Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பாவ நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆத்துமாக்களுக்கு குணமாகுதல்!, மார்ச் 2

    “...தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந் தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.” - ஏசாயா 1:5,6Mar 121.1

    பாவ நோய் பிடித்த ஆத்துமாவிற்கு பரிகரம் ஒன்று உண்டு. அந்தப் பரிகரம் இயேசுவில்தான் உண்டு. நமது மீட்பர் மிகவும் அருமயானவர்; மிகவும் பெலவீனமான ஆத்துமாவிற்கு அவரது கிருபை போதுமனது. மிகவும் வலிமைவாய்ந்த நபருக்கும் கிருபை தேவை; அல்லது அவர் அழிந்துவிடுவார்.Mar 121.2

    இந்த கிருபையை எப்படி பெற்றுக்கொள்வது என்பதை நான் கண்டேண். உள்ளறைக்குச் சென்று, தனிமையில் தேவனிடத்தில் மன்றாடுங்கள்; ” தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என்னுள்ளத்திலே புதுப்பியும்.” ஊக்கத்தோடு, உண்மையாக..யாக்கோபைப்போல ஜெபத்திலே போராடுங்கள். கடுந்துயரோடு ஜெபியுங்கள்... இதற்காக ஒரு முயற்சியை நீங்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்...Mar 121.3

    முழு மனதோடு ஆண்டவரைத் தேடுங்கள். விருப்பமுள்ள ஆர்வத்தோடு ஆண்டவரிடம் வாருங்கள். தேவனுடைய உதவி இன்றி நாம் அழிந்துபோவோம் என்பதை நீங்கள் உண்மையிலேயே உணருவீர்களானால், மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவோர்களானால், அப்பொழுது எல்லாப் புத்திக்கும் எட்டாத அனைத்து சமாதானத்தையும் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் இரட்சிப்பை எதிர்பார்க்கிறீர்களானால், பெற்றுக்கொள்பவர்கள் கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும். நேரமெடுத்து ஜெபியுங்கள். அவசர அவசரமாக ஜெபிக்காதிருங்கள். கவனக்குறைவோடு ஜெபிக்காதிருங்கள். உங்களிலே ஒரு முழுமையான சீர்திருத்தம் ஏற்படத்தக்கதாகவும், அவரது ஆவியின் கனிகள் உங்களிலே நிலைபெற்றிருக்கத்தக்கதாகவும், உலகத்திலே விளக்குகளைப் போன்று, பிரகாசிக்கத்தக்கதாகவும், தேவன் உங்களிலே கிரியை செய்யவேண்டுமென்றும் கெஞ்சி மன்றாடுங்கள். தேவனுடைய ஊழியத்திற்கு ஒரு தடையாகவோ, அல்லது சாபமாகவோ இருக்காதீர்கள். நீங்கள் உதவியளிப்பவராக, ஒரு ஆசீர்வாதமாக இருக்கலாம். நீங்கள் இரட்சிப்பை முழுமையாகவும் சுதந்திரமாகவும் அனுபவிக்கமுடியாது என்று சாத்தான் உங்களிடத்தில் கூறுகின்றானா? அவனை நீங்கள் நம்ப வேண்டாம்.Mar 121.4

    தேவனுடைய ஆவியானவரின் ஆழமான அசைவாடுதலை அனுபவிப்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கொடுக்கப்பட்டுள்ள சிறப்புரிமை என்பதை நான் கண்டேன்.. ஒரு இனிமை மிகுந்த பரலோக சமாதானம் உங்களது உள்ளத்தை நிரப்பும். நீன்கள் விருப்பத்தோடு தேவனைப்பற்றியும், பரலோகத்தைப் பற்றியும் தியானஞ்செய்வீர்கள். அவரது தேவவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள மகிமையான வாக்குத்தத்தங்களை சிந்தனை செய்து, மனநிறைவோடு மகிழ்ச்சியடைவீர்கள்...Mar 122.1

    கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள், உலகத்தைவிட இயேசுவை மிகவும் அதிகமாக நேசிப்பார்களானால், அவர்களது மேலான உள்ளன்பு மையங்கொண்டிருக்கின்ற, சிறந்த நண்பரான இயேசுவைக்குறித்துப் பேசுவதை விரும்புவார்கள். அவர்கள் தாங்கள் இழக்கப்பட்டுப்போன, அழிந்துபோய்க்கொண் டிருந்த நிலையை உணர்ந்தபோது, அவர்களுக்கு உதவிசெய்யத்தக்கதாக அவர் வந்தார். பாவத்தால் பாரஞ்சுமந்து நொந்துபோனபோது, அவர்கள் அவரை நோக்கிப்பார்த்தார்கள். அவர் அவர்களது பாவம், குற்றம் ஆகியவைகளின் பாரத்தை அகற்றிப்போட்டார்... அவர்களது பாசம் முழுவதும் அவரிடமாகத் திரும்பியது. அவர்கள் முன்பு நேசித்த காரியங்களை, இப்பொழுது வெறுக்கிறார்கள். முன்பு வெறுத்த காரியங்களை, இப்பொழுது நேசிக்கிறார்கள். இந்த மாபெரும் மாறுதலானது உங்களில் ஏறப்பட்டிருக்கிறதா?⋆Mar 122.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 122.3

    ” நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.” - ஏசாயா 45:2Mar 122.4