Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வாழ்வளிக்கும் கனி!, நவம்பர் 13

    “நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.” - வெளிப்படுத்தல் 22:2.Mar 633.1

    ஏதேன் தோட்டத்திலிருந்த ஜீவவிருட்சத்தின் கனி, மனித சக்திக்கு அப்பாற்பட்ட குணாதிசயத்தைக்கொண்டிருந்தது. அதைப் புசித்தால் என்றென்றும் ஜீவிக்கலாம்; அதின் கனி மரணத்தை முறிக்கும் மருந்தாகும்...!Mar 633.2

    பாவம் பிரவேசித்தபின்பு, பரலோகத் தோட்டக்காரர், ஜீவவிருட்சத்தை பரலோகத்திலே நாட்டிவைத்தார்.Mar 633.3

    தேவனை நேசித்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிற மீட்கப்பட்ட பரிசுத்தவான்கள் நகரத்தின் வாசல்கள் வழியாகப் பிரவேசித்து, ஜீவ விருட்சத்தின்மேல் அதிகாரம் உடையவர்களாக இருப்பார்கள். நம் முதல் பெற்றோர்கள் அவர்களது விழுகைக்கு முன்னர் சுதந்தரமாகப் புசித்ததுபோன்று, அவர்கள் அதைச் சுதந்தரமாகப் புசிப்பார்கள். பரந்து விரிந்த அழியாமையுள்ள அம்மரத்தின் இலைகள், மக்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். அவ்விலைகள் அவர்களை ஆரோக்கியமாக வைத்துப்பதினால்; வியாதி, வருத்தம், மரணம் போன்றவைகளையெல்லாம் அவர்கள் மறுபடியும் அனுபவிக்கமாட்டார்கள்; ஏனெனில், ஜீவ விருட்சத்தின் இலைகள் அவர்களைக் குணமாக்கிவிட்டது. ஆண்டவருடைய கற்பனைகளை மீறினதினாலே, நம் முதல் பெற்றோர் இழந்துபோன அதிகாரத்தை, வருத்தம், கடும் உழைப்பு, வேதனை, உபத்திரவம் இவைகளுக்குட்பட்டிருந்து, சாபத்திற்கடியில் வருத்தத்தோடிருந்த மீட்கப்பட்டவர்கள், மீண்டும் பெற்றுக்கொண்டு, அதின்கனியைப் புசிக்கும்படி, ஜீவ விருட்சத்தைச் சுற்றிலும் வந்து கூடி நிற்கும்பொழுது, இயேசு தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக்கண்டு திருப்தியாவார். இனிமேல் அந்த அதிகாரம் அவர்களைவிட்டு ஒருபோதும் நீங்காது; ஏனெனில், பாவஞ் செய்யும்படி அவர்களைச் சோதித்த பிசாசானவன், இரண்டாம் மரணத்தினாலே அழிக்கப்பட்டுவிட்டான். Mar 633.4

    ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிப்பதற்கு இருந்த ஒரே நிபந்தனை, தேவனுடைய அனைத்து கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும் என்பதே; கீழ்படியாமையினால்தான் ஆதாம் விழுந்துபோனான்...Mar 634.1

    இயேசு கிரிஸ்துவின்மூலம் கீழ்ப்படியும்பொழுது, அது மனுஷனுக்கு பரிபூரணமான குணங்களைக் கொடுத்து, ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாக்குகிறது. மீண்டும் ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிப்பதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது: “ஜீவ விருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” (வெளி.22:14).Mar 634.2

    நீண்ட காலமாக இழந்துபோன-ஏதேனிலுள்ள ஜீவவிருட்சம் மீண்டும் கிடைக்கப்பெற்று, மானிட இனத்தின் தொடக்கக்கால மகிமையின் முழுவளர்ச்சிக்கும் மீட்கப்பட்டவர்கள் “வளருவார்கள்.” நெடுநாட்களாகத் தங்கியிருந்த பாவத்தின் சாபத்தின் சுவடுகள் அகற்றப்படும். கிறிஸ்துவின் உண்மையான பிள்ளைகள் “தேவனாகிய ஆண்டவருடைய அழகிலே” காணப்பட்டு, மனதிலும், ஆத்துமாவிலும், சரீரத்திலும் அவருடைய பரிபூரண சாயலைப் பிரதிபலிப்பார்கள். நீண்ட காலமாக நம்பப்பட்ட-மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து மனதிலே ஆழ்ந்து சிந்தித்திருந்த, ஆனால் முழுமையாக ஒருபோதும் முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடாத மீட்பு-ஆ! எத்தனை அதிசயமான மீட்பு!⋆Mar 634.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 634.4

    “ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல் வளருவீர்கள்.” - மல்கியா 4:2.Mar 634.5