Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கடைசிகாலச் சம்பவங்கள்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஞாயிறு ஆசரிப்புச் சட்டத்தை முழு உலகமும் ஆதரிக்கும்

    துன்மார்க்கர்… தங்களிடம் சத்தியம் இருப்பதாகவும், அற்புதங்கள் தங்களுக்குள்ளே நடப்பதாகவும், பரலோகத்திலிருந்து வந்த தேவதூதர்கள் தங்களோடு பேசுவதாகவும் நடப்பதாகவும், அதினிமித்தமே பெரிய அடையாளங்களும் வல்லமையும் அற்புதங்களும் அவர்கள் மத்தியில் நடைபெறுவதாகவும், இதுதான் தாங்கள் அநேக நாட்களாக எதிர்பார்த்திருந்த தற்காலிக ஆயிர வருட அரசாட்சி என்பதாகவும் அறிவிப்பார்கள். முழு உலகமும் மனமாற்றமடைந்து, ஞாயிறு ஆசரிப்புச் சட்டத்திற்கு இசைவாய் இருந்தது. — 3SM 427, 428 (1884).கச 99.2

    உலகம் முழுவதும் ஏழாம் நாள் அட்வென்டிஸ்ட்டுகளுக்கு விரோதமாகத் தூண்டப்பட்டு, பகைநிறைந்து காணப்படும். இந்த அந்திக் கிறிஸ்துவினுடைய வல்லமையின் அமைப்பாகிய, ஞாயிறு ஆசரிப்பு என்ற அமைப்பை மதிக்காமலும், போப்பாதிக்கத்துக்குத் தலைவணங்காமலும் இருப்பதால் இவ்வாறு நடக்கும். — TM 37 (1893). கச 99.3

    தேவனுடைய பிரமாணத்தைக் காலின்கீழ் மிதிப்பவர்கள், மனிதச் சட்டங்களை ஏற்படுத்தி, அதை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி வற்புற்றுவார்கள். மனிதர்கள் ஒன்றுகூடி ஆலோசித்து, என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டம்பண்ணுவார்கள். உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையை ஆசரிக்கின்றது. அப்படியிருக்கும்போது, சொற்பபேராயிருக்கின்ற இந்த மக்கள் மட்டும் ஏன் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப செய்யக்கூடாது? என்று அவர்கள் கேட்பார்கள். — Ms 163, 1897.கச 99.4