Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இலட்சத்து நாலாயிரம் பேர்! [1,44,000] , நவம்பர் 16

    “...நான் பார்த்தபோது, இதோ, சியோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பது நாலாயிரம்பேரையும் நிற்கக் கண்டேன். ” - வெளிப்படுத்தல் 14:1.Mar 639.1

    சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கும், அந்த அக்கினி கலந்த தோற்றமுடைய கண்ணாடிக் கடலருகே, தேவனுடைய மகிமையினால் பிரகாசித்துக்கொண்டிருக்கும் அந்தக் கண்ணாடி கடலருகே மிருகத்திற்கும், அதின் சொரூபத்திற்கும், அதின் முத்திரைக்கும், அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்ட கூட்டத்தார் கூடுகிறார்கள். ஆட்டுக்குட்டியானவர் சீயோன் மலையின்மேல் நின்றிருக்க, தேவ சுரமண்டலங்களைத் தங்கள் கைகளில் பிடித்தவர்களாக மனிதரிலிருந்து மீட்கப்பட்ட 1,44,000 பெரும் நிற்கிறார்கள். பெருவெள்ள இரைச்சல் போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், சுரமண்டலக்காரர் தங்கள் “சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலவும் ஓசை கேட்டது.” 1,44,000 பேர் தவிர வேறொருவரும் முன்பு பாடினார்கள். அது மோசேயின் பாட்டும், ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டுமாகும்; அதுவே அவர்களுடைய ஒரு விடுதலையின் பாட்டுமாகும்.Mar 639.2

    1,44,000 பேர் மாத்திரம் அந்தப் பாட்டைக் கற்றுக்கொள்ள முடியும்; ஏனெனில், அது அவர்களுடைய அனுபவத்தின் பாடலாக இருக்கிறது. வேறெந்தக் கூட்டமும் என்றுமே பெற்றிராத அனுபவம் அது. “ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே.” இவர்கள் ஜீவனுள்ளோரிலிருந்து மறுரூபமாக்கப்பட்டவர்கள். இவர்கள், தேவனுக்கும் “ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்”-- வெளிப்படுத்தல் 15:2,3;14:1-5. “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்” பல்வேறு மக்கள் கூட்டம் உண்டானதுமுதல் ஒருபோதும் உண்டாயிராத இக்கட்டுக் காலத்தினூடாக கடந்துவந்தவர்கள். யாக்கோபுடைய இக்கட்டுக் காலத்தின் வேதனைகளை சகித்திருக்கிறார்கள்; தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் கடைசியாக பூமியின்மேல் ஊற்றப்பட்ட காலத்தில், பரிந்துபேசுகிறவர் இல்லாமல் இவர்கள் நின்றிருக்கிறார்கள். “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்த” தால் விடுதலையாக்கப்பட்டிருக்கிறார்கள். “இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை...தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.” ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள். சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.Mar 639.3

    இந்த பூமி பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் வீணாகப்போனதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். சூரியன் மனிதர்களை மிகுந்த வெப்பத்தினால் தகிக்க அதிகாரம் பெற்றதைக் கண்டிருக்கிறார்கள். அவர்கள் தாமே பசியையும், தாகத்தையும் துன்பத்தையும் சகித்திருக்கிறார்கள். “இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை.” (வெளி. 7:14-16).⋆Mar 640.1

    வாக்குத்தத்த வசனம்: Mar 640.2

    “என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன். நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.” - யோவான் 14:14,15. Mar 640.3