Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    விவரிக்கமுடியாத மகிழ்ச்சி!, நவம்பர் 4

    “அவர் (இயேசு) தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தி பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச்சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” - எபிரேயர் 12:2.Mar 615.1

    “என்னுடைய சந்தோஷம் உங்களில் னிலைத்திருக்கும் படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்” (யோவான் 15:11) என்று இயேசு கூறினார்.Mar 615.2

    தம்முடைய ஊழியத்தின் பலன் தம்முன் இருக்கிறதை கிறிஸ்து எப்பொழுதும் பார்த்தார். அவர் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை, கடினமான வேலை, தியாகம் இவைகளாலேயே நிறைந்திருந்தது என்றாலும், இவைகளெல்லாம் வீணாகப் போகாது என்கிற எண்ணத்தினால் எப்பொழுதும் உற்சாகத்தோடிருந்தார். தமது ஜீவனை மனிதர்களுக்காகக் கொடுப்பதின்மூலம், தேவனுடைய சாயலை மனிதனில் உண்டுபண்ண அவரால் முடிகிறது. நம்மைப் புழுதியிலிருந்து எடுத்து, தமது குணத்தின்படியே நம்முடைய குணங்களையும் மாற்றி, தமது சிந்த மகிமையினால் அதை அலங்கரிக்க அவரால் முடிகிறது.Mar 615.3

    கிறிஸ்து தமது ஆத்தும வருத்டத்தின் பலனைக்கண்டு திருப்தியடைந்தார். நித்தியத்தின் விசாலத்தை அவர் பார்த்தார்; பார்த்த பொழுது, தமது தாழ்மையினால் மன்னிப்பையும் நித்தியஜீவனையும் பெற்றுக்கொண்டவர்கள் அதில் அகிழ்ந்திருப்பதையும் கண்டார். அவர்களுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்; அவர்களுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுங்கப்பட்டார். அவர்களுக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் அவர்கள் குணமாக்கப்படுகிறார்கள். மீட்க்கப்பட்டோரின் மகிழ்ச்சி ஆரவாரத்தை அவர்கள் கேட்டார்கள். மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருன் பாட்டையும் அவர்கள் பாடுகிறதை அவர் கேட்டார். அவர் எடுக்கவேண்டியிருந்த இரத்த ஸ்நானம் முதலாவது அவர் எடுக்கவேண்டி யதாக இருந்தபோதிலும், குற்றமற்ற அவருடைய ஆத்துமாவின்மேல் உலகத்தின் பாரம் இறங்கவேண்டியிருந்தபோதிலும், சொல்லொண்ணா சாபம் அவர்மேல் நிழலிட்டபோதிலும், தமக்கு முன்வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவர் அவமானத்தை எண்ணாமல் சிலுவையைச் சகித்தார்.Mar 615.4

    இந்த மகிழ்ச்சியை அவரைப் பின்பற்றுகிற அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். என்னதான் மகா மேன்மையான பிரதிபலன் இந்த உலகத்திற்குப் பின்பு நமக்கிருக்கின்றபோதிலும், இங்கேயேதானே விசுவாசத்தினாலே இரட்சகருடைய சந்தோஷத்திற்க்குள் நாம் பிரவேசிக்க வேண்டும்.Mar 616.1

    தம்மை ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு, தேவனுடைய பிள்ளைகளாகும் வல்லமையை அவர் கொடுக்கிறார்; அப்பொழுது, நித்தியத்திற்கும் தம்மோடு தங்கியிருக்கத்தக்கதாக ஆண்டவர் கடைசியில் அவர்களை ஏற்றுக்கொள்ளுவார். இந்த வாழ்க்கையில் அவர்கள் ஆண்டவருக்கு உண்மையாயிருப்பர்களானால், கடைசியிலே, “அவரை தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்கள் நெற்றிகளில் இருக்கும்” - வெளிப்படுத்தல் 22:4. ஆண்டவரைக் காண்கிறதைக் காட்டிலும் வேறு என்ன சந்தோஷம் பரலோகத்தில் நமக்கு இருக்கமுடியும்? கிறிஸ்துவின் கிருபையினாலே மீட்கப்பட்டவர்கள், தேவனுடைய முகத்தைப்பார்த்து, அவரைத் தங்களுடைய பிதாவென்று அறிந்துகொள்ளுகிறதைக் காட்டிலும் வேறு என்ன பெரும் மகிழ்ச்சி பாவிகளுக்கு அங்கே கிடைக்கும்? ⋆Mar 616.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 616.3

    “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.” - எபிரேயர் 10:36.Mar 616.4