Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    54 - சிம்சோன்

    நியாயாதிபதிகள் 13 -16 பரவியிருந்த மருள்விழுகைக்கு மத்தியிலும் தேவனை உண்மையாகத் தொழுது கொண்டிருந்தவர்கள் இஸ்ரவேலின் விடுதலைக்காக தொடர்ந்து மன்றாடினார்கள். வெளிப்படையான பதில் இராவிடினும் வருடாவருடமாக ஒடுக்குகிறவனின் வல்லமை தேசத்தின் மேல் மிக பாரமாகத் தங்கியிருந்தபோது தேவனுடைய ஏற்பாடு அவர்களுக்கு உதவி செய்யும்படியாக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தது. பெலிஸ்தியர் களுடைய ஒடுக்குதலின் ஆரம்ப வருடங்களில் தானே இந்த பலமான சத்துருக்களின் வல்லமையைத் தாழ்த்தும்படியாக தேவன் வகுத்திருந்த ஒரு குழந்தை பிறந்தது. !PPTam 728.1

    பெலிஸ்திய சமபூமிக்கு எதிராக இருந்த மலைப்பட்டணத்தின் எல்லையில் சோரா என்கிற சிறிய பட்டணம் இருந்தது. இங்கே பொதுவான குறைபாடுகளுக்கு நடுவில், யெகோவாவிற்கு உண்மையாக இருந்த தாணின் கோத்திரத்தைச் சார்ந்த ஒருசில் குடும்பங்களில் ஒன்றாக மனோவாவின் குடும்பம் இருந்தது. குழந்தையில்லாதிருந்த மனேவாவின் மனைவிற்கு அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவன் வழியாக இஸ்ரவேலை ஆண்டவர் விடுவிக்கத் துவங்குவார் என்ற செய்தியோடு யெகோவாவின் தூதன் காணப்பட்டான். இந்தக் கண்ணோட்டத்தில் அவளுடைய சொந்த பழக்கங்களைக் குறித்தும் குழந்தையை நடத்துவதைக் குறித்துங்கூட தூதன் அவளுக்குப் போதித்தான். ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அதே தடைகளை துவக்கத்திலிருந்தே குழந்தையின் மீதும் சுமத்தவேண்டும். அதோடுகூட அவனுடைய தலைமயிர் கத்தரிக்கப்படக்கூடாது. ஏனெனில் பிறப்பிலிருந்தே அவன் தேவனுக்கு அர்ப்பணிக்கப்படவேண்டும்.PPTam 728.2

    அந்த ஸ்திரி அவளுடைய கணவனைத் தேடி தூதனைக்குறித்து விளக்கிய பிறகு அவனுடைய செய்தியைக் கூறினாள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியமான வேலையில் எந்தத் தவறையும்PPTam 729.1

    செய்துவிடக்கூடாது என்ற பயத்தில் கணவன் : நீர் அனுப்பின் தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று ஜெபித்தான்.PPTam 729.2

    தூதன் மீண்டும் தோன்றிய போது மனோவாவின் எதிர்பார்ப்பு நிறைந்த விசாரணை : அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்த வேண்டும்?. என்று இருந்தது. நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கை யாயிருந்து, திராட்சச்செடியிலே உண்டாகிற தொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டான தொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதை யெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்ற முந்தின் போதனை திரும்பவும் கொடுக்கப்பட்டது.PPTam 729.3

    மனோவாவின் வாக்குத்தத்தக் குழந்தை செய்யவேண்டிய திருந்த ஒரு முக்கியமான வேலை தேவனுக்கு இருந்தது. இந்த வேலைக்கான தகுதியை அவன் பெறும்படிக்கு தாய் மற்றும் குழந்தையினுடைய பழக்கங்கள் கவனமாக முறைப்படுத்தப்பட வேண்டும். நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும் அவள் எச்சரிக்கையாயிருந்து, திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும் ..... தாயின் பழக்கங்களால் குழந்தை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ ஏதுவாக பாதிக்கப் படும். குழந்தையின் நன்மையைத் தேடுவாளாகில் அவள்தானும் கொள்கையினால் கட்டுப்படுத்தப்பட்டு இச்சையடக்கத்தையும் சுயமறுப்பையும் பழக்கப்படுத்தவேண்டும். ஞானமில்லாத ஆலோசகர்கள் அவளுடைய ஒவ்வொரு விருப்பத்தையும் உந்துதலையும் திருப்திப்படுத்தும் அவசியத்தை அவள் மேல் சுமத்தலாம். ஆனால் அப்படிப்பட்ட போதனை பொய்யும் தீங்குமானது. தேவனுடைய கட்டளையின்படித்தானே அந்தத்தாய் சுயத்தைக் கட்டுப்படுத்தும் மிக பவித்திரமான கடமைக்குள் வைக்கப்பட்டாள்.PPTam 729.4

    தகப்பன்களும் தாய்மார்களும் இந்த பொறுப்பில் ஈடு பட்டிருக்கிறார்கள். இருவரும் தங்களுடைய சொந்த மன சரீரப்பிர காரமான குணங்களையும் பசியையும் தங்கள் குழந்தைகளுக்குக் கடத்துகிறார்கள். பெற்றோர்கள் இச்சையடக்கமின்றி இருப்பதன் விளைவாக குழந்தைகள் பல வேளைகளில் சரீர மன ஆவிக்குரிய வல்லமைகளில் குறைவுபடுகிறார்கள். மதுபானம் குடிப்பவர்களும் புகையிலையை உபயோகிப்பவர்களும் திருப்திப்படுத்தாத பசி யை அவர்களுக்குக் கடத்துகிறார்கள். அவர்களுடைய அழற்சி யுற்ற இரத்தத்தையும் எரிச்சலான உணர்வுகளையும் கடத்துகிறார்கள். காம விகாரத்தோடு இருக்கிறவர்கள் பல வேளைகளில் பரிசுத்தமில்லாத ஆசைகளையும் அறுவறுக்கத்தக்க வியாதிகளையும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு மரபாக விட்டுச் செல்லுகிறார்கள். சோதனையை எதிர்க்க பெற்றோர்களுக்கு இருந்ததைக் காட்டிலும் குழந்தைகளுக்கு குறைவான வல்லமை இருப்பதினால் ஒவ்வொரு தலை முறையும் இன்னும் கீழ்நோக்கிப்போகிறதாகவே இருக்கிறது. தங்கள் பிள்ளைக ளுடைய மூர்க்கமான உணர்ச்சிகளுக்கும் முறையற்ற பசிக்கும் மாத்திரமல்ல, ஆயிரக்கணக்கானோர் காது கேளாமலும் கண் தெரியாமலும் வியாதியோடும் அறிவு வளராதும் பிறக்கிறதற்கும் பெற்றோர்கள் அதிக அளவு பொறுப்பானவர்களாக இருக் கிறார்கள்.PPTam 730.1

    பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்பது ஒவ்வொரு தகப்பன் மற்றும் தாயினுடைய விசாரணையாக இருக்கவேண்டும். பிறப்பிற்கு முன்பாக கொடுக்கப்படும் செல்வாக்கின் விளைவுகள் அநேகரால் சாதாரணமாக கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த எபிரெய பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்டு மிகவும் தெளிவாகவும் பவித்திரமான முறையிலும் திரும்ப இரண்டு முறை கூறப்பட்ட போதனை, இது நம்முடைய சிருஷ்டிகரால் எவ்விதம் பார்க்கப்படுகிறது என்பதைக் காண்பிக்கிறது, வாக்குத்தத்தக் குழந்தை பெற்றோரிடமிருந்து நல்ல மரபை வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது மாத்திரம் போதாது. கவனமான பயிற்சியும் சரியான பழக்கங்களை உருவாக்குவதும் இதைத் தொடரவேண்டும். இஸ்ரவேலின் எதிர்கால நியாயாதிபதியும் இரட்சகனுமாயிருப்பவன் குழந்தைப் பருவத்திலிருந்தே கண்டிப்பான இச்சையடக்கத்தில் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார். அவன் பிறப்பிலிருந்து நசரேயனாயிருந்து திராட்சரசத்திற்கோ அல்லது மதுபானத்திற்கோ எதிரான நிலையான தடையில் வைக்கப்பட வேண்டும். இச்சையடக்கம் சுயமறுப்பு மற்றும் சுய கட்டுப்பாடு இவைகளின் பாடங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படவேண்டும்.PPTam 730.2

    அசுத்தமான ஒவ்வொன்றும் தூதனால் தடைபண்ணப்பட்டிருந்தது. பொருட்கள் சுத்தமுள்ளது அல்லது சுத்தமில்லாதது என்கிற வித்தியாசம் வெறும் சடங்கினாலோ அல்லது மேலோட்டமான ஒழுங்கினாலோ அல்ல, சுகாதாரத்திற்கடுத்த கொள்கைகளின் அடிப்படையில் இருந்தது. ஆயிரக்கணக்கான வருடங்களாக யூத மக்களை வித்தியாசப்படுத்திக் காண்பித்திருக்கிற ஆச்சரியப்படக் கூடிய உயிர்சக்தியில் அந்தத் தடயத்தை பெருமளவில் கண்டுபிடிக் கலாம். வெறும் மதுபான உபயோகத்தைத் தடை செய்வதைக் காட்டிலும் இன்னும் மேலாக இச்சையடக்கத்தின் கொள்கைகள் கொண்டு செல்லப்பட வேண்டும். தூண்டக்கூடிய மற்றும் சீரணிக் கப்படக்கூடாத உணவுகளும் பல வேளைகளில் அதற்கு இணையான பாதிப்பையே சுகாதாரத்திற்கு உண்டு பண்ணி, குடிப்பழக்கத்தின் விதைகளை அநேகரில் விதைக்கிறது. உண்மையான இச்சையடக்கம் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒவ்வொன்றையும் முற்றிலுமாக அப்புறப்படுத்தவும் சுக மளிக்கக்கூடியவைகளை நிதானத்தோடு உபயோகிக்கவும் போதிக்கிறது. தங்களுடைய ஆரோக்கியத்திலும் தங்களுடைய குணத்திலும் இந்த உலகத்திற்கும் நித்திய உலகத்திற்குமான தங்களுடைய உபயோகத்திலும் ஆகார பழக்கங்களுடைய பங்கு என்ன என்பதை வெகு சிலரே உணரவேண்டிய விதமாக உணருகிறார்கள். சன்மார்க்க மற்றும் அறிவு சார்ந்த வல்லமைகளுக்கு பசி எப்போதும் அடங்கியிருக்க வேண்டும். சரீரம் மனதிற்கு ஊழியக்காரனாயிருக்க வேண்டும். மனம் சரீரத்திற்கு அல்ல .PPTam 731.1

    மனோவாவிற்குக் கொடுக்கப்பட்ட தெய்வீகவாக்குத்தத்தம் சிம்சோன் என்று பெயர் கொடுக்கப்பட்ட அவனுடைய குமாரனின் பிறப்பில் நிறைவேறியது. அந்தப் பிள்ளை வளர்ந்தபோது அது அசாதாரணமான சரீர பெலத்தைக் கொண்டிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. சிம்சோனின் பெற்றோர்கள் நன்கு அறிந் திருந்த தைப்போல் அது அவனுடைய நரம்புகளில் பின்னப்பட்டிருக்கவில்லை. மாறாக, அவனுடைய சிரைக்கப்படாத தலை அடையாளப்படுத்தின நசரேயன் என்கிற நிபந்தனையில் இருந்தது. சிம்சோனின் பெற்றோர்கள் உண்மையாக இருந்ததைப் போல் அவனும் தெய்வீகக் கட்டளைக்கு கீழ்ப்படிந்திருந்தானானால், அவனுடைய முடிவு நேர்மையானதும் மகிழ்ச்சியானதுமாக இருந்திருக்கும். ஆனால் விக்கிரகா ராதனைக்காரரோடு கொண்ட தோழமை அவனைக் கெடுத்தது. சோரா என்றும் பட்டணம் பெலிஸ்தியரின் தேசத்திற்கு அருகில் இருந்ததால் சிம்சோன் ஒரு நட்பின் நிபந்தனைகளில் அவர்களோடு கலந்தான். இவ்விதம் அவனுடைய வாலிபத்தில் நெருக்கங்கள் வளர, அதனுடைய செல்வாக்கு அவனுடைய முழு வாழ்க்கை யையும் இருட்டடித்தது. திம்னாத் என்னும் பெலிஸ்தியபட்டணத்தில் வசித்திருந்த ஒரு வாலிபப் பெண் சிம்சோனின் பிரியங்களில் ஈடுபட, அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொள்ள அவன் தீர்மானித்தான். அவனுடைய நோக்கத்திலிருந்து அவனை மாற்ற முயற்சித்த தேவனுக்குப் பயந்த பெற்றோர்களுக்கு அவனுடைய ஒரே பதில் : அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள் என்று இருந்தது. முடிவாக பெற்றோர்கள் அவனுடைய விருப்பங்களுக்கு விட்டுக்கொடுக்க திருமணம் நடந்தது.PPTam 731.2

    வாலிபத்திலிருந்து ஆண்மைக்குள் நுழைந்தபோது, தெய்வீக வேலையைச் செயல்படுத்தவேண்டிய அந்த நேரத்தில் மற்ற அனைத்து காலத்தையும் விட தேவனுக்கு உண்மையாக இருந்திருக்கவேண்டிய அந்த காலத்தில் சிம்சோன் இஸ்ரவேலின் சத்துருக்களோடு தன்னை இணைத்துக்கொண்டான். தான் தெரிந்து கொண்டவளோடு இணைவதின் வழியாக தேவனை மேன்மையாக மகிமைப்படுத்த முடியுமா என்றோ, அல்லது தன்னுடைய வாழ்க்கையினால் நிறைவேற்றப்பட வேண்டிய நோக்கத்தை நிறை வேற்றக் கூடாத இடத்தில் தன்னை வைத்துக்கொள்ளு கிறேனோ என்றோ அவன் கேட்கவில்லை. அவரை முதலாவது கனப்படுத்தத் தேடுகிற அனைவருக்கும் தேவன் ஞானத்தை வாக்குப் பண்ணியிருக்கிறார். ஆனால் சுயத்தை திருப்திப்படுத்த நெளிந்து போகிறவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தமும் இல்லை.PPTam 732.1

    சிம்சோனைப்போல எத்தனை பேர் அதே வழியைத் தொடருகிறார்கள். கணவனையோ அல்லது மனைவியையோ தெரிந்தெடுப்பதில் உணர்வுகள் ஆட்சி செய்வதால் எவ்விதம் பலவேளைகளில் தேவபக்தியுள்ளவர்களுக்கும் பக்தியற்றவர் களுக்குமிடையே திருமணம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தார் தேவனிடம் ஆலோசனை கேட்பதில்லை. அவருடைய மகிமையையும் தங்கள் பார்வையில் வைப்பதில்லை. திருமண உறவில் கிறிஸ்தவம் கட்டுப்படுத்தும் செல்வாக்கைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் பல வேளைகளில் இந்த இணைப்பிற்கு நடத்துகிற நோக்கங்கள் கிறிஸ்தவக் கொள்கைகளின் அடிப்படையில் இருப்பதில்லை. தனக்குச் சொந்தமானவர்களோடு திருமண உறவிற்குள் நுழைவதற்கேதுவாக தேவனுடைய மக்கள் மேல் தன்னுடைய வல்லமையைப்பலப்படுத்த சாத்தான் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறான். இதை நிறைவேற்றும்படி இருதயத்தில் பரிசுத்தமில்லாத உணர்வுகளைத் தூண்டி விட அவன் முயற்சிக்கிறான். ஆனால் ஆண்டவர் தமது வார்த்தையில் தம்முடைய பிள்ளைகள் தங்கள் இருதயங்களில் அவருடைய அன்பை வைத்திராதவர்களோடு இணையக்கூடாது என்று தெளிவாகப் போதித்திருக்கிறார். கிறிஸ்துவுக்கும் போலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? 2கொரி. 5:15,16.PPTam 732.2

    திருமண விருந்தில் இஸ்ரவேலின் தேவனை வெறுத் திருந்தவர்களின் தோழமைக்குள் சிம்சோன் கொண்டுவரப்பட்டான். இவ்விதமான உறவுகளுக்குள் வலிய நுழைகிறவர்கள் குறிப்பிட்ட அளவுதங்கள் தோழர்களின் பழக்கங்களுக்கும் வழக்கங்களுக்கும் ஒத்து போகவேண்டியதிருப்பதை உணருவார்கள். இவ்விதம் செலவு செய்யப்படுகிற நேரம் வீணானது என்பதைக் காட்டிலும் கெடுதலானது. ஆத்துமாவின் அரணை பலவீனப்படுத்தி, கொள்கையின் உறுதியை உடைக்க நடத்துகிற நினைவுகள் மகிழ்விக்கப்பட்டு வார்த்தைகள் பேசப்படுகின்றன.PPTam 733.1

    திருமண விருந்து முடிவதற்கு முன்பாகவே யாருக்காக சிம்சே பான் தேவனுடைய கட்டளையை மீறினானோ அந்த மனைவி தன் கணவனுக்கு தன்னைத்துரோகியென்று நிரூபித்தாள். அவளுடைய துரோகத்தினால் சீற்றமடைந்தவனாக சிம்சோன் சில காலம் அவளைக் கைவிட்டு சோராவிலிருந்த தன்னுடைய வீட்டிற்குத் தனியாகச் சென்றான். பின்னர் இறங்கி திரும்ப வந்தபோது அவள் மற்றொருவனுக்கு மனைவியாயிருக்கிறதைக் கண்டான். அவர் களுடைய பயமுறுத்துதல் தான் பிரச்சனையைத் துவங்கியிருந்த வஞ்சகத்திற்கு அவளைத் தூண்டியிருந்தபோதும், அவர்களுடைய வயல்களும் திராட்சத்தோட்டங்களும் அவனுடைய பழிவாங்கு தலில் வீணானதால், அந்தப் பாழ்க்கடிப்பு அவளைக் கொலை செய்யும்படி அவர்களைத் தூண்டியது. தனி மனிதனாக இளம் சிங்கத்தைக் கொன்றதிலும் அஸ்கலோனின் முப்பது மனிதர்களைக் கொன்றதிலும் ஆச்சரியப்படும் பலத்திற்கு சிம்சோன் சான்று கொடுத்திருந்தான். இப்போது அவனுடைய மனைவியை நாகரீகமின்றி கொலை செய்ததற்காக பெலிஸ்தியரைத் தாக்கி அவர்களைச் சின்னபின்னமாக முறியடித்தான். பின்னர் அவனுடைய சத்துருக்களிடமிருந்து பாதுகாப்பான அடைக்கலத்தைத் தேடி, யூதா கோத்திரத்திலிருந்த ஏத்தாம் ஊர்க்கன்மலை சந்திற்குத் திரும்பினான்.PPTam 733.2

    இந்த இடத்தில் பலமான படையினால் அவன் தூரத்தப்பட்டான். யூதாவின் குடிகள் மிகவும் எச்சரிக்கையடைந்தவர்களாக அவனை அவன் சத்துருக்களிடம் கொடுக்கச் சம்மதித்தனர். இதற்கேற்ப யூதாவின் மூவாயிரம் மனிதர்கள் அவனிடம் சென்றனர். அவன் அவனுடைய சொந்த தேசமக்களை தாக்கமாட்டான் என்கிற நிச்சயத்தை உணராதிருந்தார்களானால் அப்படிப்பட்ட சூழ் நிலையிலும் அவனை அண்ட அவர்கள் தைரியங்கொண்டிருக்கமாட்டார்கள். கட்டப்பட்டு பெலிஸ்தியர்களின் கைகளில் கொடுக்கப்பட சிம்சோன் சம்மதித்தான். எனினும் தன்னைத் தாக்குவதினால் அவர்களை அழிக்க அவனை நிர்ப்பந்திக்க மாட் டார்கள் என்ற வாக்குறுதியை யூதாவின் மனிதர்களிடமிருந்து பெற்றுக்கொண்டான். இரண்டு புதுக் கயிறுகளினால் தன்னைக் கட்ட அவன் அனுமதித்தான். பின்னர் சத்துருக்களின் பாளயத்திற்குள் மிகுந்த சந்தோஷத்தின் வெளிக்காட்டல்களுக்கு மத்தியில் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் அவர்களுடைய ஆர்ப்பரிப்பு மலைகளில் எதிரொலித்தபோது, கர்த்தருடைய ஆவி அவன் மேல் பலமாய் இறங்கினதினால் அவன் எழும்ப, அவன் புயங்களில் கட்டிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல் போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்து போயிற்று. கழுதையின் தாடையெலும்பாயிருந்தபோதும் பட்டயத்தையும் ஈட்டியையும் விட வல்லமையாக உபயோகப்பட்ட கையில் கிடைத்த முதல் ஆயுதத்தினால் பெலிஸ்தியர்கள் பயத்தில் ஓடும் வரையிலும் அவர்களை அடித்தான். வயலிலே ஆயிரம் பேர் மரித்து விழுந்தனர்.PPTam 734.1

    இஸ்ரவேலர்கள் சிம்சோனோடு இணைந்து வெற்றியைப் பின் தொடர் ஆயத்தமாயிருந்திருந்தால் அவர்களை ஒடுக்கினவர்களின் வல்லமையிலிருந்து அந்த நேரத்தில் தங்களை விடுவித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் உற்சாகமிழந்து கோழைகளாக இருந்தனர். புறஜாதியாரை துரத்தும்படி தேவன் அவர்களுக்குக் கொடுத்திருந்த வேலையை நிராகரித்திருந்து, தங்களுக்கு எதிராக திரும்பாதவரையிலும் அவர்களுடைய கொடுமையைச் சகித்து, அவர்களுடைய கீழ்த்தரமான பழக்கங்களுடன் தங்களை இணைத்திருந்து, அவர்களுடைய அநீ தியைக் கண்டுமிருந்தனர். ஒடுக்குகிறவனின் வல்லமைக்குள் அவர்கள் தானும் கொண்டு வரப்பட்டபோது தேவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் தப்பித்திருக்கக்கூடிய அந்தக் கீழ்த்தரத்திற்கு அடங்கினவர்களாகத் தங்களை ஒப்புக்கொடுத்தனர். தேவன் அவர்களுக்காக ஒரு இரட்சகனை எழுப்பின் போதும் அவனை விட்டு அவர்களுடைய சத்துருக்களோடு பல வேளைகளில் தங்களை இணைத்துக்கொள்வார்கள்.PPTam 734.2

    அவனுடைய வெற்றிக்குப்பிறகு இஸ்ரவேலர்கள் சிம்சே பானை நியாயாதிபதியாக்கினார்கள். அவன் இஸ்ரவேலை இருபது வருடம் ஆண்டான். ஆனால் ஒரு தவறான அடி மற்றொன்றுக்கு வழியை ஆயத்தப்படுத்துகிறது. பெலிஸ்தியர்களிடமிருந்து ஒரு மனைவியை எடுத்ததினால் சிம்சோன் தேவனுடைய கட்டளையை மீறியிருந்தான். அவனுக்கு சாவுக்கேதுவான சத்துருக்களாயிருந்தவர்களுக்கிடையே அநீதியான உணர்வுகளின் திளைப்பில் இப் போது மீண்டும் அவன் துணிவாக நுழைந்தான். பெலிஸ்தியர்களை அப்படிப்பட்ட பயத்திற்குள் நடத்தின் தன்னுடைய மாபெரும் பலத்தை நம்பி, காசாவிலிருந்த ஒரு வேசியிடம் துணிவாகச் சென் றான். அந்தப் பட்டணத்தார் அவன் வந்திருப்பதை அறிந்து பழிவாங்க ஆவலோடு இருந்தனர். மற்ற அனைத்துப் பட்ட ணங்களைக்காட்டிலும் மிகபலமான கோட்டையின் சுவர்களுக்குள் அவர்களுடைய சத்துரு பத்திரமாக அடைக்கப்பட்டிருந்தான். தங்கள் இரையைக் குறித்த நிச்சயத்தோடு தங்கள் வெற்றியை முழுமையாக்க காலை வரை அவர்கள் காத்திருந்தனர். நடு இரவில் சிம்சோன் எழுப்பப்பட்டான். தன்னுடைய நசரேய விரதத்தை முறித்துப் போட்டதை நினைத்தபோது குற்றமுள்ள அவனுடைய மனசாட்சி வருத்தத்தினால் நிறைந்தது. அவன் பாவம் செய் திருந்தபோதும் தேவனுடைய இரக்கம் அவனைக்கைவிடவில்லை. மகத்தான பெலம்PPTam 735.1

    அவனை விடுவிக்கும்படி மறுபடியும் செயல்பட்டது. பட்டணத்தின் கதவண்டை சென்று, அதை அதன் இடத்திலிருந்து திருகி அதன் நிலைகளோடும் தாழ்பாள்களோடும் எடுத்து எபிரோனுக்குப் போகும் வழியில் மலை உச்சி வரையிலும் அதைக் கொண்டு சென்றான்.PPTam 735.2

    இவ்வாறு தப்பித்துங்கூட அவனுடைய தவறான முறையை நிறுத்தவில்லை. மீண்டும் பெலிஸ்தியர்களுக்கு நடுவே நுழையாதிருந்தும் அவனை அழிக்கும்படி வாஞ்சித்திருந்த இச்சை இன்பங்களைத் தேட அவன் தொடர்ந்தான். அவன் பிறந்த இடத்திற்கு சமீபமாயிருந்த சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற ...... ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். அவளுடைய பெயர் பெட்சிக்கிறவள் என்னும் பொருளுடைய தெலீலாள், சோராகின் பள்ளத்தாக்கு அதனுடைய திராட்சத்தோட்டங்களுக்குப் பெயர்பெற்றிருந்தது. ஏற்கனவே திராட்சரசத்தில் திளைத்து நிலையற்றிருந்த நசரேயனுக்கு அதுவும் சோதனையை வைத்திருந்தது. தேவனுக்குத் தூய்மையாயிருப்பதற்கேதுவாக அவனைக் கட்டியிருந்த மற்றொரு கட்டை அவன் இவ்விதம் முறித்தான். தங்களுடைய சத்துருவின் அசைவுகளை பெலிஸ்தியர்கள் ஜாக்கிரதையாகக் கவனித்து வந்தனர். இந்த புதிய இணைப்பின் வழியாக அவன் தன்னைத் தரந்தாழ்த்தின் போது தெலீலாளின் வழியாக அவனுடைய அழிவை நிறைவேற்ற அவர்கள் தீர்மானித்தார்கள்.PPTam 736.1

    பெலிஸ்தியர்களின் மாகாணங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் தலைமையான ஒரு மனிதனைக் கொண்டிருந்த ஒரு தூதுக் குழு சே பாராகின் பள்ளத்தாக்கிற்கு அனுப்பப்பட்டது. அவன் மாபெரும் பலத்திலிருந்தபோது அவனைப் பிடிக்க அவர்கள் தைரியமற்றி ருந்தனர். எனினும் கூடுமானால் அவனுடைய வல்லமையின் இரகசியத்தை அறிந்து கொள்ளுவது அவர்களுடைய நோக்க மாயிருந்தது. எனவே அதைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தும்படி தெலீலாளிடம் பேரம் பேசினர்.PPTam 736.2

    இந்த காட்டிக்கொடுக்கிறவள் சிம்சோனை அநேக கேள்விகள் கேட்டபோது, சில முறைகளை முயற்சித்தால் மற்ற மனிதர்களுடைய பெலவீனம் தன்மேல் வரும் என்று அறிவித்து அவன் அவளை ஏமாற்றினான். அவள் அதை சோதித்தபோது அது வஞ்சகம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது : உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல் லுகிறாய்? நீ இந்த மூன்று விசையும் என்னைப் பரியாசம்பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று கூறி அவன் பொய் சொன்னதாக அவள் குற்றப்படுத்தினாள். தன்னை மகிழ்விக்கிற வளோடு பெலிஸ்தியர்கள் ஒப்பந்தம் செய்திருக்கிறதைக்குறித்த தெளிவான சான்றை மூன்று முறை சிம்சோன் பெற்றிருந்தான். ஆனால் அவளுடைய நோக்கம் தோல்வியடைந்தபோது அவள் இதை ஒரு வேடிக்கையாக நடத்தினாள். அவன் குருட்டுத்தனமாக பயத்தை துரத்தினான்.PPTam 736.3

    சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்படும் வரையிலும் நாளுக்குநாள் தெலீலாள் அவனை தொந்தரவு செய்தாள். எனினும் ஒரு தந்திரமானவல்லமை அவனை அவள் அருகே வைத்திருந்தது. முடிவாக மேற்கொள்ளப்பட்டு, சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை, நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனானவன், என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னைவிட்டுப்போம், அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று சிம்சோன் இரகசியத்தை தெரியப்படுத்தினான். தாமதமின்றி உடனடியாக வரும்படி வலியுறுத்தின் ஒரு தூதுவன் பெலிஸ்தியரின் அதிபதிகளுக்கு அனுப்பப்பட்டான். இந்த போர் வீரன் தூங்கிக்கொண்டிருந்த போது கனமான அவன் தலைமுடி தலையிலிருந்து சிரைக்கப்பட்டது. இதற்கு முன் மூன்று முறை செய்ததைப்போலவே சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்து விட்டார்கள் என்று அவள் அழைத்தாள். சடிதியில் எழுந்தவனாக முன் செய்ததைப்போலவே வல்லமையை உபயோகித்து அவர்களை அழித்துப்போட அவன் நினைத்தான். ஆனால் வல்லமையற்ற அவன் கைகள் அவன் அழைப்பை செயல்படுத்த மறுத்தன . கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அவன் அறிந்தான். அவன் தலை சிரைக்கப்பட்ட பின் தெலீலாள் அவனுடைய பலத்தை சோதித்துப் பார்த்தவளாக அவனை தொந்தரவு செய்யவும் அவனுக்கு வேதனையை உண்டாக்கவும் துவங்கினாள். இவ்விதம் அவனுடைய வல்லமை முழுமையாக சென்றுவிட்டது என்று உணர்த்தப்படும் வரையிலும் பெலிஸ்தியர்கள் அவனை நெருங்க தைரியமற்றிருந்தனர். பின்னர் அவர்கள் அவனைப் பிடித்து அவனுடைய இரண்டு கண்களையும் பிடுங்கி காசாவிற்குக் கொண்டு சென்றனர். அங்கே சிறையில் சங்கிலி களினால் கட்டப்பட்டு கடினமான உழைப்பில் ஆட்படுத்தப் பட்டான்.PPTam 737.1

    இஸ்ரவேலின் நியாயாதிபதியாகவும் முதன்மையானவனா கவும் இருந்த ஒருவனிடம் எப்படிப்பட்ட ஒரு மாற்றம் ! பெலவீனத்தோடு குருடனாகி சிறை பட்டவனாக மிகவும் இழிவான வேலைக்கு இப்போதுPPTam 737.2

    தாழ்த்தப்பட்டிருக்கிறான். அவனுக்கு வந்த பரிசுத்த அழைப்பின் நிபந்தனைகளை கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீறினான். தேவன் நீடிய காலம் அவனிடம் பொறுமையாக இருந்தார். தன்னுடைய இரகசியத்தை அறிவிக்குமளவு பாவத்தின் வல்லமைக்கு அவன் தன்னைக் கொடுத்தபோது ஆண்டவர் அவனை விட்டு விலகினார். அவனுடைய நீண்ட முடியில் எந்த மேன்மையும் இல்லை. அது தேவனுக்கு உண்மையாயிருந்ததன் அடையாளமாயிருந்தது. உணர்ச்சிகளின் திளைப்பிற்கு அது பலி செலுத்தப்பட்டபோது, எந்த ஆசீர்வாதத்திற்கு அது அடையாளமாக இருந்ததோ அது பறிமுதல் செய்யப்பட்டது.PPTam 738.1

    துன்பத்திலும் தாழ்மையிலும் பெலிஸ்தியர்களுக்கு வேடிக்கை யாக இருந்தபோது, முன் ஒருபோதும் அறிந்திராதவிதத்தில் தன் சொந்த பெலவீனத்தை சிம்சோன் அறிந்து கொண்டான். அவனுடைய உபத்திரவம் மனந்திரும்ப அவனை நடத்தியது. அவ னுடைய முடி வளர்ந்தபோது அவனுடைய வல்லமை படிப்படியாகத் திரும்பியது. ஆனால் அவனுடைய சத்துருக்கள் சங்கிலியால் கட்டப்பட்ட சிறைக்கைதியாக அவனைக் கருதி எந்த அச்சத்தையும் உணராதிருந்தார்கள்.PPTam 738.2

    பெலிஸ்தியர்கள் தங்கள் வெற்றியை தங்கள் தேவர்களுக்கு அர்ப்பணித்தார்கள். இவ்விதம் உயர்த்தினவர்களாக இஸ்ரவேலின் தேவனை நிந்தித்தார்கள். சமுத்திரத்தின் காவலாளியாயிருந்த மீன் தெய்வமான தாகோனை கனப்படுத்தும்படியாக ஒரு விருந்து நியமிக்கப்பட்டது. பட்டணத்திலிருந்தும் கிராமத்திலிருந்தும் பெலிஸ்திய சமபூமி முழுவதிலிருந்தும் மக்களும் அவர்களுடைய அதிபதிகளும் கூடினர். ஆராதிப்பவர்களின் கூட்டங்கள் மாபெரும் கோவிலை நிரப்பி, கூரையைச் சுற்றியிருந்த காட்சியகத்தையும் நெருக்கியது. அது கொண்டாட்டமும் களிகூருதலுமான காட்சியாக இருந்தது. பலி ஆராதனையின் ஆடம்பரம் அங்கே இருந்து, அதை இசையும் விருந்தும் தொடர்ந்தது. பின்னர் தாகோனுடைய வல்லமையின் வெற்றிக் கோப்பையான சிம்சோன் உள்ளே கொண்டுவரப்பட்டான். அவனுடைய தோற்றத்தை ஒரு ஆர்ப் பரிப்பு வாழ்த்தியது. அவனுடைய துயரத்தை ஜனங்களும் அதிபதிகளும் பரிகசித்து, தங்கள் தேசத்தை அழித்தவனை கவிழ்த்த தெய்வத்தைப் புகழ்ந்தனர். சிறிது நேரம் கழித்து, தளர்ந்தவனைப்போல் அந்தக் கோவிலின் கூரையைத் தாங்கியிருந்த மையத்தூண்களில் சாய்ந்துகொள்ள அவன் அனுமதி கோரினான். பின்னர் கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படி, இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, என்னைப் பலப்படுத்தும். என்ற மௌனமான ஜெபத்தை ஏறெடுத்தான். இந்த வார்த்தைகளோடு தன்னுடைய வல்லமையான புயங்களினால் அந்தத் தூண்களை சுற்றிப்பிடித்து என் ஜீவன் பெலிஸ்த ரோடே கூட மடியக்கடவது என்று கூக்குரலிட்டு குனிய, கூரை விழுந்து அந்த திரளான கூட்டத்தை ஒரேயடியாக அழித்தது. இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும் போது அவனால் கொல்லப் பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.PPTam 738.3

    விக்கிரகமும் அதை ஆராதித்தவர்களும் ஆசாரியர்களும் குடியானவர்களும் போர்வீரரும் மேன்மையானவர்களும் தாகோனுடைய கோவிலின் இடிபாடுகளுக்குள் ஒன்றாகப் புதைக்கப்பட்டனர். அவர்களுக்கு நடுவே தம்முடைய ஜனத்தை விடுவிக்கும்படி தேவன் தெரிந்து கொண்ட அவனுடைய இராட்சத உருவமும் இருந்தது. இந்த வீழ்ச்சியைக் குறித்த செய்திகள் இஸ்ரவேலின் தேசத்திற்குக் கொண்டுசெல்லப்பட சிம்சோனின் உறவினர்கள் மலையிலிருந்து வந்து எதிர்ப்பாரின்றி விழுந்து போன வீரனின் சரீரத்தை எடுத்துச் சென்றனர். சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம் பண்ணினார்கள்.PPTam 739.1

    சிம்சோனின் வழியாக இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கத் துவங்குவான் என்ற தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறியது. ஆனால் தேவனுக்குத் துதியும் தேசத்திற்கு மகிமையுமாயிருந்திருக்க வேண்டியவனின் வாழ்க்கைப் பதிவு எவ்வளவு இருட்டும் பயங்கரமுமானதாக இருக்கிறது. தெய்வீக அழைப்பிற்கு சிம்சோன் உண்மையாக இருந்திருந் தானானால், அவனை கனப்படுத்தி உயர்த்துவதில் தேவனுடைய நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கும். ஆனால் அவன் சே ாதனைக்கு ஒப்புக்கொடுத்து நம்பிக்கைக்கு உண்மையற்றவனென்று நிரூபித்தான். அவனுடைய வேலை தோல்வியிலும் அடிமைத்தனத்திலும் மரணத்திலுமே நிறைவேறியது.PPTam 739.2

    சரீரப்பிரகாரமாக பூமியின் மேல் சிம்சோன்தான் மிக பலமான மனிதன். ஆனால் சுயகட்டுப்பாட்டிலும் உண்மையிலும் உறுதியிலும் அவன் மிகவும் பலவீனமானவர்களில் ஒருவனாயிருந்தான். பலமான உணர்ச்சிகளை பலமான குணமாக அநேகர் தவறாக எடுத்துக்கொள்ளுகின்றனர். ஆனால் தன்னுடைய உணர்ச்சி களினால் ஆட்சி செய்யப்படுகிறவன் பெலவீனமான மனிதன் என்கிறதே உண்மை . ஒரு மனிதனின் உண்மையான மேன்மை அவனைக் கட்டுப்படுத்துகிறவைகளினாலல்ல, அவன் கட்டுப் படுத்துகிற உணர்வுகளின் வல்லமையினாலேயே அளவிடப் படுகிறது.PPTam 739.3

    எதற்காக சிம்சோன் அழைக்கப்பட்டானோ அந்த வேலையை நிறைவேற்ற ஆயத்தப்படும்படி, தேவனுடைய ஏற்பாடு செய்யும் கவனம் அவன் மேலிருந்தது. அவனுடைய வாழ்க்கையின் தொடக்கம் சரீர பெலத்திற்கும் அறிவு சார்ந்த வீரியத்திற்கும் சன் மார்க்கத் தூய்மைக்கும் சாதகமான சூழ் நிலைகளால் சூழப்பட்டிருந்தது. ஆனால் துன்மார்க்க தோழமையின் செல் வாக்கின் கீழ் மனிதனுக்கு ஒரே பாதுகாப்பாய் இருக்கிற தேவன் மேல் இருந்த பிடியை அவன் விட்டான். எனவே தீமையின் அலைகளினால் அடித்துச் செல்லப்பட்டான். கடமையின் பாதையில் இருக்கிறவர்கள் போராட்டங்களுக்குள் கொண்டு வரப்படும் போது, தேவன் அவர்களைப் பாதுகாப்பார் என்று நிச்சயத்தோடு இருக்கலாம். ஆனால் மனிதர் சோதனையின் வல்லமையில் மனதார தங்களை வைக்கும் போது விரைவாகவோ அல்லது தாமதமாகவோ விழுவார்கள்.PPTam 740.1

    விசேஷமான வேலைக்கு தம்முடைய கருவிகளாக உப யோகிக்க தேவன் எண்ணியிருக்கிற அதே நபர்களை வழிவிலகச் செய்ய சாத்தான் தன்னுடைய அனைத்து வல்லமைகளையும் உபயோகிக்கிறான். நம்முடைய பெலவீனமான இடங்களில் அவன் நம்மைத் தாக்கி, முழு மனிதனையும் கட்டுப்படுத்த குணத்தின் குறைகளின் வழியாக வேலை செய்கிறான். இந்த குறைபாடுகள் நேசிக்கப்படும் போது வெற்றியடைவான் என்பதை அவன் அறிந்திருக்கிறான். எனினும் எவரும் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமில்லை. தன்னுடைய பலமற்ற முயற்சி களினால் தீமையின் வல்லமையை தனிமையில் வெற்றிகொள்ள மனிதன் விட்டுவிடப்படவில்லை . உதவி சமீபத்திலிருக்கிறது. மெய்யாகவே அதை வாஞ்சிக்கிற ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் அது கொடுக்கப்படும். யாக்கோபு தரிசனத்தில் கண்ட ஏணியில் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டுமிருந்த தேவதூதர்கள் மிக உயர்ந்த பரலோகம் வரையிலும் ஏற மனதாயிருக்கிற ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் உதவி செய்வார்கள்.PPTam 740.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents