Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    15 - ஈசாக்கினுடைய திருமணம்

    ஆபிரகாம் வயது முதிர்ந்தவனாகி விரைவில் மரித்துவிடுவான் என்று எதிர்பார்க்கப்பட்டான். என்றாலும், தனது சந்ததிக்கு வந்த வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலைப் பாதுகாக்க ஒரு காரியம் இன்னும் அவனுக்குச் செய்யவேண்டியதிருந்தது. ஈசாக்குதான் தேவனுடைய பிரமாணத்தைக் காப்பவனாகவும், தெரிந்து கொள் ளப்பட்ட ஜனத்துக்கு தகப்பனாகவும் இருக்கும் படி தெய்வீகத் தினால் நியமிக்கப்பட்டவன். ஆனால் இன்னமும் அவன் திருமண மாகாதிருந்தான். கானானின் குடிகள் விக்கிரக வணக்கத்துக்குத் தங்களை கொடுத்திருந்தார்கள். அவருடைய ஐனத்துக்கும் அவர் களுக்கும் இடையிலான திருமணங்கள் விசுவாசத்துரோகத்துக்கு வழிநடத்தும் என்று அறிந்து, அப்படிப்பட்ட திருமணத்தை தேவன் தடை செய்திருந்தார். தனது குமாரனைச் சூழ்ந்திருந்த சீரழிக்கும் செல்வாக்குகளின் விளைவுகளைக்குறித்து முற்பிதா பயந்தான். ஆபிரகாமுடைய தேவன்மேல் வைத்த இயல்பான விசுவாசமும், அவருடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்தலும் ஈசாக்கின் குணத்தில் பிரதிபலித்தது. ஆனாலும் அந்த வாலிபனுடைய விருப்பங்கள் பலமானதாயிருக்க, அவன் மென்மையான, விட்டுக்கொடுக்கும் பண்பைக் கொண்டிருந்தான். தேவனுக்குப் பயப்படாத ஒருவரோடு இணைவானானால், இணக்கத்திற்காக கொள்கைகளைத் தியாகம் செய்துவிடும் ஆபத்தில் அவன் இருப்பான். ஆபிரகாமின் மனதில், தன் குமாரனுக்கு ஒரு மனைவியை தெரிந்தெடுக்கும் காரியம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. தேவனிடமிருந்து அவனை பிரித்துவிடாத ஒருத்தியை அவன் மணம் புரிய வேண்டும் என்று அவன் ஏக்கத்தோடிருந்தான்.PPTam 193.1

    பழங்காலத்தில் திருமண நிச்சயங்கள் பொதுவாக பெற்றோர் களால் செய்யப்பட்டன. தேவனை தொழுது கொண்டவர்களுக்கு மத்தியில் இதுதான் வழக்கமாக இருந்தது. தாங்கள் நேசிக்கக்கூடாத ஒருவரை எவரும் திருமணம் செய்யவேண்டியதில்லை. என்றாலும், தங்கள் பிரியத்தை வைக்கும்போது, அனுபவம் வாய்ந்த, தேவனுக் குப் பயந்த தங்களுடைய பெற்றோரின் நிதானிப்பினால் வாலிபர்கள் வழிநடத்தப்பட்டார்கள். இதற்கு எதிரிடையான ஒரு வழியை தொடருவது பெற்றோருக்கு அவமரியாதையை தருவதாகவும் குற்றமாகவுங்கூட கருதப்பட்டது.PPTam 194.1

    ஈசாக்கு தன் தகப்பனுடைய ஞானத்தையும் காரியத்தையும் நம்பினவனாக, தெரிந்தெடுப்பதில் தேவன்தாமே வழிநடத்துவார் என்று நம்பி இந்தக் காரியத்தை அவரிடம் கொடுப்பதில் திருப்தி யடைந்திருந்தான். முற்பிதாவின் நினைவுகள், மெசொப்பொத்தா மியாவிலிருந்த அவனுடைய தகப்பனின் இனத்திடம் திரும்பியது. விக்கிரக வணக்கத்தை விட்டுவிடாதிருப்பினும் மெய்யான தேவனைக்குறித்த அறிவையும், அவரை வணங்குவதையும் அவர்கள் சிந்தையில் வைத்திருந்தார்கள். அவர்களிடம் போகும்படி ஈசாக்கு கானானைவிட்டுப் போகக்கூடாது. ஆனால் தன் வீட்டைவிட்டு வந்து, ஜீவனுள்ள தேவனை தூய்மையாக ஆராதிப்பதை பராமரிக் கும்படி அவனுடன் இணையக்கூடிய ஒருத்தியை அவர்களுக் குள்ளே கண்டுபிடிக்க முடியலாம். இந்த முக்கியமான காரியத்தை பக்தியும் அனுபவமும் உள்ள, பலமான நிதானம் கொண்ட, தனக்கு நீண்டகாலம் உண்மையாக சேவை செய்த, வயதில் மூத்த தனது ஊழியக்காரனிடம் ஆபிரகாம் கொடுத்தான். கானானியர்களிலிருந்து தன் மகனுக்கு மனைவியை எடுக்கமாட்டேன் என்றும், மாறாக, மெசொபொத்தாமியாவிலிருக்கிற நாகோரின் குடும்பத்தில் ஒரு பெண்ணை தெரிந்தெடுப்போன் என்றும் ஆண்டவருக்கு முன்பாக ஒரு பவித்திரமான ஆணையிடும் படி அவன் இந்த ஊழியக்காரனிடம் கோரினான். ஈசாக்கை அங்கே கொண்டு போகக்கூடாதென்றும் கட்டளையிட்டான். தனது இனத்தை விட்டு வருகிற ஒரு பெண் கண்டுபிடிக்கப்பட முடியாதபோது, தூதுவன் இந்த ஆணையிலிருந்து விடுவிக்கப்படுவான். கடினமும் மென்மையுமான அவனுடைய பொறுப்பில் தேவன் அவனுடைய வேலையை வெற்றியாக முடிசூட்டுவார் என்று சொல்லி, முற்பிதா அவனை உற்சாகப்படுத்தினான். என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார் என்றான்.PPTam 194.2

    தூதுவன் தாமதிக்காமல் புறப்பட்டான். தன் கூட்டத்தாருக்கும் திரும்பி வரும்போது தன்னோடு வரக்கூடிய மணப்பெண்ணின் கூட்டத்திற்கும் உபயோகமாக பத்து ஒட்டகங்களையும், உத்தேசித்திருந்த மனைவிக்கும் அவளுடைய தோழிகளுக்கும் சில பரிசுகளையும் எடுத்துக்கொண்டு தமஸ்குவைத் தாண்டி, கிழக்கிலிருக் கும் மகா பெரிய ஆற்றின் கரையிலிருந்த செல்வமான சமபூமியை நோக்கி, தனது நீண்ட பிரயாணத்தைச் செய்தான். நாகோருடைய ஊரான ஆரானுக்கு வந்து, அந்தப்பகுதியிலுள்ள பெண்கள் மாலை வேளையில் தண்ணீர் எடுக்க வரும் கிணற்றண்டையில், மதிலுக்கு வெளியே நின்றான். அது அவனுக்கு ஆர்வமான, யோசனை நிறைந்த நேரமாயிருந்தது. அவன் செய்யும் தெரிந்துகொள்ளுதலிலிருந்து அவனுடைய எஜமானின் வீட்டாரை மாத்திரமல்ல, எதிர் கால தலைமுறையினரையும் முக்கியமான விளைவுகள் பின்தொடர லாம். முற்றிலும் அந்நியரான அவர்கள் நடுவே அவன் எவ்வாறு ஞானமாகத் தெரிந்தெடுக்க முடியும் ? தேவன் தமது தூதனை அவனோடு அனுப்புவார் என்ற ஆபிரகாமின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தவனாக, நல்ல வழிநடத்துதலுக்காக அவன் ஊக்க மாக ஜெபித்தான். தனது எஜமானுடைய குடும்பத்தின் தயவையும் உபசரிப்பையும் தொடர்ச்சியாக செயல்படுத்துவதில் அவன் பழக் கப்பட்டிருந்தான். இப்போது, மரியாதையினிமித்தம் செய்யப்படும் ஒரு செயல், தேவன் தெரிந்துகொண்ட பெண்ணை குறிப்பிட்டுக் காட்ட வேண்டும் என்று ஜெபித்தான்.PPTam 195.1

    ஜெபித்து முடித்தவுடனே பதில் வந்தது. அந்த கிணற்றண்டையிலே கூடிய பெண்களுக்குள்ளே ஒருவளின் மரியாதையான நடக்கை முறைகள் அவனுடைய கவனத்தைக் கவர்ந்தது. அவள் கிணற்றிலிருந்து வந்தபோது, அவள் தோளின் மேலிருந்த குடத்திலிருந்து தண்ணீர் கேட்டவனாக, இந்த அந்நியன் அவளைச் சந்திக் கச் சென்றான். அந்த விண்ணப்பம் உடனே, பிரபுக்களின் குமாரத்தி களுங் கூட தங்கள் தகப்பனுடைய மந்தைகளுக்குச் செய்யும் வழக்கமான சேவையாயிருந்த ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்க்கிறேன் என்ற கூடுதல் சலுகையோடு தயவான பதிலைப் பெற்றது. இவ்வாறு, விரும்பின் அடையாளம் கொடுக்கப்பட்டது. அந்தப் பெண் : மகா ரூபவதியாயிருந்தாள். அவளுடைய உடனடியான மரியாதை, ஒரு தயவான மனதிற்கும், சுறுசுறுப்பும் துடிப்பு மான இயல்பிற்கும் சான்று கொடுத்தது. இதுவரையிலும் தெய்வீக கரம் அவனோடிருந்தது. அவனுடைய தயவை ஐசுவரியமான பரிசுகளால் அங்கீகரித்த பிறகு, அவளுடைய பெற்றோரைக் குறித்து தூதுவன் கேட்டான். அவள் ஆபிரகாமின் சகோதரன் மகனான பெத்துவேலின் குமாரத்தி என்று அறிந்த போது, அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான்.PPTam 195.2

    அந்த மனிதன் அவளுடைய தகப்பன் வீட்டில் தங்க இடம் கேட்டான். அவனுடைய நன்றி கூறுதலில் அவன் ஆபிரகாமோடு கொண்டிருக்கும் தொடர்பு வெளிப்படுத்தப்பட்டது. அந்தப் பெண் வீட்டுக்கு வந்து நடந்தவைகளை அறிவித்தாள். அவள் சகோதரன் லாபான் அந்த அந்நியனையும் அவனோடிருப்பவர்களையும் அழைத்து வந்து உபசரிக்கும்படி உடனடியாக விரைந்தான்.PPTam 196.1

    தான் வந்த வேலையையும் கிணற்றண்டையில் செய்த ஜெபத்தையும் அதோடு இணைந்த எல்லா சூழ்நிலைகளையும் சொல்லும் முன்பு அவன் உணவில் பங்குபெறமாட்டான். இப்பொழுது நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர் களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலது புறத்தையாகிலும் இடது புறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான். பதிலாக இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம்பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது. இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள், கர்த்தர் சொன்ன படியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும் படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.PPTam 196.2

    குடும்பத்தின் சம்மதத்தைப் பெற்ற பிறகு, ஆபிரகாமின் மகனை மணம் செய்ய தன் தகப்பனுடைய வீட்டைவிட்டு வெகு தூரம் செல்ல சம்மதமா என்று ரெபெக்காளும் ஆலோசிக்கப்பட் டாள். ஈசாக்கின் மனைவியாயிருக்கும்படி தேவன் தன்னைத் தெரிந் தெடுத்திருக்கிறார் என்று நடந்தவைகளிலிருந்து அவள் நம்பினாள். எனவே, போகிறேன் என்றாள்.PPTam 196.3

    தனது வேலையின் வெற்றியைக் குறித்த எஜமானனின் மகிழ்ச்சியை எதிர்பார்த்தவனாக, தாமதிக்க மனதில்லாதிருந்தான். காலையிலே வீட்டை நோக்கி பயணப்பட்டார்கள். ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான். பக்கத்து தேசங்களிலிருந்த மந்தைகளைப் பார்த்துவிட்டு ஆரானிலிருந்து வரும் தூதுவனுக்காக எதிர்பார்த்திருக்க ஈசாக்கு தன் தகப்பனுடைய கூடாரத்திற்குத் திரும்பினான். ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம் பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது, ஒட்டகங்கள் வரக்கண்டான். ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது, ஊழியக்காரனை நோக்கி, அங்கே வெளியே நமக்கு எதிராக நடந்து வருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக் கொண்டாள். ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான். அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டு போய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.PPTam 196.4

    தேவனுக்குப் பயப்படுகிறவர்களுக்கும், அவருக்குப் பயப் படாதவர்களுக்கும் இடையே நடக்கிற திருமணங்களின் விளைவுகளை காயீனின் காலத்திலிருந்து தனது சொந்த காலம் வரைக்கும் ஆபிரகாம் குறித்து வைத்திருந்தான். ஆகாருடனான தன் சொந்த திருமணத்தின் விளைவுகளும் இஸ்மவேல் மற்றும் லோத்துவினுடைய திருமண உறவுகளும் அவன் முன் இருந்தன. ஆபிரகாமிலும் சாராளிலுமிருந்த விசுவாசக்குறைவினால் நீதியுள்ள வித்து, தேவபக்தியற்றதோடு கலந்ததால், இஸ்மவேலின் பிறப்பில் முடிவ டைந்தது. மகன் மேலிருந்த தகப்பனுடைய செல்வாக்கு, தாயின் விக்கிரக வணக்க இனத்தாலும், இஸ்மவேல் புறஜாதி மனைவி களோடு கொண்ட தொடர்புகளாலும் ஈடுகட்டப்பட்டது. ஆகாரின் பொறாமையும், அவள் இஸ்மவேலுக்காக தெரிந்தெடுத்த மனைவி களின் பொறாமைகளும், அவன் குடும்பத்தை ஒரு தடையாக சூழ்ந்து கொண்டது. அதை மேற்கொள்ளும்படி ஆபிரகாம் வீணா கவே முயன்றான்.PPTam 197.1

    ஆபிரகாம் ஆரம்பத்தில் கொடுத்த போதனைகள் இஸ்ம வேலின்மேல் பலனில்லாமல் போகவில்லை. ஆனாலும் அவனுடைய மனைவிகளின் தாக்கம், அவன் குடும்பத்தில் விக்கிரகாரா தனையை ஸ்தாபித்தது. தன் தகப்பனிடமிருந்து பிரிக்கப்பட்டு, தேவபயமும் அன்புமில்லாத இல்லத்தின் வாதங்களினாலும் சண் டைகளினாலும் கசப்படைந்தவனாக, கட்டுப்பாடற்ற வனாந்தர அதிபதியின் கொள்ளையடிக்கும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள இஸ்மவேல் விரட்டப்பட்டான். அவனுடைய கை எல்லா ருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் (ஆதி. 1612) இருந்தது. தன் பின்நாட்களில் அவன் தனது தீமையான குறித்து மனம் வருந்தி, தன் தகப்பனுடைய தேவ னிடத்துக்குத் திரும்பினான். ஆனால் அவன் சந்ததிக்குக் கொடுக் கப்பட்ட அந்த கனத்தின் முத்திரை பின்தங்கியிருந்தது. அவனிட மிருந்து வந்த வல்லமையான ஜாதி, அடங்காத அஞ்ஞான ஜாதி யாக, ஈசாக்கின் சந்ததியினரை எப்போதும் தொந்தரவு செய்து உபத் திரவப்படுத்துவதாக இருந்தது.PPTam 197.2

    லோத்துவின் மனைவி சுயநலமான மதமற்ற பெண்ணாக இருந்தாள். அவளுடைய செல்வாக்கு, ஆபிரகாமிடமிருந்து அவள் கணவனை பிரிக்கும்படி செயல்படுத்தப்பட்டது. அவளுக் காக இல்லாதிருந்தால், ஞானமுள்ள தேவனுக்குப் பயந்த முற்பிதா வின் ஆலோசனைகளில்லாத சோதோமில் அவன் தங்கியிருக்க மாட்டான். ஆரம்பத்தில் ஆபிரகாமிடமிருந்து பெற்ற விசுவாசமான போதனைகள் இல்லாதிருந்தால், அவனுடைய மனைவியின் தாக்க மும் அந்த துன்மார்க்கப் பட்டணத்தின் தோழமையும் தேவனிட மிருந்து பிரிந்து செல்ல அவனை நடத்தியிருக்கும். லோத்துவின் திருமணமும் அவன் தனது இல்லத்திற்காக தெரிந்து கொண்டதும் அநேக தலமுறைகளுக்கு தீமையுடனான போராட்டத்தில் வந்த தொடர் சம்பவ சங்கிலியின் முதல் இணைப்பாக உலகத்திற்கு இருந்தது.PPTam 198.1

    தேவனுக்கு பயப்படுகிற ஒருவரும் ஆபத்தின்றி தன்னை அவருக்கு பயப்படாதவரோடு இணைத்துக்கொள்ள முடியாது. இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ? ஆமோஸ் 33. திருமண உறவின் மகிழ்ச்சியும் செழிப்பும், இணைகிற கூட்டங்களின் ஒருமைப்பாட்டில் இருக்கிறது. ஆனால் விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் நடுவில் சுவையிலும், நாட்டங்களிலும், நோக்கங்களிலும் முற்றிலும் வேறுபட்ட அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. தங்களுக்கு இடையில் எவ்வித இசைவும் பொருத்தமும் இருக்க முடியாத இரண்டு எஜமானர்களுக்கு ஊழியஞ்செய்கிறார்கள். ஒருவருடைய கொள்கை எவ்வளவுதான் தூய்மையும் சரியுமாக இருந்தாலும், அவிசுவாசமுள்ள துணையின் செல்வாக்கு, தேவனை விட்டு தூர நடத்தும் இயல்பையே கொண்டிருக்கும்.PPTam 198.2

    மனந்திரும்பாத நிலையில் திருமண உறவிற்குள் நுழைந்த ஒருவன் தங்களுடைய மத விசுவாசத்தில் எவ்வளவு தூரம் வேறுபட்டிருந்தாலும், மனந்திரும்பும் போது தன் தோழிக்கு உண் மையாயிருக்கும்படியான பலமான கடமையின்கீழ் வைக்கப்படு கிறார். போராட்டங்களும் உபத்திரவங்களும் நோரிட்டாலும் தேவனுடைய கோரிக்கைகள் ஒவ்வொரு உலக உறவிற்கும் மேலாக வைக்கப்படவேண்டும். அன்பும் சாந்தமுமுள்ள ஆவியினால், விசுவாசியை வெற்றிகொள்ளும் தாக்கத்தை இந்த மெய்ப்பற்று பெறலாம். ஆனாலும் கிறிஸ்தவர்கள் தேவபக்தியற்ற வர்களோடு செய்யும் திருமணம் வேதாகமத்தில் விலக்கப்பட்டிருக்கிறது. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக் கப்படாதிருப்பீர்களாக. 2கொரி. 14, 17, 18.PPTam 198.3

    உலகம் எதினால் ஆசீர்வதிக்கப்படப்போகிறதோ, அந்த வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்கிறவனாக நியமிக்கப்பட்டதினால் ஈசாக்கு தேவனால் மேன்மையாக கனம் பண்ணப்பட்டான். என்ற போதும், தனது அனுபவமிக்க தேவனுக்குப் பயந்த ஊழியக் காரன் அவனுக்கு ஒரு மனைவியை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று தகப்பன் செய்த தீர்மானத்திற்கு, தான் நாற்பது வயதுள்ளவனாயிருந்தபோது ஒப்புக்கொண்டான். அந்தத் திருமணத்தின் விளைவு வேதவாக்கியங்களில் காட்டப்பட்டிருக்கிறபடி . ஈசாக்கு ரெபெக் காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டு போய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான் என்று இல்லத்தின் மகிழ்ச்சியைக் குறித்த இனிதான அழகான படமாயிருக்கிறது.PPTam 199.1

    ஈசாக்கின் வழிமுறைக்கும் நம்முடைய கால் வாலிபர்களின் கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொள்ளுகிறவர்களிடையே கூட இருக்கிற வாலிபரின் வழி முறைக்கும் எத்தனை வேறுபாடு இருக்கிறது! தங்களுடைய பிரியத்தை ஒருவர்மேல் வைப்பது, சுயம் மாத்திரமே ஆலோசிக்கப்பட வேண்டிய தேவனாவது அல்லது தங்கள் பெற்றோராவது எவ்விதத்திலும் கட்டுப்படுத்தக்கூடாத காரியம் என்று இளம் மனிதர்கள் பல வேளைகளில் உணருகிறார்கள். ஆண்மையையும் பெண்மையையும் அடைவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, தங்கள் சொந்த தெரிந்தெடுத்தலை நடப்பிக்க தங்களுடைய பெற்றோரின் உதவியின்றி தாங்கள் தாமே ஆற்றல் வாய்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய தவறை அவர்களுக்குக் காண்பிக்க ஒரு சில திருமண வருடங்களே பொதுவாக போதுமாயிருக்கும். ஆனாலும் அது பலவேளைகளில் அதனுடைய தீங்கான விளைவுகளைத் தடுக்க மிகுந்த தாமதமாயிருக்கும். ஏனெனில் அவசரமான தெரிந்து கொள்ளுதலை கட்ட ளையிட்ட அதே ஞானமின்மையும் சுயக்கட்டுப் பாடின்மையும், திருமண உறவு உளைச்சலின் நுகமாகும் வரையிலும் தீமையை இன்னும் அதிக கேடுள்ளதாக்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அநேகர் இந்த வாழ்க்கயினை சந்தோஷத்தையும் வரப்போகிற வாழ்க்கையைக் குறித்த நம்பிக்கையையும் உடைத்துப்போட்டிருக்கிறார்கள்.PPTam 199.2

    மிகவும் கவனமாக கருத்தில் கொள்ளப்படவும், வயதான அதிக அனுபவம் கண்ட நபர்களின் ஆலோசனை பெறப்படவும் வேண்டிய ஒரு காரியம் இருக்குமானால், அது திருமண காரியமே. எப்போதாகிலும் வேதம் ஒரு ஆலோசகராக தேவைப்பட்டிருக் குமானால், எப்போதாகிலும் தெய்வீக ஆலோசனை ஜெபத்தின் வழியாக தேடப்பட்டிருக்குமானால், அது நபர்களை வாழ்நாள் முழுவதும் கட்டிவைக்கிற அந்த அடி எடுத்துவைப்பதற்கு முந்தின் நேரமே !PPTam 200.1

    தங்கள் பிள்ளைகளின் எதிர்கால சந்தோஷத்திற்காக தங்கள் சொந்த கடமையைக் குறித்த கண்ணோட்டத்தை பெற்றோர்கள் ஒருபோதும் இழந்து விடக்கூடாது. தன் தகப்பனுடைய தீர்ப்புக்கு ஈசாக்கு கொடுத்த மரியாதை, கீழ்ப்படிதலான வாழ்க்கையை நேசிக்கும்படியாக அவனுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட பயிற்சியின் பலனே. பெற்றோர்களின் அதிகாரத்தை பிள்ளைகள் மதிக்க வேண்டும் என்று கோரிய அதே நேரம், அந்த அதிகாரம் சர்வாதி காரமாகவோ அல்லது சுயநலமானதாகவுமோ இல்லாமல், அன் பில் அடித்தளமிடப்பட்டு, அவர்களுடைய நலமும் மகிழ்ச்சியும் கவ னத்தில் கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறதற்கு ஆபிரகாமுடைய அனுதின வாழ்க்கை சாட்சி பகர்ந்தது.PPTam 200.2

    வாலிபரின் விருப்பங்கள் பொருத்தமான துணையின் மேல் வைக்கப்படுவதற்கேதுவாக அதை வழிநடத்தும் ஒரு கடமை தங்கள் மேல் வைக்கப்பட்டிருக்கிறது என்கிறதை தகப்பன்மார் களும் தாய்மார்களும் உணரவேண்டும். பிள்ளைகள் தூய்மையும் உன்னதமுமாயிருந்து, நன்மையும் உண்மையுமானவைகளால் கவரப்படுவதற்கேதுவாக, இப்படியாக இளமைக்காலத்திலிருந்தே தேவகிருபையின் ஒத்தாசையோடு தங்களுடைய சொந்த போதனைகளாலும் உதாரணத்தாலும் பிள்ளைகளின் மனங்களை வனை வது தங்களுடைய கடமை என்பதை அவர்கள் உணரவேண்டும். ஒத்தது ஒத்ததை கவருகிறது. ஒத்தது ஒத்ததைப் போற்றும். சத் தியம், தூய்மை, மற்றும் நன்மை ஆகியவைகளின் மேலிருக்கும் அன்பு, ஆத்துமாவில் இளமையிலேயே நடப்படட்டும். வாலிபர் இந்தக் குணங்களைக் கொண்டவர்களின் சமுதாயத்தைத் தேடுவார்கள்.PPTam 200.3

    பெற்றோர்கள், தங்கள் சொந்தக் குணங்களிலும் குடும்ப வாழ்க்கையிலும் பரலோகப் பிதாவினுடைய அன்பையும் நற்செயல்களையும் வாழ்ந்துகாட்டட்டும். இல்லம் சூரிய வெளிச்சத் தால் நிரப்பப்படட்டும். இது நிலத்தை விடவும் பணத்தை விடவும் மிக அதிக பயனுள்ளதாயிருக்கும். தங்கள் குழந்தைப்பிராயத்தின் இல்லத்தை பரலோகத்துக்கு அடுத்ததாக, சமாதானமும் சந்தோஷ மும் கொண்ட இடமாக திரும்பிப்பார்ப்பதற்கேதுவாக, இல்லத்தின் அன்பு அவர்கள் இருதயங்களில் உயிருள்ளதாக இருக்கட்டும், குடும்ப நபர்கள் அனைவரும் ஒரே குணத்தைக் கொண்டிருப்ப தில்லை. பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் செயல்படுத்து கிற சமயங்கள் அடிக்கடி இருக்கும். ஆனாலும் அன்பினாலும் சுய ஒழுங்கினாலும் அனைவரும் மிக நெருக்கமான இணைப்பிற்குள் கட்டப்படலாம்.PPTam 201.1

    மெய்யான அன்பு உன்னதமும் பரிசுத்தமுமான கொள்கை. அது உணர்ச்சியினால் எழுப்பப்பட்டு, கடுமையாகச் சோதிக்கப் படும் போது சடிதியில் மரித்துப்போகிற அன்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பெற்றோரின் இல்லத்தில் கடமைகளில் உண்மையாயிருப்பதின் வழியாகவே வாலிபர்கள் தங்கள் சொந்த குடும்பங்களுக்காக ஆயத்தப்படவேண்டும். அவர்கள் இங்கே சுயமறுப்பைப் பழகி, தயவையும் மரியாதையையும் கிறிஸ்தவ உருக்கத்தையும் வெளிக்காட்டட்டும். இவ்வாறாக, அன்பு அவர்கள் இருதயங்களில் அனலாக வைக்கப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட குடும்பத்தாரிட மிருந்து தனது சொந்தக் குடும்பத்தின் தலைவனாக நிற்கும்படி வெளியே செல்லுகிறவன் வாழ்க்கைத் துணையாக தான் தெரிந் தெடுத்திருக்கிறவளின் சந்தோஷத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்று அறிந்திருப்பான். திருமணம், அன்பின் முடிவாயிராமல், அதன் துவக்கமாயிருக்கும்.PPTam 201.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents