Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கோதுமையிலிருந்து பதர் பிரிக்கப்படுதல்

    சபையில் பிரிவினைகள் வரும். இரண்டு பிரிவுகள் வளர்ச்சியடையும். கோதுமையும் களைகளும் அறுவடை வரையில் ஒன்றாகவே வளர்ந்து வரும். — 2SM 114 (1896).கச 125.3

    சல்லடையால் சலித்தெடுக்கப்படுதலான ஒரு அசைக்கப்படுதல் நடைபெற இருக்கின்றது. சரியான நேரத்தில் கோதுமையிலிருந்து பதர் பிரிக்கப்படவேண்டும். ஏனெனில், அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகின்றது. உண்மையானவர்கள் அதிக பெலமுள்ளவர்களாக இருப்பதற்கு, இதுவே சரியான காலமாக இருக்கின்றது. — Letter 46, 1887.கச 125.4

    தாத்தான், அபிராமுடைய கலகத்தின் சரித்திரம் மீண்டும் மீண்டுமாக நிகழ்கின்றது. அது காலத்தின் முடிவுவரை மீண்டுமாக நிகழ இருக்கின்றது. யார் கர்த்தர் பக்கமாக இருக்கப்போகின்றார்? யார் வஞ்சிக்கப்பட்டு, பின்பு தாங்களே வஞ்சிக்கிறவர்களாக மாறப்போகின்றார்? — Letter 15, 1892.கச 125.5

    கர்த்தர் வெகு சீக்கிரத்தில் வர இருக்கின்றார். சத்தியத்தை நேசிக்காத, தேவனைக் கனப்படுத்தாத துன்மார்கள் நம் மத்தியிலே இருப்பதால் கச 125.6

    சுத்திகரிப்பின் வேலையும், பதரைப் பிரித்தெடுத்து நீக்கும் வேலையும், ஒவ்வொரு சபையிலும் கண்டிப்பாக நடந்தாகவேண்டும். — RH March 19, 1895.கச 126.1

    அசைக்கப்படக்கூடிய அனைத்தும் அசைக்கப்படுவதற்கேதுவான அசைக்கப்படுகின்ற காலத்தில் நாம் இருக்கின்றோம். சத்தியத்தை அறிந்தவர்கள் வார்த்தையிலும் செய்கையிலும் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால், கர்த்தர் அவர்களை மன்னிக்கமாட்டார். — 6T 332 (1900).கச 126.2