.⋆Mar 600.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 600.4

    “அந்நாளிலே, அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்...” - சகரியா 2:11.Mar 600.5