Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

மகா சர்ச்சை

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அத்தியாயம் 30 - ஆத்மீக சக்தியில் நம்பிக்கை

    வேறு ஒரு மாயத்தையும் நான் கண்டேன். ஏற்கனவே மரித்திருக்கும் நமது உறவினர்களையும் நண்பர்களையும் போல காணப்படும் உருவங்களை தோன்றச் செய்யும் வல்லமை சாத்தானுக்கு உண்டு. நமது உறவினர்கள் உயிருடன் இருந்த நாட்களில் இருந்தவாறே தோன்றுவார்கள். அவர்களின் பேச்சும் சத்தமும் நமக்கு அறிமுகமானவைகளாகவே இருக்கும். இவைகள் அனைத்தும் உலகத்தை வஞ்சித்து, இத்தகைய மாயையை நம்பவைக்கும்படியாக நடக்கும்.GCt 85.2

    தேவ வசனங்களிலிருந்து சத்தியத்தை முழுக்க கற்று, அதில் தேறினவர்களாக பரிசுத்தவான்கள் இருக்க வேண்டும் என்று நான் கண்டேன். மரித்தவர்களின் நிலையை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், பிசாசின் ஆவிகள் தோன்றி, உறவினர்களைப் போல காட்சியளித்து, வேத வசனங்களுக்கு புறம்பான கோட்பாடுகளை நமக்கு வலியுறுத்துவார்கள். தாங்கள் செய்வதை நிலைநிறுத்துவதற்காக, அவர்களுடைய வல்லமையைக் கொண்டு, அநேக அற்புதங்களை செய்வார்கள். மரித்தோர் ஒன்றையும் அறியார்கள் என்கிற வேத சத்தியத்தைக் கொண்டு, இத்தகைய ஆவிகளை எதிர்க்க, தேவனுடைய ஜனங்கள் ஆயத்தமாக இருக்கவேண்டும்.GCt 85.3

    இந்த மாயை வளர்ந்து, நம்மை முகமுகமாய் எதிர்கொள்ளும் என்பதால், நமது நம்பிக்கையின் அஸ்திபாரத்தை நாம் வேத அடிப்படையில் சோத்தித்தறியவேண்டும். அப்படி ஆயத்தமாகாவிடில், நாம் மேற்கொள்ளப்படுவோம். ஆகிலும், நமக்கு முன்பாக இருக்கும் போராட்டத்தை எதிர்த்து, நம்மால் இயன்றமட்டும் போராடும்போது, தேவன் தமது மகத்துவமான கரங்களால் நம்மை பாதுகாத்துக்கொள்வார். அவர் துரிதமாக தமது மகிமையின் தூதர்களை அனுப்பி, தம்முடைய விசுவாசப் பிள்ளைகளைச் சுற்றிலும் அரண் அமைத்து, ஏமாற்றப்படாதபடி காத்துக்கொள்வார்.GCt 86.1

    இந்த மாயை பரவிய வேகத்தை நான் கண்டேன். வரிசையாக நீண்டிருந்த ஐனக்கூட்டத்தை நான் பார்த்தேன். இஃது ஒரு ரயிலைப்போல இருந்தது. நான் கவனமாக பார்க்கும்படி, தூதன் விரும்பினான். நான் உற்று கவனித்தபொழுது, முழு உலகமே அந்த ரயிலில் இருந்ததைப் போல இருந்தது. பின்பு தூதன், அந்த ரயிலின் நடத்துனரை காட்டினான். அவரை பயணிகள் யாவரும் மிகுந்த மரியாதையுடன் நோக்கியதை நான் கவனித்தேன். குழும்பிய நான், என் தூதனிடம் கேட்டேன். அது சாத்தான் என்று அவன் கூறினான். ஒரு ஒளியின் தூதனைப்போல் அவன் காட்சியளித்தான். அவன் உலகையே தன் வசப்படுத்தியிருந்தான். பயணிகள் யாவரும் மாயையை நம்பாவிடில் அழிந்து போவார்கள் என்கிற பொய்யை முழுமையாக நம்பியிருந்தார்கள். சாத்தானின் உதவியாளர்கள் வெவ்வேறு வேளைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை நான் கண்டபோது, “வேறு யாரும் இல்லையா?” என தூதனிடம் வினவினேன். எதிர் திசையில் நான் பார்க்கும்படி அவன் கட்டளையிட்டான். நான் பார்த்தபோது, அங்கே ஒரு சிறு கூட்டம் ஒரு குறுகிய பாதையில் பயணப்பட்டிருந்ததை கண்டேன். சத்தியத்தினால் அவர்கள் அனைவரும் இணைக்கப்பட்டிருந்தார்கள்.GCt 86.2

    இச்சிறுக் கூட்டத்தினர் சோர்வாய் காணப் பட்டனர். ஏதோ கடுமையான போராட்டங்களை கடந்து வந்தது போல் இருந்தார்கள். அச்சமயத்தில், மேகத்தின் மறைவிலிருந்து எழும்பிய கதிரவன், அவர்களுடைய முகத்தில் ஒளியை கக்கினான். அப்பொழுது, அவர்கள் வெற்றியின் களிப்பிற்கு மாறினார்கள்.GCt 86.3

    தேவன், இத்தகைய மாயைகளை கண்டுபிடிக்கும் வாய்ப்புகளை உலகத்துக்கு தந்திருந்தார். ஒரு கிறிஸ்தவனுக்கு இது ஒன்றே போதுமானது. மதிப்புள்ளவைகளுக்கும் இழிவான வைகளுக்கும் இடையே யாதொரு வித்தியாசமும் காட்டப்படவில்லை.GCt 86.4

    தாமஸ் பைன் என்பவர் துன்மார்க்கமான ஜீவியத்தை ஜீவித்து மரித்துப்போனவர். புழுதியாக மாறிய இவர், 1000 வருட அரசாட்சிக்கு பின்னரே எழுப்பப்பட்டு, தனது பலனை பெற்று, இரண்டாம் மரணத்தையும் தழுவுவார். ஆனால், தாமஸ் பைன் என்பவர் பரலோகத்தில் இருப்பதாகவும், அங்கு அவர் கணத்திற்குரியவராக திகழ்கிறார் என்றும் சாத்தன் நம்பவைக்கிறான். தாமஸ் பைன் உலகில் ஜீவித்த நாட்களில் சாத்தானின் பிரஜையாக ஜீவித்து வந்தான். மரித்த பின்னும், சாத்தான் அவனைக்கொண்டு பலரை வஞ்சித்துக்கொண்டிருக்கிறான். அவனுடைய வாழ்க்கையையும் சாவையும் சீர்கெட்ட போதனைகளையும் பயத்துடன் அறிந்தவர்கள் கூட இப்பொழுது அவனிடம் சரணடைந்திருக்கிறார்கள்.GCt 87.1

    பொய்யின் பிதாவாகிய சாத்தான், தனது தூதர்களை அனுப்பி, அப்போஸ்தலர்களைப் போலவே பேச வைத்து, பூமியில் வாழ்ந்த நாட்களில் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் தாங்கள் எழுதிவைத்ததை தாங்களே மறுப்பதைப் போல காட்சிகளை உண்டுபண்ணினான். இப்படி செய்வதின் மூலம், தேவ வசனத்தின் மீது இருக்கக் கூடிய நம்பிக்கையை தகர்த்தெறிந்தான். ஏனெனில், வேதவசனங்கள் சாத்தானின் ஓட்டத்தை குறுக்கிட்டு, அவனுடைய திட்டங்களை திசை திருப்பக்கூடியதாக இருந்தன. எனவே, வேத வசனங்களின் பிறப்பிடத்தை சந்தேகிக்க வைத்து, கடவுள் நம்பிக்கையற்ற தாமஸ் பைன் என்பவரும் பரலோகம் சென்றடைந்ததைப் போல காட்டி, மனிதர்களை குழப்புவது சாத்தானின் யுக்தியாகும். இந்த மாயை மூலமாக, தாமஸ் பைன் என்பவரும், பூமியில் அவர் வெறுத்த கிறுஸ்துவின் அப்போஸ் தலர்களும், இப்பொழுது இணைந்து செயலாற்றுகிறார்கள் என்பதை போல சாத்தான் உலகுக்கு காட்டி வந்தான்.GCt 87.2

    சாத்தான் தனது தூதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு கொடுத்திருந்தான். அவர்களை தந்திரமாகவும், ஏமாற்றும் சுபாவமுள்ளவர்களாகவும் இருக்கும்படி ஏவினான். அவர்களில் சிலரை அப்போஸ்தலர்களைப் போல நடிக்கவேண்டுமென்றும், பிறரை துன்மார்க்கரைப்போல நடிக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான். அஃதோடு, துன்மார்க்கராக வாழ்ந்து, தேவனை தூஷித்து மரித்தவர்கள், இப்பொழுது தேவபயம் நிறைந்தவர்கள் போல் எழும்பினார்கள். மிகவும் பரிசுத்தமான அப்போஸ்தலருக்கும், மிகக்கொடிய துன்மார்க்கருக்கும் வித்தியாசமே இல்லாமல் போய்விட்டது. இவர்கள் இருவருமே ஆவியாக வந்து ஒரே காரியத்தை போதித்தார்கள். தாமஸ் பைன் உலகத்தில் வாழ்ந்த நாட்களில் சாத்தானுக்கு மிக நெருக்கமானவனாக வாழ்ந்தபடியால், அவன் உபயோகித்த வார்த்தைகளும், எழுத்துக்களும் இப்பொழுது சாத்தானுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தாமஸ் பைன் எழுதிய புத்தகங்களை சாத்தானே ஏவியதால், இப்பொழுது தனது தூதர்களின் மூலமாக, தாமஸ் பைனே எழுந்து வந்து பேசுவது போலவும், எழுதுவது போலவும் நடித்துக்காட்டுவது எளிதாக இருந்தது. இஃது சாத்தானின் மிகச் சிறந்த படைப்பாகும். அப்போஸ்தலரைப் போன்றும், பரிசுத்தவான்களைப் போன்றும், துன்மார்க்கரைப் போன்றும் தோன்றியவைகள் யாவும் சாத்தானின் மாட்சிமையிலிருந்து நேரிடையாக வந்தவைகளாகும்.GCt 87.3

    இஃது யாவரின் மனதிலிருக்கும் மறைவுகளை நீக்கி, சாத்தானின் கேடுள்ள கிரியைகளை கண்டுகொள்ள போதுமானது. அவனுக்கு பிரியமானவனும், தேவனுக்கு விரோதமானவனுமான ஒருவனையும், பரிசுத்தமான அப்போஸ்தலரையும் தேவ தூதர்களையும் அவன் வசப்படுத்தியிருந்தாக காட்டினான். இதினிமித்தமாக அவன் உலகத்துக்கு கூறும் செய்தி யாதெனில் : நீங்கள் எவ்வளவு துன்மார்க்கராக இருந்தாலும் சரி ; நீங்கள் தேவனையும் வேதத்தையும் விசுவாசித்தாலும் விசுவாசிக்காவிட்டாலும் சரி; நீங்கள் விரும்பும் விதமாக வாழுங்கள், பரலோகம் உங்கள் இருப்பிடம் தான். ஏனெனில், தாமஸ் பைனுக்கே பரலோகில் இடமுண்டு என்றால், யாவரும் அங்கு சென்றடையலாமே! இது யாவரும் கவனிக்கும் விதத்தில் பிரகாசித்தது. தாமஸ் பைன் போன்ற தனிமனிதர்களை கொண்டு, சாத்தான், அவனது வீழ்ச்சியின் நாளிலிருந்து செய்ய முற்பட்டதை இன்னமும் செய்து கொண்டிருந்தான். தனது பலத்தாலும், மாயையான அற்புதங்களினாலும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை தகர்த்து, அவர்களுக்கு வழிகாட்டக்கூடிய சூரியனையும் அனைத்துப்போட்டான். பரிசுத்த வேதாகமம் ஒரு சாதாரன கதை புஸ்தகத்தைக் காட்டிலும் உயர்ந்தது அல்ல என்றும், அஃது ஆவியானவரால் அருளப்பட்டது அல்ல என்றும் சாத்தான் அறிவித்தான். வேதாகமத்தின் இடத்தில் ‘ஆவிக்குரிய வெளிப்பாடுகள்’ என்கிற புத்தகத்தை கொண்டு வந்தான்.GCt 88.1

    இங்கு, சாத்தானுக்கு என்று ஒரு வழி உருவாக்கப்பட்டது. அவ்வழி அவன் வசம் இருந்தது. எனவே உலகம் அவனை நம்பும்படி செய்வது எளிதாகிவிட்டது. அவனையும், அவனை பின்பற்றுகிறவர்களையும் நியாயந்தீர்க்கும் புஸ்தகத்தை அவன் விரும்பியபடியே இருளில் வைத்தான். உலக இரட்சகரை ஒரு சராசரி மனிதனாக மட்டும் காட்டினான். இயேசுவின் கல்லறையை காத்த ரோமாபுரிய சேவகர்கள் எவ்விதமாக பிரதான ஆசாரியர்களும் வேதபாரகர்களும் கூறியபடியே பொய்ச்சாட்சி பகிர்ந்தார்களோ, அப்படியே, ‘ஆவிக்குரிய வெளிப்பாடுகளை’ படித்த அனைவரும் இயேசுகிறிஸ்துவின் பிறப்பிலும், இறப்பிலும், உயிர்த்தெழுதலிலும் யாதொரு அற்புத நிகழ்வும் இல்லை என பொய்ப்பிரச்சாரம் செய்தார்கள். இவ்விதமாக, இயேசுவையும் பரிசுத்த வேதாகமத்தோடு இருளில் மறைத்துவிட்டு, தங்களது மாயையான அற்புதங்களை நடப்பித்து, தங்களுடைய கிரியைகள் யாவும் கிறிஸ்துவின் கிரியைகளைவிட சிறந்தவை எனவும் அறிவித்தார்கள். அந்தப்படியே, உலகம் சிக்குண்டு, சாத்தானின் மடியில் தாலாட்டப்பட்டது. இறுதியில், கடைசி ஏழு வாதைகள் ஊற்றப்படும் வரை இந்த ஏமாற்றத்தை எவரும் உணரப்போவது இல்லை. தனது திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறுவதை சாத்தான் நகைப்போடு கண்டுகளித்தான். உலகம் அவனது பிடியில் இருந்தது.GCt 88.2

    பார்க்க : பிரசங்கி 9 : 5
    யோவான் : 11 : 1-45
    II தெசலோனிக்கேயர் 2 : 9 —12
    வெளிப்படுத்தல் 13 : 3-14

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents