Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    துன்மார்க்கர் தேவனுடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்!, டிசம்பர் 3

    “...நாமெல்லாம் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்க்கு முன்பாக நிற்போமே. அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கை பண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்தர் சொல்லுகிறார்” என்று எழுதியிருக்கிறது. - ரோமர் 14:10,11.Mar 673.1

    துன்மர்க்கர் மயக்க நிலைக்கு ஆட்பட்டவர்கள்போன்று, தேவகுமாரன் முடிசூட்டப்படுவதை நோக்கிப் பார்த்தனர். தாங்கள் வெறுத்து ஒதுக்கி மீறிப்போட்ட கற்பனைகளாகிய தேவ பிரமாணம், அவர் திருக்கரங்களில் இருப்பதைக் கண்டனர். மீட்கப்பட்டவர்கள் ஆச்சர்யத்தாலும், மகிழ்ச்சியாலும் ஆர்ப்பரிப்போடு போற்றுவதைக் கண்ணால் கண்டனர். அந்த துதியின் தொனியை நகரத்திற்க்குப் புறம்பே இருந்த திரளான கூட்டத்தார் கேட்டபொழுது, “தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள், பரிசுத்தவான்களின் இராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும், சத்தியமுமானவைகள்” (வெளி. 15:3) என்று கூறியவர்களாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, ஜீவனுக்கு அதிபரை அவர்கள் தொழுதுகொள்கிறார்கள்.Mar 673.2

    கிறிஸ்துவின் மாட்சிமையும் மகிமையும் சாத்தான் கண்டு, செய்வதாறியாது திகைத்து நின்றவன்போல் காணப்படுகிறான். ஒரு காலத்தில் பாதுகாப்பிற்க்கான கேரூபினாக இருந்ததையும், எந்த இடத்திலிருந்து அவன் விழுந்துவிட்டான் என்பதையும் சாத்தான் எண்ணிப்பார்க்கிறான். ஒரு பிரகாசிக்கின்ற ஒளியின் தூதனாக இருந்த “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே!” நீ எப்படி மாறிவிட்டாய்! எத்தகைய இழிநிலையை அடைந்துவிட்டாய்! எந்த ஒரு மன்றத்தில் முன்னொரு காலத்தில் கனம் பெற்றிருந்தானோ, அதிலிருந்து என்றென்றைக்குமாக தள்ளப்பட்டுவிட்டான்! அந்த இடத்தில்-பிதாவிற்கு அருகில்-அவர் மகிமையை மறைத்துக்கொண்டு, வேறொரு தூதன் இருப்பதைக் காண்கிறான்! கம்பீரமும் மகத்துவமுமான ஒரு தூதன் கிறிஸ்துவின் சிரசில் கிரீடம் அணிவிப்பதைக்கண்டு, இந்த பாக்கியமான உன்னத நிலை தனக்கு உரியதாக அல்லவா இருந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்தான்.Mar 673.3

    அவனது முந்தைய-பாவமறியாத-பரிசுத்த இருப்பிடத்தைப் பற்றிய நினைவலைகள் அவனுள் எழுந்தன... தான் பாடுபட்டு தற்பொழுது சம்பாதித்துவைத்துள்ள தன் இராஜ்யத்தை அவன் பார்த்தபொழுது, அதில் அழிவையும் தோல்வியையும் மாத்திரமே காண்கிறான்.Mar 674.1

    தேவனுக்கு விரோதமான கலகத்தை இறுதியில் தோற்கடித்து, சாத்தானின் குணாதிசயங்களையும் அவன் வரலாற்றையும் வெளிப்படுத்தும் வேளை இப்பொழுது வந்திருக்கிறது. கிறிஸ்துவை சிங்காசனத்திலிருந்து தள்ளி, அவரது பிள்ளைகளை அழித்து, தேவனுடைய நகரத்தைக் கைப்பற்ற விளையும் சாத்தானின் கடைசி முயற்சியால், மாபெரும் வஞ்சகனாக அவனது முகமூடி முற்றிலுமாகக் கிழிக்கப்பட்டது. அவனது சகாக்கள் அவனது நோக்கத்தின் முழுத் தோல்வியையும் உணர்ந்தனர்... சாத்தான் அண்டசராசரங்களின் வெறுப்பிற்கு ஆளானான்.Mar 674.2

    தேவனுக்கு விரோதமான தனது போராட்டம், தன்னை பரலோகத்திற்குத் தகுதியற்றவனாகிவிட்டதை சாத்தான் காண்கிறான். தேவனுக்கு எதிராக யுத்தம்பண்ண தனது சக்தியனைத்தையும் பயன்படுத்தியிருந்தான். பரலோகத்தின் தூய்மை, சமாதானம், ஒழுங்கு ஆகியவை அவனுக்கு மிகுந்த சித்ரவதை கொடுக்கக்கூடியதாக அமைந்திருக்கும். தேவனின் இரக்கம் மற்றும் நீதிக்கு விரோதமான அவனது குற்றச்காட்டுகள் இப்பொழுது அடங்கிப்போயின. யேகோவாவின்மீது அவன் சாட்ட நினைத்த நிந்தனைகள் முற்றிலுமாக அவன் மீதே திரும்பின. சாத்தான் வேறு வழியின்றி குனிந்து-பணிந்து, தனக்கு வழங்கப்பட்ட நியாயத்தீர்ப்பானது நீதியானது என்பதை அறிக்கயிடுகிறான்.⋆Mar 674.3

    வாக்குத்தத்த வசனம்:Mar 674.4

    “...நீதிமாங்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” - மத்தேயு 13:43.Mar 674.5