Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அச்சடிக்கப்பட்ட பக்கத்தின் செல்வாக்கு

    ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஒரே நாளில் விரைவாக மன மாற்றமடைவார்கள். அவர்களில் அநேகர் நமது வெளியீடுகளை வாசித்ததினிமித்தமாகவே தங்களது முதல் உணர்த்துதல்களைப் பொற்றதாகக் கூறுவார்கள். 693 (1885).கச 154.5

    இந்தப் புத்தகத்தை (மபெரும் போராட்டம்) விநியோகம் செய்ததால் உண்டான பலன்களை இப்பொழுது காணப்படுபவைகளால் தீர்மானிக்க முடியாது. இதை வாசிப்பதன்மூலம் சில ஆத்துமாக்கள் எழுப்பப்பட்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகின்ற மக்களோடு உடனடியாகத் தங்களை இணைத்துக்கொள்ளத் தைரியங்கொள்வர். ஆனால், இதை (மாபெரும் ஆன்மீக போராட்டம் என்ற புத்தகத்தை) வாசிக்கின்ற ஒரு திரள்கூட்டத்தினர், இந்தப் புத்தகத்திலே முன்னுரைக்கப்பட்டிருக்கின்ற அதே நிகழ்வுகள் நிறைவேறுவதை காண்கின்ற வரைக்கும், தங்களது நிலைப்பாட்டைத் தீர்மானிக்கமாட்டார்கள். இதிலே முன்னுரைக்கப்பட்டவைகளில் நிறைவேறின சில தீர்க்கதரிசனங்கள், மற்ற தீர்க்கதரிசனங்களும் அதைப்போலவே நிறைவேறும் என்ற விசுவாத்தை உண்டுபண்ணும். முடிவான ஊழியத்தில் கர்த்தருடைய மகிமையினால் பூமி பிரகாசமடையும்போது, இந்த ஏதுகரத்தின் (வெளியீடுகளின்) பலனாக அநேக ஆத்துமாக்கள் தேவனுடைய கற்பனைகளுக்காகத் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிந்தெடுப்பார்கள். - CM 128,129 (1890).கச 155.1

    மாபெரும் வல்லமையோடு பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, (வெளி. 18:1) பூமி முழுவதையும் தன்னுடைய மகிமையால் பிரகாசிப்பிக்கின்ற வேறொரு தூதனுடைய ஊழியம், நமது அச்சகங்களிலிருந்து வெளியாகும் புத்தகங்களின் வழியாகவே மிகவும் அதிக அளவில் நிறைவேற்றப்படவேண்டும். — 7T 140 (1902).கச 155.2