Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஈடு இணையற்ற இசை!, டிசம்பர் 19

    “கர்த்தரால் மீட்க்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக் களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.” - ஏசாயா 35:10.Mar 705.1

    தேவனுடைய வெளிப்பாடுகளில்மட்டுமின்றி, எந்த மானிட செவியும் கேட்டிராத, மனித சிந்தையிலும் தோன்றியிராத, அத்தனை சிறப்புமிகுந்த இசையும் பாடலும் அங்க கேக்கும்.Mar 705.2

    பாடகர்கள் மட்டுமின்றி, இசைக்கருவிகள் வாசிப்பவர்களும் அங்குண்டு. அவர்கள் தங்கள் குரலை உயர்த்தி, கர்த்தரின் மாட்சிமையைப் பாடுவார்கள்; ஏனெனில் கர்த்தர் சீயோனைத் தேற்றுவார்... அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் பாழ்நிலங்களை கர்த்தருடைய தோட்டம்போலவும் ஆக்குவார். இனிமையான பாடல் சத்தத்தோடு துதித்தலும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் அதற்க்குள் காணப்படும்.Mar 705.3

    பரலோகத்திலுள்ள ஒழுங்கு-பூரண ஒழுங்கு-எனக்குக் காண்பிக்கப்பட்டது. அதைப்போலவே பூரண இசையையும் அங்கே கேட்டுப் பரவசமடைந்தேன். தரிசனத்திலிருந்து வெளியே வந்தபோது, இப்பூமியின் பாடல்கள் ஒழுங்கற்றும், ஒருங்கிணைப்பு இன்றியும் காணப்பட்டது. ஒரு பள்ளமான சதுக்கத்தில் தேவதூதர்கள் குழுக்களாக ஒவ்வொருவரும் தங்கள் கரங்களில் பொற்சுரமண்டலங்களை ஏந்தியவர்களாக நிற்பதை கண்டிருக்கிறேன். அந்த சுரமண்டலங்களின் கடைசியில் ராகங்களை மாற்ற அல்லது சுரமண்டல இசையை சரிப்படுத்த ஒரு கருவி இருந்தது. அவர்கள் விரல்கள் அந்த சுரமண்டல நாண்களை கவனக்குறைவோடு மீட்டவில்லை; ஆனால், பல்வேறு நாண்களையும் வெவ்வேறு ஒலி உண்டாக்கத்தக்கதாக மீட்டினார்கள். அந்த இசைக்குழுவை நடத்திச்செல்ல எப்பொழுதும் ஒரு தூதன் இருந்தான். அவன் அந்த சுரமண்டலத்தை முதலில் வாசித்து, இசை மீட்ட, அனைவரும் இணைந்து, ஒரு தலைசிறந்த முழுமையான பரலோக இசை உருவாயிற்று. அதின் இனிமையை விவரிக்க என்னால் இயலவில்லை. அது மிக மேலானதும் இனிமையானதும் தெய்வீகமானதும் பரலோகத்திற்கு அடுத்ததுமாயிருந்தது. ஒவ்வொரு முகத்திலிருந்தும் இயேசுவின் உருவத்தின் ஒளிக்கதுர், சொல்லொண்ணா மகிமையோடு பிரகாசித்தது.Mar 705.4

    கர்த்தரால் மீட்கப்பட்டோர் கூடுகையில் எப்படிப்பட்ட நேர்த்தியான பாடல் இருக்கும்...! ஆட்டுக்குட்டியானவரைத் துதித்துப்பாடும் பாடல்களோடுகூடிய இனிய இசையால், பரலோகம் முழுவதும் நிறைந்திருக்கும். இரட்சிக்கப்பட்டோர்-முடிவில்லாத காலத்திற்கும் மகிமையான இராஜ்யத்தில் காணப்படுவர். தேவனுடைய வாழ்கைக்கு ஒத்த வாழ்வு-அதுதான் நாம் அடையப்போகும் பலன்.Mar 706.1

    பரலோகத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அந்தக் காட்சி என்முன் தோன்றியபொழுது, பிரம்மிப்பில் மெய்மறந்தேன். அந்த உன்னதமான அழகையும், சிறந்த மகிமையையும் பார்த்து மெய்மறந்துபோன நான், என் எழுதுகோலைக் கீழே வைத்துவிட்டு, “ஆ! எத்தகைய அன்பு! எத்தகைய அதிசயமான அன்பு!” என்று வியந்தேன். மிக உயரிய மொழியினாலுங்கூட பரலோக மகத்துவத்தையும், இரட்சகரின் ஈடு இணையற்ற அன்பின் ஆழங்களையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை.⋆Mar 706.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 706.3

    “...என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளிங்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.” - மல்கியா 4:2.Mar 706.4