Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    நியாயத்தீர்ப்பில் காணப்பட்ட வரலாற்றுப் பின்னணியை உடைய நபர்கள்!, டிசம்பர் 2

    “முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று. நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்;... கர்த்தரிடத்தில் மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.” - ஏசாயா 45:23,24.Mar 671.1

    மீட்கப்பட்ட கூட்டத்தின் மத்தியில் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள், வெற்றி நாயகனான பவுல், துடிப்பான பேதுரு, நேசம் பாராட்டிய அன்புள்ள யோவான், மெய்வி சுவாசங்கொண்ட அவர்களின் சகோதரர்கள் மற்றும் அவர்களோடு திரள்கூட்டமாகிய இரத்த சாட்சிகளும் காணப்பட்டனர். சுவர்களுக்கு வெளியே, தீட்டும், அசுத்தமும், அருவருப்புகளுமுடனே, மீட்கப்பட்ட மக்களை துன்புறுத்திய-சிறைப்படுத்திய-கொன்றுகுவித்தவர்கள் இருந்தனர். கிறிஸ்தவர்களைக் கொடுமையாக சித்ரவதைசெய்து, அவர்களது கடும் வேதனையைக்கண்டு சாத்தானைப்போன்று மகிழ்ச்சியடைந்த-தீமைக்கும் கொடூரத்திற்க்கும் மொத்த உருவமான நீரோ மன்னன், தான் ஒரு காலத்தில் துன்புறுத்திய மக்கள் மகிழ்ச்சியோடு காணப்பட்டிருப்பதைப் பார்த்தான். தனது சொந்த கிரியைகளின் பலனைப் பார்க்கத்தக்கதாக, அவன் தாயும் அங்கிருந்தாள். தன் தீய குனங்கள் எப்படி தன் மகனைச் சென்றடைந்து, தன் செல்வாக்கும், உணர்ச்சிகளும் முன்மாதிரியும் அவனை எவ்வாறு தீயவழிப்படுத்தியது என்றும், அதன் விளைவு உலகையே நடுங்கவைத்த, அவளது கொடுஞ்செயல்கள் என்பதையும் கண்டாள்.Mar 671.2

    தன் அணுகுமுறையால், இராஜ்யங்களை நடுங்கவைத்த பெருமைமிக்க-பேராசைகொண்ட-நெப்போலியனும் அங்கிருந்தான்.Mar 672.1

    தங்களை கிறிஸ்துவின் தூதுவர்கள் என்று சொல்லிக்கொண்டு, அவரது பிள்ளைகளின் மனசாட்சியைக் கட்டுப்படுத்த, சித்திரவதைக் கருவிகளையும், பாதாளச் சிறையையும், தீக்கம்பங்களையும் பயன்படுத்திய பாப்புமார்க்க போதகர்களும், ஊழியர்களும் அங்கிருந்தனர். தேவனுக்கும் மேலாகத் தன்னை உயர்த்தி, உன்னதமானவரின் கற்பனைகளை மாற்றிய பெருமையான பாப்புகளும் அங்கிருந்தனர். சபையின் பிதாக்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள், தேவனிடம் தங்கள் கணக்கை ஒப்புவிக்கவேண்டும். அதிலிருந்து அவர்கள் தப்பவேமுடியாது. எல்லாம் அறிந்த தேவன், தன் கற்பனைகளின்மேல் வைராக்கியமாக உள்ளார் என்றும், குற்றவாளியை குற்றமற்றவனாக விடார் என்பதையும், அவர்கள் மிகத் தாமதமாக உணர்ந்துகொண்டனர். தனக்காகத் துன்பப்படும் மக்களோடு சேர்த்து, கிறிஸ்து தன்னையும் வைத்துப்பார்க்கிறார் என்பதையும், “மிகவும் சிறியவரான இவர்களிலே ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” (மத்தேயு 25:40) என்ற அவரது சொந்த வார்த்தையின் உண்மையான பொருளையும் அவர்கள் தற்போது அறிந்துகொண்டார்கள்.Mar 672.2

    துன்மார்க்க, உலகம் முழுவதும், தேவனுடைய நியாய ஸ்தலத்தில், பரலோக அரசாங்கத்திற்க்கு விரோதமாகச் செயல்பட்ட மிகவும் பயங்கரமான குற்றத்திற்காக, தாங்களே குற்றவாளிகளாக நிற்கின்றனர். அவர்களுக்காகப் பரிந்துபேச ஒருவருமில்லை; அவர்களுக்குச் சாக்குபோக்கு சொல்ல ஒரு காரணமும் இல்லை; நித்திய மரணமாகிய தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வழங்கப்பட்டது.⋆Mar 672.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 672.4

    “கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலங்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.” - சங்கீதம் 29:11.Mar 672.5