Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரலோகத்தை இலவசமாக பெற்றுக்கொண்டோம்!, நவம்பர் 6

    “அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். அவர் தமது ஆத்தும வருத்தத்ததின் பலனைக்கண்டு திருப்த்தியாவார்...” - ஏசாயா 53:10,11.Mar 619.1

    ஆண்டவருடைய அன்பு அளவில்லாதது; அது ஒப்பில்லாதது; அது முடிவில்லாதது... கிறிஸ்துவுடைய மேன்மையையும் மகிமையையும் நாம் தியானஞ்செய்யும்பொழுது, விழுந்துபோன உலகத்தை மீட்பதற்காக, கல்வாரிச்சிலுவைமீது செய்யப்பட்ட தியாகத்தைத் தூண்டிய அவருடைய அன்பு எவ்வளவு பெரியது என்பதைக் காணலாம். எந்த ஆய்வுப் பொருளானது, நித்திய காலங்கள் நெடுகிலும் பரிசுத்தவாங்களை அதிசயத்தினாலும் வியப்பினாலும் நிறைக்கும். அப்படியானால் நாம் ஏன் அதை இந்த உலகத்திலேயே தியானிக்கக்கூடாது?...Mar 619.2

    ஆ! அது தேவத்துவத்தின் இரகசியம்... தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்! அதைப் புரிந்துகொள்ள நாம் முயற்சிக்கும்பொழுது, அதன் இரகசியம் மேலும் அதிகரிக்கிறது. அது புரிந்துகொள்ளக் கூடாததுதான்; என்றாலும், இயேசுவைக்குறித்தும், ஒப்பிடமுடியாத அவருடைய அன்பைக்குறித்தும் மிகக் குறைவாகவே அறிந்துகொள்ளக்கிடைக்கிற சந்தர்ப்பங்களையுங்கூட, உலகத்தையும் உலகக் காரியங்களையும் முன்னிருந்த, மக்கள் கெடுத்துக்கொள்ளுகிரார்கள். கல்வாரியை-தேவனுக்கு அன்பான குமாரனுடைய அன்பு வெளிப்பட்ட-கல்வாரியை, தியானிக்க விருப்பமில்லாமலிருக்கிற நமக்கு, எப்படி சாதாரண உலகக் காரியங்களைக்குறித்து உற்சாகமாயிருக்கமுடிகிறது?...Mar 619.3

    பரதேசிகளும் நன்றியறியாதவர்களும், குற்றவாளிகளுமாயிருக்கிறவர்களை தகப்பனுடைய வீட்டிற்க்குக் கொண்டுசேர்க்கும்படிக்கே அத்தனை வேதனைகளையும் அவமானத்தையும் அவர் சகித்தார். ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் அந்த வீட்டை என்னால் இழக்க முடியாது. தேவனுடைய இராஜ்ஜியத்திலே நான் சேர்க்கப்படுவேனேயாகில், இரட்சிப்பின் திட்டத்தை இன்னும் ஆழமாகத் தொடர்ந்து ஆராய்ந்து பார்ப்பேன். மீட்க்கப்பட்ட பரிசுத்தவான்களனைவரும் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு, பிதாவினுடைய அன்பையும் குமாரனுடைய அன்பையும் அறிந்து புகழுவார்கள். அவர்களுடைய நித்தியமான நாவுகளிலிருந்து துதியின் கீதங்கள் எழும்பும்; அவர் நம்மை நேசித்தார்; தமது ஜீவனை நமக்காகக் கொடுத்தார்; மகிமையடைந்த சரீரங்களோடு, விவரிக்கப்பட்ட தகுதிகளோடு, சுத்தமாக்கப்பட்ட இதயங்களோடு, கறையற்ற உதடுகளைக்கொண்டு, மீட்பின் உன்னத அன்பை நாம் பாடுவோம். பரலோகத்திலே வேதனைப்படுகிறவர்கள் இருக்கமாட்டார்கள். நித்தியமான காரியங்களைக்குறித்து உபதேசிக்கபடவேண்டிய ஐயவாதிகள் (நாத்திகர்கள்) இருக்கமாட்டார்கள். பிடுங்கி எறியவேண்டிய தவறான எண்ணங்கள் இருக்காது; மாறாக, அறிவைக் கொடுக்கிற அன்பை எல்லோரும் பகிர்ந்துகொள்ளுகிறவர்களாகவே இருப்பார்கள். ஆ, அது எப்படிப்பட்ட இளைப்பாறுதல்... ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்! அங்கே தேவனுடைய மக்களுக்கு ஓர் இளைப்பறுதல் உண்டு. அங்கே இயேசு, மீட்கப்பட்டவர்களை புல்லுள்ள இடங்களுக்கு நடத்திச்செல்லுவார். தேவனுடைய நகரத்தை மகிழ்விக்கிற ஜீவதண்ணீர்களண்டையில் அவர்களைக் கொண்டுசெல்லுவார்; அப்பொழுது, “நான் எங்கே இருக்கிறேனோ, அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன்” என்று கிறிஸ்து தமது பிதாவிடத்தில் ஜெபித்த விண்ணப்பத்திற்க்குப் பதிலளிக்கப்படும். ⋆Mar 619.4

    வாக்குத்தத்த வசனம்: Mar 620.1

    “...உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்...” - ஆகாய் 2:23.Mar 620.2