Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அனைத்துச் செயல்களும் நியாயத்தீர்ப்படைவதற்கு கொண்டுவரப்படும்!, நவம்பர் 28

    “ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொருகாரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.” - பிரசங்கி 12:14.Mar 663.1

    ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் காரியத்திலும் ஒரு நடை முறையானது செயற்படுத்தப்பட்டுவருகிறது. இக்காரியமானது கலைஞனின் பளபளப்பான அந்தத் தகட்டிற்கு முகக்கூறுகளை இடமாற்றஞ்செய்யும் பணியைவிட, மிகவும் அதிசயமானது. புகைப்படம் எடுப்பவரின் கலைத்திறனானது அழிந்துபோகக்கூடிய ஒரு சாதனத்திலே வெறுமனே சாயலைப் பதிவுசெய்கிறது. ஆனால், பரலோகத்திலிருக்கும் ஒவ்வொருவருடைய வாழ்வின் வரலாற்றிலும் குணமானது உண்மையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குறிப்புகள் எவ்வளவு இருண்டு காணப்பட்டாலும், மீட்பின் இரத்தத்தைத்தவிர, வேறோன்றினாலும் ஒருபோதும் அழிக்கப்படமாட்டாது.Mar 663.2

    படம் எடுப்பவன் எப்படி மனித உருவங்களை பாதரச ஆவியிலே படம் எடுக்கிறானோ அதேபோன்ற, தேவனுடைய தூதர்கள் மானிடக் கூறுகளுக்கு ஒத்ததாக துல்லியமான விதத்தில் குணத்தைப் படமெடுக்கிறார்கள். அந்தக் குறிப்புகளிலிருந்து நாம் நியாயன்தீர்க்கப்படுகிறோம்.Mar 663.3

    நியாயசங்கம் உட்கார்ந்து, புத்தகங்கள் திறக்கப்ப்படும்பொழுது, ஆச்சரியமான அநேகக் காரியங்கள் வெளியரங்கமாகும். மனிதக் கண்களுக்கும், அவர்களுடைய நியாயத்தீர்ப்புகளுக்கும் தெரிகிறதைப்போல அப்பொழுது மனிதர்கள் காணப்படமாட்டார்கள். அவர்களுடைய இரகசியப் பாவங்கள் அனைவருக்கும் முன்பாகவும் திறந்துவைக்கப்படும். இதயத்தின் இருண்ட அறைகளிலே மறைத்துவைக்கப்பட்டிருந்த நோக்கங்களும் எண்ணங்களும் வெளிப்படுத்தப்படும்.Mar 663.4

    அனைத்தும் ஒரு உண்மையான வாழ்க்கைச் சித்திரமாகக் காணப்படும்.Mar 664.1

    அந்த பக்திவிநயமான பயங்கரமான வேளையிலே, கணவனின் நம்பிக்கைக்கேடான வாழ்க்கை மனைவிக்கும், மனைவி வாழ்ந்த பொய்யான வாழ்க்கை கணவனுக்கும் காட்டப்படும். தங்கள் பிள்ளைகளுடைய உண்மையான குணம் என்ன என்பதை முதன் முதலாகப் பெற்றோர்களும், பெற்றோர்களுடைய வாழ்க்கையிலிருந்த குறைகளையும் தவறுகளையும் பிள்ளைகளும் காண்பார்கள். பொய்யான மாறுபாடுகளின்மூலமாக, அயலகத்தாரின் பொருள்களை கொள்ளையடித்தவர்களும் தப்பவில்லை. அனைத்து அநியாயமான நடவடிக்கைகளும், அனைத்துப் பொய்யான கணக்குகளும் பற்றி தேவன் தமது புத்தகங்களிலே, மிகச் சரியான குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார்.Mar 664.2

    அந்த நாளிலே (நிறுக்கப்பட்டு) குறைவாகக் காணப்படுகின்ற குற்றவாளியான நபரைக்குறித்த கண்டனத்தைப்பற்றிய நினைவுகள் உண்மையாகவும் தெளிவாகவுமிருக்கும். கடந்த காலத்தின் நினைவுகளையும் செயல்களையும் அவர்கள் மனம் நினைவுகூரும். அகல்பரப்புக் காட்சியில் வருகின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியைப்போல, அவர்களது வாழ்க்கை முழுவதும் மீண்டும் அவர்களுக்கு முன்பாக காட்டப்படும்.⋆Mar 664.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 664.4

    “உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.” - ஏசாயா 3:10.Mar 664.5