Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உங்கள் ஆகாரத்தை நீங்களே விளைவியுங்கள்

    தங்கள் பிள்ளைகள் இயற்கையில் தேவனுடைய கிரியைகளோடு நேரடி தொடர்பிற்குக் கொண்டுவரப்படக்கூடிய இடங்களில் குடியிருந்தது, தங்கள் ஆகாராத்திற்கான காய்கறிகளையும் பழங்களையும் தாங்களே விளைவிக்கிற இடங்களுக்கு தமது ஜனங்கள் நகரவேண்டுமென்று கர்த்தர் விரும்புகின்றார். உங்களது குடும்பங்களை பட்டணங்களைவிட்டு வெளியே எடுத்துச் செல்லுங்கள் என்பதே என்னுடைய தூதாக இருக்கின்றது. — 2SM 357, 358 (1902).கச 73.2

    நமது ஜனங்கள் தங்களது குடும்பங்களை பட்டணங்களை விட்டு நாட்டுப்புறத்திற்கு எடுத்துச்சென்று , தங்களது ஆராரத்துக்குத் தேவையானவற்றை தாங்களே விளைவித்துக்கொள்ள வேண்டுமென்று கர்த்தர் மறுபடியும் மறுபடியுமாக அறிவுறுத்துகின்றார். ஏனெனில், எதிர்காலத்தில் வாங்குவதும் விற்பதுமான பிரச்சனை மிகவும் ஆபத்தான காரியமாயிருக்கும். மீண்டும் மீண்டுமாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஆலோசனைகளை, இப்பொழுதே நாம் கவனிக்க ஆரம்பிக்க வேண்டும். வீடுகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாயிராமலும், உங்கள் சத்துருக்களின் தலையீட்டிலிருந்து விடுபெற்று சுதந்தரமாகவும் வாழக்கூடிய நாட்டுப்புறப் பகுதிகளுக்கு பட்டணங்களைவிட்டுச் செல்லுங்கள். — 2SM 141 (1904).கச 73.3