Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மாரநாதா! (இயேசு வருகிறார்!)

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவே நமது ஒரே மீட்பர்!, மார்ச் 6

    “இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுதினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோதிரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிபாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.” - கொலோசெயர் 1: 13, 14.Mar 129.1

    நீங்கள் யாராயிருந்தலும் சரி, உங்களது வாழ்க்கை எப்படிப்பட்டதாக இதுவரை இருந்திருப்பினும் சரி, தேவன் நியமித்திருக்கும் வழியின்மூலமாக மாத்திரமே நீங்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளமுடியும். நீங்கள் மனந்திரும்பவேண்டும். உதவியற்ற நிலையில், கன்மலையாகிய கிறிஸ்து இயேசுவின்மீது விழ வேண்டும். கிறித்துவின் இரத்தமே பாவதிற்கான ஒரே பரிகாரம் என்றும், உங்களுக்கு ஒரு வைத்தியர் தேவை என்றும் நீங்கள் கண்டிப்பாக உணரவேண்டும். தேவனிடமாக மனந்திரும்பி, இயேசு கிறுஸ்துவின்மீது விசுவாசம் வைத்திருப்பதன்மூலமாக மாத்திரமே, இரத்தப் பரிகாரதைப் பெற்றுக்கொள்ளமுடியும்... அவரது இரத்தத்தின் சுத்திகரிக்கும் வல்லமை தங்களுக்க்குத் தேவை என்று உனருபவர்களுக்கே மாத்திரமே அது கிடைக்கும்.Mar 129.2

    தெய்வீக இரகதின்மீது நாம் எந்தவிதமான உரிமையும் கோர முடியாமல் இருந்தபோது, எத்தகைய அளவுகடந்த அன்பைக் காட்டி, நமக்காக எவ்வளவாக தம்மை தாழ்த்திருக்கிறார். நமது மீட்பின் காரியத்தைப் பொறுப்பெற்றுக்கொள்ள கிறிஸ்து விருப்பம் கொண்டார். நமது மாபெரும் வைத்தியர் ஒவ்வொரு ஆததுமாவிடமும் எதிர்ப்பற்ற ஒப்படைப்பை எதிர்பார்க்கிறார். நமது சொந்த வழக்கிற்காக, நாமே ஒருபோதும் சிபாரிசு செய்ய முடியாது. நமது சித்தம், செயல் அனைத்திற்குமான முழு மேலாண்மையும் கிறிஸ்துவிடம் இருக்கவேண்டும்.Mar 129.3

    இதுவரை எங்களது ஒழுக்க நிலைசார்ந்த பண்புகள் சரியாகவே இருந்திருக்கிறது; எனவே, ஒரு சாதாரண பாவியைபோன்று தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்தவேண்டிய அவசியமில்லை என்று நாம் நம்மைபற்றி புகழ்ந்து உயர்த்திப் பேசலாம்; ஆனால், பாவிகளிலும் பிரதான பாவியைப்போல, அதே வழியில்தான் நாம் நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கமுடியும்மென்று நாம் திருப்தியோடு இருக்கவேண்டும். நமது சொந்த நீதியை விட்டுவிட்டு, கிறிஸ்துவின் நீதியே நமக்காகச் சுட்டிகாட்டபடுவதற்காக நாம் கெஞ்சி மன்றாட வேண்டும்; நமது வல்லமைக்காக, கிறிஸ்துவையே முற்றிலுமாகச் சார்திருக்கவேண்டும்; சுயம் கண்டிப்பாகச் சாகவேண்டும்; நமக்கு இருப்பதெல்லாம் அவரது தெய்வீகக் கிருபையின் திரளான ஐசுவரியங்களினால் மாத்திரமே என்று நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இதுவே நமது இதயங்களின் மொழியாக இருக்கட்டும். எங்களிடத்திற்கு அல்ல; ஆ! ஆண்டவரே, எங்களிடத்திற்கு அல்ல. உமது இறக்கத்திற்காகவும் உமது சத்தியத்திரற்காகவும் உமது நாமதிற்காகவும் மகிமை செலுத்தப்படட்டும்.Mar 129.4

    தூய்மையான விசுசவாசத்தை அன்பு பின்தொடரும்; அன்பை கீழ்ப்படிதல் பின்தொடரும். மனந்திரும்பிய மனிதனின் அனைத்து சக்திகளும், ஆசைகளும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டிற்கடியில் கொண்டுவரப்படும். அவரது ஆவியானவர் ஒரு புதிப்பிக்கும் அனைவரையும் அவர் தெய்வீக சாயலிற்கு மாற்றுகிறார்.Mar 130.1

    “தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்” (1யோவான் 3.9). அவன், தான் கிறிஸ்துவின் இரத்ததினால் விலைக்கிரயமாக கொள்ளப்பட்டவன் என்றும், தேவனுக்குச் சொந்தமான அவனுடைய சரீரதினாலும், ஆவியினாலும் தேவனை மகிமைப்படுதுவதற்காக, தான் எடுத்துக்கொண்ட மிகவும் பக்திவிநயமான வாக்குறுதிக்குக் கட்டுப்படிக்கிறான் என்பதையும், அவன் உணருகிறான். பாவத்தின் மீதுள்ள ஆசையும், சுயத்தின்மீது அவன் கொண்டிருக்கும் ஆசையும் அவனிலே அடங்கிப்போய்விட்டது. ஒவ்வொரு நாளும் அவன், “அவர் செய்யும் எல்லா நன்மைகளுக்காகவும், நான் என்னத்தைச் செலுத்துவேன்?” “ஆண்டவரே! நான் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்கிறேன்.⋆Mar 130.2

    வாக்குத்தத்த வசனம்: Mar 130.3

    “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகசமடைந்தர்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.” - சங்கீதம் 34:5.Mar 130.4