Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    70 - தாவீதின் ஆட்சி

    தாவீது இஸ்ரவேலின் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டதும் தன்னுடைய ஆட்சியின் தலைமையகத்திற்கு ஏற்ற மிகவும் சரியான ஒரு இடத்தைத் தேடத் துவங்கினான். இராஜ்யத்தின் எதிர்கால தலைநகரமாக எப்ரோனிலிருந்து இருபது மைல் தொலைவிலிருந்த ஒரு இடம் தெரிந்து கொள்ளப்பட்டது . யோவா இஸ்ரவேலின்சேனைகளையோர்தானைக் கடந்து அழைத்து வருமுன்பு அது சாலேம் என்று அழைக்கப்பட்டது. இந்த இடத்திற்கருகில்தான் ஆபிரகாம் தன்னை தேவனுக்கு உண்மையானவனாக நிரூபித்தான். தாவீது முடி சூட்டப்பட்டதற்கு எண்ணுறு வருடங்களுக்கு முன்பு உன்னதமான தேவனுக்கு ஆசாரியனாயிருந்த மெல்கிசேதேக்கின் இடமாக இந்த இடம் இருந்தது. இது தேசத்தில் உயரத்திலிருந்த மையப்பட்டணமாக, சுற்றிலும் இருந்த மலைகளினால் பாதுக்காக்கப்பட்டிருந்தது. பென்யமீனுக்கும் யூதாவிற்கும் இடையே எல்லையாக, எப்பீராயீமிற்கு அருகிலும் மற்ற கோத்திரங்கள் எளிதாக வந்தடையும் இடமாகவும் இது இருந்தது.PPTam 924.1

    இந்த இடத்தைப் பிடிப்பதற்கு சீனாய் மற்றும் மோரியா மலைகளின் பாதுகாப்பான இடங்களிலிருந்த கானானியரில் மீந்திருந்தவர்களை எபிரெயர் துரத்த வேண்டும். இந்த அரண் யாபேஸ் என்று அழைக்கப்பட்டு, அதன் குடிகள் எபூசியர்கள் என்று அறியப்பட்டிருந்தனர். நூற்றாண்டுகளாக துளைக்கக்கூடாத ஒரு இடமாக யாபேஸ் காணப்பட்டிருந்தது. எனினும் யோவாபின் தலைமையின் கீழ் எபிரெயர்களால் இது முற்றுகையிடப்பட்டு பிடிக்கப்பட்டது. இந்த யோவாப் அவனுடைய தைரியத்தின் பிரதிபலனாக இஸ்ரவேலின் சேனைகளுக்குப் படைத்தளபதி ஆனான். யாபேஸ் தேசத்தின் தலைநகரமாகியது. அதன் அஞ்ஞானப் பெயர் எருசலேம் என்று மாற்றப்பட்டது.PPTam 924.2

    மத்திய தரைக்கடலில் இருந்த செல்வ செழிப்பான தீருவின் இராஜா ஈராம் இஸ்ரவேலின் இராஜாவுடன் இப்போது நட்பைத் தேடி, எருசலேமில் ஒரு அரண்மனையைக் கட்ட தாவீதிற்கு தன்னுடைய உதவியை அளித்தான். தீருவிலிருந்து கட்டட நிபுணர்கள், வேலையாட்கள் மற்றும் விலையுயர்ந்த மரங்கள் கேதுரு மரங்கள் இன்னும் மற்ற மதிப்புள்ள பொருட்கள் கொண்ட தூதுவர்கள் நீண்ட வரிசையில் அனுப்பப்பட்டனர்.PPTam 925.1

    தாவீதின் கீழ் இணைந்ததால் வளர்ந்து கொண்டிருந்த இஸ்ரவேலின் பலமும், அரணான யாபேசை அவர்கள் ஆக்கிரமித்ததும், திருவின் இராஜாவாகிய ஈராமுடன் கொண்ட நட்பும் பெலிஸ்தரின் விரோதத்தைத் தூண்டியது. அவர்கள் பலமான படையோடு நாட்டின் மீது படையெடுத்து, எருசலேமிற்குச் சற்றுத் தொலைவிலிருந்த ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் நின்றனர். தாவீது தெய்வீக நடத்துதலுக்காக காத்திருக்கும்படி அவனுடைய யுத்தமனிதரோடு சீயோன் கோட்டைக்கு சென்றான். பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் : போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.PPTam 925.2

    தாவீது சத்துருவின் மேல் உடனடியாகச் சென்று அவர்களை தோற்கடித்து அழித்து அவர்களுடைய வெற்றியை உறுதி பண்ணும்படி அவர்கள் தங்களுடன் கொண்டு வந்திருந்த அவர்களுடைய தெய்வங்களை எடுத்துக்கொண்டான். தோல்வியின் சிறுமையினால் எரிச்சலடைந்து பெலிஸ்தர் மேலும் மிகப் பெரிய படையோடு கூடி போராட்டத்திற்குத் திரும்பினர். பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். மீண்டும் தாவீது ஆண்டவரைத் தேட, மாபெரும் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பவர் இஸ்ரவேலின் சேனைகளுடைய கட்டளைகளை தம் கையில் எடுத்துக்கொண்டார்.PPTam 925.3

    நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள் மேல் பாய்ந்து, முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும் போது, சீக்கிரமாய் எழும்பிப்போ ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்று சொல்லி, தேவன் தாவீதுக்குப் போதித்தார். தாவீது சவுலைப்போல தன்னுடைய செ ராந்த வழியைத் தெரிந்தெடுத்திருப்பானானால் அவனுக்கு வெற்றி கிடைத்திருக்காது. ஆனால் ஆண்டவர் கட்டளையிட்டதைப் போல் செய்து, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக்காசே ர்மட்டும் முறிய அடித்தார்கள். அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் காத்தர் சகல ஜாதிகளின் மேலும் வரப்பண்ணினார் - 1 நாளா, 14:16,17) PPTam 926.1

    இப்போது தாவீது சிங்காசனத்தின் மேல் உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டான். வெளியிலிருந்த சத்துருக்களின் படையெடுப்பிலிருந்து விடுபட்டவனாக தான் மிகவும் நேசித்திருந்த நோக்கத்தை தேவனுடைய பெட்டியை எருசலேமிற்குக் கொண்டு வருவதை நிறைவேற்றத் திரும்பினான். ஒன்பது மைல்களுக்கு அப்பாலிருந்த கீரியாத்யாரீமில் அநேக வருடங்களாக கர்த்தருடைய பெட்டி தங்கியிருந்தது. தேசத்தின் தலைநகரம் தெய்வீக சமூகத்தின் அடையாளத்தினால் கனப்படுத்தப்பட வேண்டும் என்பது சரியானதாயிருந்தது.PPTam 926.2

    இஸ்ரவேலின் முன்னணி மனிதரில் முப்பதாயிரம் பேரை தாவீது அழைத்தனுப்பினான். ஏனெனில் இந்த சம்பவத்தை மாபெரும் களிப்பும் கவர்ச்சிகரமுமான காட்சியோடு செய்ய வேண்டும் என்பது அவனுடைய விருப்பமாயிருந்தது. மக்கள் மகிழ்ச்சியோடு பதில் தந்தனர். பரிசுத்த வேலையிலிருந்த தன் சகோதரரோடு பிரதான ஆசாரியனும் பிரபுக்களும் கோத்திரங்களின் முதன்மையானவர்களும் கீரியாத்யாரீமில் கூடினர். தாவீது பரிசுத்த வைராக்கியத்தினால் ஜொலித்தான். கர்த்தருடைய பெட்டி அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, மாடுகளால் இழுக்கப்பட்ட புது இரத்தத்தில் வைக்கப்பட்டது. அபினதாபின் இரண்டு மகன்கள் அதோடு சென்றனர்.PPTam 926.3

    இஸ்ரவேலின் மனிதர் உயர்ந்த ஆரவாரத்தோடும் களிப்பின் பாடல்களோடும் பின்தொடர், திரள் கூட்டமான குரல்கள் இசைக்கருவிகளின் இசையோடு இணைந்தன. தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் ... சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள். இப்படிப்பட்ட வெற்றியின் காட்சியை இஸ்ரவேலர் வெகு நாட்களாக கண்டிருக்கவில்லை. பவித்திரமான மகிழ்ச்சியோடு திரண்ட இந்த ஊர்வலம் பரிசுத்த நகரத்தை நோக்கி மலைகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நகர்ந்தது.PPTam 926.4

    ஆனால் அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான். அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான். களிகூர்ந்திருந்த கூட்டத்தின் மேல் சடிதியான திகில் விழுந்தது. தாவீது ஆச்சரியப்பட்டுPPTam 927.1

    மிகவும் எச்சரிக்கையடைந்து தன் இருதயத்தில் தேவனுடைய நீதியை கேள்வி எழுப்பினான். தெய்வீக சமூகத்தின் அடையாளமாக கர்த்தருடைய பெட்டியை அவன் தேடிக்கொண்டிருந்தான். பின்னர் ஏன் மகிழ்ச்சியின் காலத்தை துக்கம் மற்றும் புலம்பலின் சம்பவமாக திருப்பும்படி அந்த பயங்கரமான நியாயத்தீர்ப்பு அனுப்பப்பட்டிருந்தது? கர்த்தருடைய பெட்டியை தன் அருகிலே வைத்திருப்பது பாதுகாப்பற்றது என்று உணர்ந்தவனாக இருந்த இடத்திலேயே அதை வைக்கும்படி தாவீது தீர்மானித்தான். அருகிலே கித்திய னாகிய ஓபேத் ஏதோமின் வீட்டிலே அதற்கு ஒரு இடம் அமைக் கப்பட்டது.PPTam 927.2

    மிக வெளிப்படையாக கொடுக்கப்பட்டிருந்த ஒரு கட்டளையை மீறினதால் வந்த தெய்வீக நியாயத்தீர்ப்பே ஊசாவின் முடிவு. மோசேயின் வழியாக கர்த்தருடைய பெட்டியை எடுத்துச் செல்வதைக் குறித்த விசேஷ போதனைகளை ஆண்டவர் கொடுத்திருந்ததார். ஆரோனின் சந்ததியாரான ஆச ராரியர்களைத்தவிர வேறு எவரும் அதைத் தொடவோ அல்லது மூடப்படாதிருக்கும் போது அதைக் காணவோ கூடாது. தெய்வீக நடத்துதல் கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டு போகிறதற்கு வரக்கடவர்கள், அவர்கள் சாகாதபடிக்கு பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள், (எண்.4:15) என்று இருந்தது. ஆசாரியர் கர்த்தருடைய பெட்டியை மூடவேண்டும். பின்னர் அதன் இரு பக்கங்களிலும் வளையங்களுக்குள் நுழைக்கப்பட்டிருந்து ஒருபோதும் அகற்றப்பட்டிராத கோலினால் கோகாத்தியர் அதைச் சுமக்க வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தின் திரைசீலைகள் பலகைகள் மற்றும் தூண்கள் மேல் பொறுப்பாயிருந்த கெர்சே னியாருக்கும் மெராரியருக்கும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்ததை எடுத்துச் செல்லுவதற்கு மோசே வண்டிகளையும் மாடுகளையும் கொடுத்திருந்தான். கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை, தோள் மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது - எண். 79. இவ்விதம் கீரியாத்யாரீமிலிருந்து பெட்டியைக் கொண்டு வருவதில் நேரடியா கவும் காரணம் கொடுக்கக்கூடாத விதத்திலும் ஆண்டவருடைய கட்டளை மீறப்பட்டிருந்தது.PPTam 927.3

    தாவீதும் அவனுடைய மக்களும் பரிசுத்தமான வேலையை நடப்பிக்கக் கூடியிருந்தனர். அதில் அவர்கள் மகிழ்ச்சியோடும் மனதாரவும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவருடைய நடத்துதலுக்கு இசைவாக செய்யப்படாததினால் ஆண்டவரால் அந்த சேவையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேவனுடைய பிரமாணத்தைக் குறித்த அறிவைப் பெற்றிராத பெலிஸ்தர் இஸ்ரவேலுக்கு அதைத் திரும்ப அனுப்பின்போது பெட்டியை வண்டிலின்மேல் வைத்தனர்.PPTam 928.1

    ஆண்டவர் அவர்கள் செய்த முயற்சியை ஏற்றுக்கொண்டார். ஆனால் இஸ்ரவேலர் அவர்களுடைய கரங்களில் அனைத்துக் காரியங்களையும் குறித்த தேவனுடைய சித்தத்திற்கான தெளிவான வார்த்தைகளைக் கொண்டிருந்தனர். இந்தப் போதனைகளை நெகிழ்ந்தது தேவனுக்குக் கனவீனமாயிருந்தது . ஊசாவின் மேல் துணிகரத்தின் மாபெரும் குற்றம் தங்கியது . தேவனுடைய பிரமாணத்தை மீறியது அதன் பரிசுத்தத்தைக் குறித்த அவனுடைய உணர்வை குறைத்திருந்தது. தன்மேலிருந்த அறிக்கை செய்யப்படாத பாவங்களோடு, தெய்வீகத் தடையிருந்தும் தேவனுடைய சமூகத்தின் அடையாளத்தைத் தொட அவன் துணிந்தான். பகுதி கீழ்ப்படிதலையோ அவருடைய பிரமாணங்களை தளர்வான முறையில் நடத்துவதையோ தேவனால் அங்கீகரிக்க முடியாது. ஊசாவின் மேல் வந்த நியாயத்தீர்ப்பினால் தமது கோரிக்கைகளுக்கு கண்டிப்பான கவனம் கொடுக்க வேண்டியதின் முக்கியத்தை அனைத்து இஸ்ரவேலின் மேலும் பதிக்க அவர் திட்டமிட்டார். இவ்விதம் மக்களை மனந்திரும்புவதற்கு நடத்துவதினால், ஒரு மனிதனின் மரணம் ஆயிரக்கணக்கானோர் மேல் நியாயத்தீர்ப்பை செலுத்தும் அவசியத்தைத் தடுக்கக்கூடும்.PPTam 928.2

    தன்னுடைய சொந்த இருதயம் தேவனோடு முழுவதும் சரியாக இல்லை என்று உணர்ந்தவனாக, ஒருவேளை தன்பங்கில் இருக்கும் சில பாவங்கள் தன் மேல் நியாயத்தீர்ப்புகளைக் கொண்டு வருமோ என்று, ஊசாவின் மேல் வந்த அடியைப் பார்த்து தாவீது கர்த்தருடைய பெட்டிக்குப் பயந்தான். ஆனால் ஓபேத் ஏதோம் பயத்தோடும் நடுக்கத்தோடும் களி கூர்ந்தபோதும் கீழ்ப்படிகிறவர்களுக்கான தேவனுடைய தயவின் உறுதிமொழியாயிருந்த பரிசுத்த அடையாளத்தை வரவேற்றான். அனைத்து இஸ்ரவேலின் கவனமும் அந்த கித்தியனிடமும் அவனுடைய வீட்டாரிடமும் திருப்பப்பட்டது. அவனுக்கு என்ன நடக்கும் என்று பார்க்கும் படி அனைவரும் கவனித்திருந்தனர். கர்த்தர் ஓபேத் ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.PPTam 928.3

    தாவீதின் மீது தெய்வீகக் கண்டனை அதன் வேலையை நடப்பித்தது. தேவனுடைய பிரமாணங்களின் பரிசுத்தத்தையும் கண்டிப்பாக அதற்குக் கீழ்ப்படிவதன் அவசியத்தையும் இதற்கு முன் உணராதவிதத்தில் உணரும்படி அவன் நடத்தப்பட்டான். ஓபேத் ஏதோமின் வீட்டிற்குக் காண்பிக்கப்பட்ட தயவு கர்த்தருடைய பெட்டி தனக்கும் தன் மக்களுக்கும் ஆசீர்வாத்தைக் கொண்டுவரும் என்று நம்பிக்கைக் கொள்ள மீண்டும் தாவீதை நடத்தியது.PPTam 929.1

    மூன்று மாதங்களின் முடிவில் கர்த்தருடைய பெட்டியைக் கொண்டுவர மற்றொரு முயற்சி எடுக்க அவன் தீர்மானித்தான். இப்போது அவன் ஆண்டவருடைய நடத்துதலுக்கேற்ப தெய்வீக நடத்துதலை செயல்படுத்த ஒவ்வொரு குறிப்பிற்கும் ஊக்கமான கவனம் கொடுத்தான். மீண்டும் தேசத்தின் முதன்மையானவர்கள் அழைக்கப்பட்டனர். கித்தியனுடைய கூடாரத்தைச் சுற்றி மாபெரும் கூட்டம் கூடியது. பயபக்தியான கவனத்தோடு கர்த்தருடைய பெட்டி தெய்வீக நியமத்தின்படியான மனிதரின் தோள்கள் மேல் வைக்கப்பட்டது. திரளானவர்கள் வரிசையில் நிற்க நடுங்கும் இருதயத்தோடு மிகப் பெரிய ஊர்வலம் மீண்டும் முன்னேறியது. ஆறு அடிகள் முன்னேறியதும் நிற்கும் படியாக தாவீதின் நடத்துதலின்படி எக்காளம் ஒலிக்க, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலி செலுத்தவேண்டும். நடுக்கம் மற்றும் திகிலின் இடத்தை இப்போது களிகூருதல் எடுத்துக்கொண்டது. இராஜா தன்னுடைய அரச உடையை அப்புறம் வைத்து ஆசாரியர் அணியும் சணல் ஏபோத்தை தரித்துக்கொண்டான். இந்தச் செயலினால் ஆசாரிய வேலையை தான் எடுத்துக்கொண்டதாக அவன் குறிப்பிடவில்லை . ஏனெனில் ஆசாரியர்தவிர மற்றவர்களாலும் சில வேளைகளில் ஏபோத்து அணிந்து கொள்ளப்பட்டது. இந்த பரிசுத்த ஆராதனையில் அவன் தன்னுடைய குடிமக்களுக்கு இணையாக தன் இடத்தை எடுத்துக்கொள்ளுவான். இந்த நாளில் யெகோவா ஆராதிக்கப்பட வேண்டும். அவரே பயபக்திக்கான ஒரே நபராக இருக்கவேண்டும்.PPTam 929.2

    மீண்டும் நீண்ட ஊர்வலம் நகர்ந்தது. இசை வாத்தியங்கள், வீணை, எக்காளம், கைத்தாளங்களின் இசைபரலோகத்தை நோக்கி அநேக குரல்களின் இசையோடு கலந்து பறந்தது. இசையின் அளவோடு சென்றவனாக மகிழ்ச்சியில் தாவீது சணல் நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப்பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்.PPTam 930.1

    தேவனுக்கு முன்பாக பரிசுத்தமான மகிழ்ச்சியிலிருந்த தாவீதின் நடனம் இன்பத்தை நேசிக்கிறவர்களால் நாகரீகமான நடனத்தை நியாயப்படுத்தும்படி குறிப்பிடப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட வாதத்திற்கு எந்த இடமும் இல்லை. நம்முடைய நாட்களின் நடனம் மடத்தனத்தோடும் நடு இரவின் களியாட்டத்தோடும் தொடர்பு கொண்டிருக்கிறது. ஆரோக்கியமும் சன்மார்க்கமும் இன்பத்திற்கு பலி கொடுக்கப்படுகின்றன. நடன அறைக்கு அடிக்கடிப் போகிறவர்களின் சிந்தையிலோ அல்லது பயபக்தியிலோ தேவன் இல்லை. ஜெபமோ அல்லது துதியின் பாடலோ அவர்களுடைய கூடுகைகளில் பங்குபெறக்கூடாததென்று உணரப்படும். இந்த சோதனை தீர்மானமானதாயிருக்கவேண்டும். பரிசுத்தமான காரியங்களின் மேல் இருக்கிற அன்பை பலவீனப்படுத்தி, தேவனுடைய ஊழியத்திலிருக்கும் மகிழ்ச்சி யைக் குறைக்கும் பொழுது போக்குகள் கிறிஸ்தவர்களால் தேடப்படக்கூடாது.PPTam 930.2

    தேவனுடைய பெட்டியைக் கொண்டு வந்ததில் தேவனை மகிழ்ச்சியோடு துதித்ததிலிருந்த இசையும் நடனமும் நாகரீர் நடனத்திலிருக்கிற எந்தப் படிவத்தின் சாயலையும் சிறிதளவும் பெற்றிருக்கவில்லை . அது தேவனை நினைவுகூர்ந்து அவருடைய பரிசுத்த நாமத்தை உயர்த்தும் இயல்போடு இருந்தது. மற்ற தோ தேவனை மறந்து அவரை அவமதிக்க மனிதரை நடத்தும் சாத்தானுடைய கருவியாக இருக்கிறது.PPTam 930.3

    காணக் கூடாத அவர்களுடைய அரசரின் பரிசுத்தமான அடையாளத்தைப் பின்பற்றி வெற்றியின் ஊர்வலம் தலைநகரைச் சென்றடைந்தது. அப்போது பரிசுத்த நகரத்தின் வாசல்களைத் திறக்க வேண்டும் என்று சுவரின் மேலிருந்த காவல்காரரைக் கோரிய பாடல் எழுந்தது.PPTam 930.4

    வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள், அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.PPTam 931.1

    பாடகர்களும் இசை வாசிப்பாளரும் சேர்ந்த கூட்டம் : யார் இந்த மகிமையின் ராஜா? என்று பதில் கொடுத்தது. மற்றொரு கூட்டத்திலிருந்து : அவர்வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே என்று பதில் வந்தது.PPTam 931.2

    பின்னர் நூற்றுக்கணக்கான குரல்கள் வெற்றியின் பாடலில் உயர்ந்தது.PPTam 931.3

    வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.PPTam 931.4

    மீண்டும் யார் இந்த மகிமையின் ராஜா? என்ற மகிழ்ச்சியான கேள்வி கேட்கப்பட்டது. திரளான கூட்டத்தின் குரல் பெருவெள்ளத்து இரைச்சலின் தொனியில் அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா என்று மகிழ்ச்சியில் கூறுவது கேட்கப்பட்டது.PPTam 931.5

    பின்னர் வாசல்கள் அகலமாகத் திறக்கப்பட ஊர்வலம் நுழைந்தது. கர்த்தருடைய பெட்டி அதைப் பெற்றுக்கொள்ளும் படியாக ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த கூடாரத்திற்குள் பயபக்தியான மரியாதையோடு வைக்கப்பட்டது. பரிசுத்தமான கூடாரத்தின் முன்பாக பலிபீடங்கள் எழுப்பப்பட்டன . சமாதானபலிகள் மற்றும் தகன பலிகளின் புகையும் தூபவர்க்கத்தின் மேகங்களும் துதிகளோடும் இஸ்ரவேலின்PPTam 931.6

    மன்றாட்டுகளோடும் பரலோகத்திற்கு எழுந்தன. ஆராதனை முடிவடைந்தது. இராஜாதானும் மக்கள் மேல் ஒரு ஆசீர்வாதத்தைக் கூறினான். பின்னர் அரசதாராளத்தோடு உணவு மற்றும் திராட்சரசம் அவர்களுக்கு புத்துணர்வளிக்கும் படி பகிர்ந்தளிக்கப்பட்டது.PPTam 931.7

    இதுவரையில் தாவீதின் அரசாட்சியைக் குறித்திருந்த சம்பவங்களுள் மிகவும் பரிசுத்தமான சம்பவத்தின் கொண்டாட்டமான இந்த ஆராதனையில் அனைத்து கோத்திரங்களின் பிரதிநிதிகளும் பங்கெடுத்திருந்தனர். தெய்வீக ஏவுதலின் ஆவியானவர் இராஜாவின் மேல் தங்க, இப்போது அஸ்தமித்துக்ெ காண்டிருந்த சூரியனின் கடைசி கதிர்கள் ஆசரிப்புக் கூடாரத்தை பரிசுத்தமான வெளிச்சத்தினால் நிரப்ப, இஸ்ரவேலின் சிங்காசனத்திற்கு மிக அருகில் இப்போது அவருடைய சமூகத்தின் ஆசீர்வாதமான அடையாளம் இருப்பதினால், தேவனுக்கு நன்றியோடு அவனுடைய இருதயம் உயர்த்தப்பட்டது.PPTam 931.8

    இவ்வாறு சிந்தித்தவனாக தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்கு தாவீது அரண்மனையை நோக்கித் திரும்பினான். ஆனால் தாவீதின் இருதயத்தை அசைத்திருந்த ஆவியைக் காட்டிலும் மிகவும் வேறுபட்டிருந்த ஒரு ஆவியோடு மகிழ்ச்சியின் காட்சியைக் கண்டிருந்த ஒருவர் அங்கே இருந்தார். கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தி யாகிய மீகாள் பலகணி வழியாகப் பார்த்து, தாவீதுராஜா கர்த் தருக்கு முன்பாகக் குதித்து, நடனம் பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள். தாவீது அரண்மனைக்குத் திரும்பும் வரையிலும் தன்னுடைய உணர்வுகளின் கசப்பில் அவளால் காத்திருக்க முடியவில்லை. அவனைச் சந்திக்கும்படி அவள் வெளியே சென்று அவனுடைய தயவான வாழ்த்துதலுக்கு கசப்பான வார்த்தைகளை வீசினாள். அவளுடைய வார்த்தைகளின் முரண்பாடு கூர்மையானதும் நடுங்கச் செய்வதுமாயிருந்தது.PPTam 932.1

    அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப் போடுகிறது போல், இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.PPTam 932.2

    மீகாள் நிந்தித்து அவமதித்திருந்தது தேவனுடைய ஆராதனையையே என்று தாவீது உணர்ந்து, உன் தகப்பனைப் பார்க்கிலும் அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ர வேலாகிய கர்த்தருடைய ஜனத்தின் மேல் தலைவனாகக் கட்டளையிடும் படிக்குத் தெரிந்து கொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன் : அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங் கூட மகிமையாய் விளங்குவேன் என்று கடுமையாகப்பதில் கொடுத்தான். தாவீதின் கடிந்து கொள்ளுதலோடு ஆண்டவருடையதும் சேர்ந்தது. பெருமையினாலும் அகந்தையி னாலும் மீகாளுக்கு மரணமடையும் நாள் மட்டும் பிள்ளை இல்லா திருந்தது.PPTam 932.3

    கர்த்தருடைய பெட்டியை கொண்டுவந்ததோடு இணைந்த பவித்திரமாக சடங்குகள் இஸ்ரவேலரின் மனங்களில் ஆழமான பதிப்பை உண்டாக்கி ஆசரிப்புக் கூடார ஊழியத்தில் ஆழமான வாஞ்சையைத் தூண்டி யெகோவாவிற்கான அவர்களுடைய பக்தியை புதியதாக கிளறியிருந்தது. தாவீது தன் வல்லமையிலிருந்த அனைத்தினாலும் இந்த பதிப்புகளை ஆழப்படுத்த முயற்சித்தான். பாடலின் தொழுகை மத ஆராதனையில் வழக்கமான பங்காக செய்யப்பட்டது. தாவீது ஆசரிப்புக் கூடாரத்தின் வேலையிலிருந்த ஆசாரியருக்காக மாத்திரமல்ல, வருடாந்தர பண்டிகைகளில் தேசத்தின் பலிபீடத்திற்கு வரும் மக்கள் அவர்களுடைய பிரயாணங்களில் பாடுவதற்காகவும் சங்கீதங்களை இயற்றினான். இவ்விதம் கொடுக்கப்பட்ட செல்வாக்கு நீண்ட தூரம் சென்று தேசத்தை விக்கிரகாராதனையிலிருந்து விடுவிப்பதில் முடிந்தது. சுற்றிலுமிருந்த அநேக ஜாதிகள் இஸ்ரவேலின் செழிப்பைக் கண்டு, தம்முடைய ஜனங்களுக்காக இப்படிப்பட்ட மாபெரும் காரியங்களைச் செய்த இஸ்ரவேலின் தேவனைக்குறித்து பிரியமாக நினைக்க நடத்தப்பட்டனர்.PPTam 932.4

    மோசேயினால் கட்டப்பட்ட கூடாரம், கர்த்தருடைய பெட்டி யைத்தவிர ஆசரிப்புக் கூடார ஊழியங்களோடு தொடர்புடைய மற்ற அனைத்தோடும் இன்னமும் கிபியாவில் இருந்தது. எருச லேமை தேசத்தின் மதமையமாக்குவதுதாவீதின் நோக்கமாயிருந்தது. அவன் தனக்கென்று ஒரு அரண்மனையை எழுப்பியிருந்தான். தேவனுடைய பெட்டி கூடாரத்திற்குள் தங்கியிருப்பது தகுதியான தல்ல என்று அவன் உணர்ந்தான். தங்களுடைய அரசரான யெகோ வாவின் தங்கியிருக்கும் சமூகத்தினால் தேசத்திற்குக் கொடுக்கப் பட்டிருந்தகனத்தை, இஸ்ரவேலர் பாராட்டுவதை வெளிப்படுத்தும் விதமான மாட்சிமையோடு அதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட அவன் தீர்மானித்தான். நாத்தான் தீர்க்கதரிசியிடம் தன்னுடைய நோக்கத் தைச் சொல்ல, நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல் லாம் செய்யும், கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்ற உற்சாகமான பதிலை அவன் பெற்றுக்கொண்டான்.PPTam 933.1

    ஆனால் அந்த இரவிலேயே ஆண்டவருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி. இராஜாவிற்கான செய்தியைக் கொடுத்தது.PPTam 933.2

    தேவனுக்கு ஒரு வீட்டை கட்டும் பாக்கியம் தாவீதிற்குக் கொடுக்கப்படாது. ஆனால் தேவ தயவின் நிச்சயம் அவனுக்கும் அவன் சந்ததிக்கும் இஸ்ரவேலின் இராஜ்யத்திற்கும் கொடுக் கப்பட்டது. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத் துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்துக்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன் போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள் வரையில் நடந்தது போலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும் படி அவர்களை நாட்டினேன்.PPTam 933.3

    தேவனுக்கு ஒரு வீட்டைக்கட்டதாவீது விரும்பியிருந்தபோது இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டு பண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார். நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். அவன் என் நாமத்துக்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்ய பாரத்தின் சிங்காச னத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன் என்ற வாக்குத்தத்தம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.PPTam 934.1

    தாவீது ஏன் ஆலயத்தைக் கட்டக்கூடாது என்பதற்கான காரணம், நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய், நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட வேண்டாம் .... இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல் லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன், ஆகையால் அவன் பேர் சாலொமோன் என்னப்படும், அவன் நாட்களில் இஸ்ரவேலின் மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன். அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் (1 நாளா . 22:8-10) என்று அறிவிக்கப்பட்டது.PPTam 934.2

    அவனுடைய இருதயத்தில் நேசித்திருந்த நோக்கம் மறுக்கப்பட்ட போதும் தாவீது நன்றியோடு செய்தியைப் பெற்றுக்கொண்டு, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? கர்த்தராகிய ஆண்டவரே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்ச காரியமாயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற தேவரீர் உம்முடைய அடியா னுடைய வீட்டைக் குறித்து, வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியை மனுஷர் முறைமையாய்ச் சொன்னீரே என்று கூறினான். பின்னர் தேவனுடனான தன் உடன்படிக்கையை அவன் புதுப்பித்தான்.PPTam 934.3

    செய்யவேண்டுமென்று அவனுடைய இருதயத்தில் நோக்க மாயிருந்த வேலையை நடப்பிப்பது அவனுடைய பெயருக்கு கனமாயிருந்து அவனுடைய இராஜ்யத்திற்கு மகிமையை கொண்டு வரும் என்று தாவீது அறிந்தான். ஆனாலும் தன்னுடைய சித்தத்தை தேவனுடைய சித்தத்திற்கு ஒப்படைக்க ஆயத்தமாயிருந்தான். இவ்விதம் வெளிக்காட்டப்பட்ட நன்றியறிதலான விட்டு விலகல் அபூர்வமாகவே கிறிஸ்தவர்கள் நடுவிலுங்கூட காணப்படுகிறது. மனித பெலத்தின் உச்ச வயதைக் கடந்து முதிர்ந்தவர்கள் பல வேளைகளில், தங்கள் இருதயத்தின் நோக்கமாயிருக்கிற ஒரு பெரிய காரியத்தை நிறைவேற்றும் நம்பிக்கையை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதைச் செய்யத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். அந்த வேலை அவனிடம் கொடுக்கப்படவில்லை என்று அவருடைய தீர்க்கதரிசி வழியாக தாவீதிடம் பேசினதைப்போன்று, தேவனுடைய ஏற்பாடு அவர்களோடு பேசலாம். அதை நிறைவேற்ற மற்றொருவருக்குப் பாதையை ஆயத்தம் செய்வது அவர்களுடைய வேலையாயிருக்கலாம். ஆனாலும் தெய்வீக நடத்துதலுக்கு நன்றியோடு ஒப்படைப்பதற்குப் பதிலாக அவமானப்படுத்தப்பட்டதாகவும் நிராகரிக்கப்பட்டதாகவும் நினைத்துப் பின்வாங்கி, தாங்கள் வாஞ்சித்திருந்த அந்த ஒரு காரியத்தை செய்யக்கூடாதெனில், வேறு ஒன்றையுமே செய்யக்கூடாது என்று நினைக்கிறார்கள். தாங்கள் செய்யக்கூடிய வேலை நெகிழப்பட்டிருக்கும் போது, அநேகர் செய்ய பலமில்லாத வேலை நிறைவேற்ற வீணாக முயற்சித்து, நம்பிக்கையற்ற பலத்தோடு சுமக்கக்கூடாத பொறுப்புகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். தங்கள் பங்கில் இணைந்து செயல்படாத இந்தக் குறைவினால் மாபெரும் வேலை தடை செய்யப்படுகிறது அல்லது முடக்கப்படுகிறது.PPTam 935.1

    தாவீது யோனத்தானுடனான உடன்படிக்கையில் தன்னுடையல் பெறும்போது சவுலின் குடும்பத்திற்கு தயவு காண்பிப்பதாக உறுதியளித்திருந்தான். தன்னுடைய செழிப்பில் இந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தவனாக, யோனத்தான் நிமித்தம் என்னால் தயவு பெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று இராஜா விசாரித்தான். குழந்தைப் பருவத்திலிருந்து முடமாயிருந்த யோனத்தானின் குமாரன் மேவிபோசேத்தைக்குறித்து அவனுக்கு அறிவிக்கப்பட்டது. யெஸ்ரயேலில் பெலிஸ்தரால் சவுல் தோற்கடிக்கப்பட்டபோது மேவிபோசேத்தின் தாதி அவனோடு ஓடிச்செல்லும் முயற்சியில் அவனை தவறவிட, அவன் வாழ்நாள் முழுவதும் இவ்விதம் முடமானான். தாவீது இப்போது அவனை அவைக்கு அழைத்து மாபெரும் தயவோடு சேர்த்துக்கொண்டான். சவுலினுடைய தனிப்பட்ட சொத்துக்கள் அவனுடைய வீட்டாருக்கு ஆதரவாக திரும்ப அவனிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் யோனத்தானின் குமாரன் அரச மேசையில் அனுதினமும் அமரு கிறவனாக, இராஜாவின் தொடர்விருந்தாளியாக இருக்கவேண்டும். தாவீதின் சத்துருக்களிடமிருந்து வந்த செய்திகளினால் அவனை ஒரு அபகரிப்போனென்று அவனுக்கெதிரான ஒரு பலமான சிந்தையை வளர்க்க மேவிபோசேத் நடத்தப்பட்டிருந்தான். ஆனால் பேரரசனின் தாராளமும் தன்னை மரியாதையோடு வரவேற்றதும் அவனுடைய தொடர்ச்சியான தயவும் இந்த வாலிபனின் மனதை வெற்றிகொண்டது. அவன் தாவீதோடு பலமாக இணைக்கப்பட்டு, அவனுடைய தகப்பன்யோனத்தானைப் போலவே தேவன் தெரிந்து கொண்ட அரசனுடைய விருப்பங்களோடு தன்னுடைய விருப்பங்களும் ஒன்றாக இருப் பதை உணர்ந்தான்.PPTam 935.2

    தாவீது இஸ்ரவேலின் சிங்காசனத்தின் மேல் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் தேசம் மிக நீண்ட சமாதான காலத்தை அனுபவித்தது. சுற்றிலுமிருந்த ஜனங்கள் தேசத்தின் பலத்தையும் ஐக்கியத்தையும் கண்டு, வெளிப்படையான விரோதம் காண்பிப்பதிலிருந்து விலகியிருப்பது விவேகம் என்று விரைவில் நினைத்தனர். தாவீது தன்னுடைய இராஜ்யத்தை அமைப்பதிலும் மேலே கொண்டுவருவ திலும் ஆக்கிரமிக்கப்பட்டு வலிய தாக்குவதைத் தவிர்த்திருந்தான். எனினும் கடைசியாக இஸ்ரவேலரின் பழைய சத்துருவான பெலிஸ் தர்மேலும் மோவாபியர் மேலும் யுத்தஞ் செய்து இருவரையும் வெற்றி கொண்டு அவர்களை தனக்குக் கப்பங்கட்டச் செய்தான்.PPTam 936.1

    பின்னர் தாவீதின் இராஜ்யத்திற்கு எதிராக சுற்றியிருக்கும் தேசங்களின் திரண்டு பரந்த அணி உருவானது. அதிலிருந்து மிகப்பெரிய யுத்தங்களும், அவனுடைய ஆட்சியின் வெற்றிகளும், அவனுடைய வல்லமைக்கு மிகப் பரந்த உயர்வும் உண்டானது. உண்மையில் தாவீதின் வளரும் வல்லமையின் மேல் உண்டான பொறாமையினால் துளிர்த்த இந்த எதிரிநாடுகள் அவனால் சிறிதும் தூண்டப்பட்டவைகள் அல்ல. அவைகளின் எழுச்சிக்கு நடத்தின் சூழ்நிலைகள் : சவுலின் உக்கிரத்திலிருந்து தப்பியோடின் போது தாவீதிற்கு தயவு காண்பித்த அம்மோனிய இராஜாவான நாகாஷின் மரணத்தை அறிவித்த செய்திகள் எருசலேமிற்கு வந்தன. அப் பொழுது தாவீது : ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயை செய்தது போல், அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயை செய்வேன் என்று சொல்லி தன்னுடைய நெருக்கத்தில் தனக்குக் காண்பிக்கப்பட்ட தயவை நன்றியோடு பாராட்டுவதை வெளிக் காட்டும் வாஞ்சையில் இப்போது அம்மோனிய இராஜாவின் மகனான ஆனோனுக்கு இரக்க செய்தியோடு தூதுவர்களை அனுப்பினான்.PPTam 936.2

    ஆனால் மரியாதையான செயல் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டது. அம்மோனியர் மெய்யான தெய்வத்தை வெறுத்து இஸ்ரவேலரின் மிகக் கசப்பான சத்துருக்களாயிருந்தனர். தாவீதிற்குக் காட்டப்பட்ட நாகாஷின் தயவு, இஸ்ரவேலின் இராஜாவான சவுலின் மேலிருந்த விரோதத்தினால் தான் முழுமையாக தூண்டப்பட்டிருந்தது. ஆனோனின் ஆலோசகர்களால் தாவீதின் செய்தி தவறாகப் பொருட்படுத்தப்பட்டது. அவர்கள் : தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம் பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவு பார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்று கூறினார்கள். அவனுடைய ஆலோசகர்களின் ஆலோசனையினால் தான் ஐம்பது வருடங்களுக்கு முன்கிலேயாத் யாபேசின் மக்களிடம் கொடுமையான நிபந்தனையை கோர நாகாஷ் நடத்தப்பட்டான். அம்மோனியர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தபோது அவர்கள் சமாதான உடன்படிக்கைக்காக விண்ணப்பித்திருந்தனர். நாகாஷ் அனைவருடைய வலது கண்ணையும் பிடுங்கும் சந்தர்ப்பத்தைக் கோரினான். இஸ்ரவேலின் இராஜா அவர்களுடைய கொடுமையான திட்டத்தை எப்படி முறியடித்தான் என்பதையும், அவர்கள் சிறுமைப்படுத்தி சிதைத்திருக்கக் கூடிய மக்களை எப்படி காப்பாற்றினான் என்பதையும் அம்மோனியர் இன்னமும் தெளிவாக நினைவில் வைத்திருந்தனர். இஸ்ரவேலின் மேலிருந்த அதே வெறுப்பு இன்னமும் அவர்களை தூண்டியிருந்தது. தாவீதின் செய்தியை ஏவியிருந்த தாராளமான ஆவியைக் குறித்த எந்த புரிந்து கொள்ளுதலும் அவர்களுக்கு இருக்கமுடியாது. சாத்தான் மனிதரின் மனங்களைக் கட்டுப்படுத்தும் போது மிகச் சிறந்த நோக்கங்களையும் தவறாக எண்ணுகிற பொறாமையையும் சந்தேகத்தையும் எழுப்பிவிடுவான். ஆனோன் அவர்களுடைய ஆலோசனைகளைகவனித்து தாவீதின் தூதுவர்களை வேவுகாரராக கருதி அவமானத்தையும் இகழ்ச்சியையும் அவர்களுக்குக் கொடுத்தான்.PPTam 937.1

    அம்மோனியரின் மெய்யான குணம் தாவீதிற்கு வெளிப்படும் படியாகவே எந்த தடையுமின்றி தங்கள் இருதயங்களின் தீய நோக்கங்களை செயல்படுத்த அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் துரோகமான புறஜாதி மக்களுடன் இஸ்ரவேலர் ஒரு ஒப்பந்தத்தில் நுழைய வேண்டுமென்பது தேவனுடைய நோக்கமல்ல.PPTam 938.1

    இப்போதைப்போலவே முற்காலங்களிலும் தூதுவர்களின் வேலை புனிதமாக கருதப்பட்டது. உலகளாவிய தேசங்களின் சட்டம், தனிப்பட்ட கொடுமைக்கோ அல்லது அவமானத்திற்கோ எதிரான பாதுகாப்பை அவர்களுக்கு நிச்சயித்திருந்தது. தூதுவர்கள் அவனுடைய ஆட்சியின் பிரதிநிதிகளாக நிற்க, அவர்களுக்குக் காட்டப்பட்ட எந்தவொரு அவமரியாதையும் கௌரவமின்மையும் உடனடியான பதிலைக் கோரியது. இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட அவமதிப்பு நிச்சயமாக பதிலளிக்கப்படும் என்று அறிந்து அம்மோனியர் யுத்தத்திற்கு ஆயத்தமடைந்தனர். அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்ட போது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசெ பாப்பொத்தாமியாவிலும் மாக்கா சோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரைவீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம் தாலந்து வெள்ளி அனுப்பி, முப்பத்தீராயிரம் இரதங்களையும், இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள், அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம் பண்ணவந்தார்கள். 1 நாளாகமம் 19:6,7.PPTam 938.2

    அது மெய்யாகவே வல்லமை மிக்க கூட்டணிதான். ஐபிராத்து நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையே இருந்த குடிகள் அம்மோனியரோடு ஒப்பந்தம் செய்திருந்தனர். இஸ்ரவேலின் இராஜ்யத்தை நசுக்கிப்போட கானானின் வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்த படை சிறந்த சத்துருக்களால் சூழப்பட்டது. PPTam 938.3

    தங்கள் நாட்டின் மேல் படையெடுக்கும் வரையிலும் எபிரெயர்கள் காத்திருக்கவில்லை. யோவாபின்கீழ் அவர்களுடைய படை யோர்தானைக் கடந்து அம்மோனியரின் தலைநகரை நோக்கி முன்னேறியது. எபிரெய தளபதி தன்னுடைய படையை களத்திற்கு நடத்திச் சென்ற போது தைரியமாயிரு, நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன் கொண்டிருக்கக்கடவோம் ; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக (1 நாளா. 19:13) என்று கூறி அவர்களை போராட்டத்திற்கு ஊக்கப்படுத்த தேடினான். எதிரிநாடுகளின் இணைந்த படைகள் முதல் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்டன. எனினும் போட்டியை விட்டுவிட மனமின்றி அடுத்த வருடம் யுத்தத்தைப் புதுப்பித்தன. சீரியாவின் இராஜா தன்னுடைய படைகளைச் சேர்த்து மிகப் பெரிய படையோடு இஸ்ரவேலைப் பயமுறுத்தினான். தாவீது இந்த போராட்டத்தின் விளைவு என்ன வாயிருக்கும் என்பதை உணர்ந்து தனிப்பட்ட முறையில் களத்திற்கு வந்தான். தேவனுடைய ஆசீர்வாதத்தினால் எதிரிநாடுகள் மிகவும் மோசமாக தோற்கடிக்கப்பட, லீபனோனிலிருந்து ஐ பிராத்து வரையிலும் சீரியர் யுத்தத்தை மாத்திரம் நிறுத்தாது, இஸ்ரவேலுக்கு பகுதிகட்டுகிறவர்களுமானார்கள். அம்மோனியருக்கு எதிராக தாவீது பலத்தோடு யுத்தத்தில் நுழைந்து, அவர்களுடைய அரண்கள் விழுந்து முழு தேசமும் இஸ்ரவேலின் ஆட்சிக்குள் வருமளவும் யுத்தத்தை நடத்தினான்.PPTam 938.4

    முழுமையான அழிவைக் குறித்து தேசத்தை பயமுறுத்தின் ஆபத்துக்கள் தாமும் தேவனுடைய ஏற்பாட்டினால் இதற்கு முன் இருந்த மகிமையைக் காட்டிலும் மேன்மைக்கு உயர்த்தும் வழிகளாயின. தன்னுடைய குறிப்பிடத்தகுந்த விடுதலையை கொண்டாடும் படி தாவீது இவ்விதம் பாடினான்.PPTam 939.1

    கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக. என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர். அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன். தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம் பண்ணின் தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார் - சங். 18:46-50.PPTam 939.2

    தாவீதின் பாடல்கள் முழுவதிலும் யெகோவாவே அவர்களுடைய பலனும் விடுவிக்கிறவருமாயிருக்கிறார் என்னும் நினைவு மக்களில் பதிக்கப்பட்டது.PPTam 939.3

    எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப் படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது - சங்.33:16,17.PPTam 940.1

    தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்ட ளையிடும். உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம். என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. நீரே எங்கள் சத்துருக்களி னின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர் சங், 44:4-7.PPTam 940.2

    சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மை பாராட்டுவோம். சங். 20:7.PPTam 940.3

    இஸ்ரவேலின் இராஜ்யம் இப்போது ஆபிரகாமிற்குக் கொடுக் கப்பட்டு பின்னர் மோசேயிடம் திரும்ப கொடுக்கப்பட்ட, எகிப்தின் நதிதுவக்கி ஐ பிராத்து நதி என்னும் பெரிய நதி மட்டுமுள்ளதும், இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் (ஆதி. 15:18) என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் எல்லையைத் தொட்டிருந்தது. இஸ்ரவேல் வல்லமையான ஜாதியாகி சுற்றிலும் இருந்த மக்களால் மதிக்கப்பட்டும் பயத்திற்குரியதுமாகியிருந்தது. தன்னுடைய சொந்த அரசாட்சியில் தாவீதின் வல்லமை மிகவும் பெரியதாயிற்று. காலங்கள் நெடுகிலும் சில அரசர்களால் மாத்திரமே பெற முடிந்த மக்களுடைய விருப்பத்தையும் நட்பையும் அவன் சம்பாதித்திருந் தான். அவன் தேவனைக் கனம் பண்ணியிருந்தான். அவர் இப் போது அவனை கனம் பண்ணிக்கொண்டிருந்தார்.PPTam 940.4

    ஆனாலும் செழிப்பின் மத்தியில் ஆபத்து பதுங்கியிருந்தது. தாவீதினுடைய மிகச் சிறந்த வெளிப்படையான வெற்றியின் காலத்தில் தான் மாபெரும் பாவத்தில் அவனை மிகவும் சிறுமைப் படுத்தின் தோல்வியை அவன் சந்தித்தான்.PPTam 940.5