Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனின் பண்பு மெய்ப்பித்துக் காட்டப்பட்டது!, டிசம்பர் 4

    “...சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சர்யமுமானவைகள்; பரிசுத்தவாங்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.” - வெளிப்படுத்தள் 15:3.Mar 675.1

    இந்த நீண்ட-நெடிய போராட்டத்தில் சத்தியம், அசத்தியம் குறித்த ஒவ்வொரு கேள்விக்கும் இப்பொழுது கொடுக்கப்பட்ட பதில் தெளிவாகிவிடவே, தேவனுக்கு விரோதமாகச் செய்த கலகத்தின் விளைவுகள், தேவனுடைய கட்டளைகளை ஒதுக்கிப் போட்டதின் பலங்கள் ஆகியவை அனைத்து சிருஷ்டிகளின் முன்பும், வெட்டவெளிச்சமாக்கப்பட்டது. தேவனின் அரசாங்கத்திற்குமாறாக, சாத்தான் அரசாட்சி செயல்பட்ட முறை அண்டசராசரத்திற்கும் காட்டப்பட்டது. சாத்தானின் சொந்தக் கிரியைகளே அவனைக் கண்டனஞ்செய்தது. தேவனின் ஞானம், அவரது நீதி, நியாயங்கள் மற்றும் நன்மைகள் முற்றிலுமாக நிலைநாட்டப்பட்டன. இந்த மாபெரும் போராட்டத்தில் தேவனின் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் அவரது மக்களின் நன்மைக்காகவும், அவர் சிருஷ்டித்த அனைத்து உலகங்களின் நன்மைக்காகவுமே நடைபெற்றன என்பதைக் காணமுடிந்தது. தேவனுடைய சிருஷ்டிகள் மகிழ்ச்சியானது, அவரது பிரமாணத்தைக் கைக்கொள்வதிலேயே உள்ளது என்பதற்குச் சாட்சியாக, பாவத்தின் வரலாறு நித்தியமாக நிலைத்திருக்கும், மாபெரும் போரட்டத்தின் அனைத்து உண்மைகளையும் கண்டவுடன், தேவனுக்கு உண்மையான, மற்றும் அவருக்கு எதிராகக் கலகஞ்செய்த, பாவிகள் அடங்கிய அண்டசராசரமும் ஒரே தொனியில்: “பரிசுத்தவான்களின் இராஜாவே! தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்” என்று அறிக்கையிட்டது.Mar 675.2

    மனிதனுக்காக, பிதாவும் குமாரனும் செய்த மிகப்பெரிய தியாகம் அனைத்து உலகங்களுக்கு முன்பாகவும் தெளிவாகக் காட்டப்பட்டது. சகல அதிகாரங்களுக்கும், கர்த்தத்துவங்களுக்கும், நாமங் களுக்கும் மேலாக கிறிஸ்து உயர்த்தப்பட்டு, தமக்கே உரிய மகிமையான இடத்தைச் சேரும் நேரம் வந்தது. அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவருவதற்காக, தனக்கு முன்னிருந்த அந்த ஆனந்தத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், அவர் சிலுவையைச் சகித்தார். அவர் பட்டபாடும், அவமானமும் எண்ணிப்பார்க்க முடியாதது; ஆனால், மகிமையும் மகிழ்ச்சியையும் அவைகளை விட மேலானவைகளே! அவரது சாயலில் புதுப்பிக்கப்பட்டிருந்த மீட்கப்பட்ட மக்களைக் காண்கிறார். ஒவ்வொரு இதயத்திலும் பரிபூரண தெய்வீகம் காணப்பட்டது. ஒவ்வொரு முகமும் தங்கள் அரசனின் சாயலை பிரதிபலித்தது. அவர்களில் தனது ஆத்தும வருத்தத்தின் பலனைக்கண்டு, அவர் திருப்தியானார். நீதிமாங்களும் துன்மார்க்கரும் சேர்ந்த அந்த திரள்கூட்டம் கேட்கும்படியாக: “இதோ என் சொந்த இரத்தத்தாலே நான் விலைக்கு வாங்கியவர்கள், என்னோடுகூட என் சமீபத்தில் நித்தியகாலமும் இவர்கள் வாசம்செய்ய இவர்களுக்காக நான் பாடுபட்டேன், இவர்களுக்காக நான் மரித்தேன்” என்று கூறினார். சிங்காசனத்தைச்சுற்றி, வெள்ளை அங்கி தரித்திருந்தவர்களிடத்திலிருந்து, “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரமாயிருக்கிறார்” (வெளி. 5:12) என்ற துதியின் கீதம் எழுந்தது.⋆Mar 675.3

    வாக்குத்தத்த வசனம்: Mar 676.1

    “பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.” - 1 யோவான் 4:4. Mar 676.2