Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents

கோத்திரப்பிதாக்களும் தீர்க்கதரிசிகளும்

 - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    16 - யாக்கோபு மற்றும் ஏசா

    ஈசாக்கின் இரட்டைக் குமாரர்களான யாக்கோபும் ஏசாவும் குணத்திலும் வாழ்க்கையிலும் குறிப்பிடும்படியான மாறுபாட்டைக் காண்பித்தார்கள். இந்த வேறுபாடு அவர்களுடைய பிறப்பிற்கு முன்பாகவே தேவனுடைய தூதனால் முன் சொல்லப்பட்டது. ரெபெக்காளின் கலக்கமான ஜெபத்துக்குப் பதிலாக, இரண்டு குமாரர்கள் அவளுக்குக் கொடுக்கப்படுவார்கள் என்று அறிவித்த போது, அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் இருவரும் வல்லமையான ஜாதிகளுக்குத் தலைவர்களாவார்களென்றும், ஆனால் ஒன்று மற்றதைவிடவும் பெரியதாக இருக்குமென்றும், இளையவன் தலையான இடத்திலிருப்பான் என்றும் தூதன் அவளுக்குத் திறந்து காண்பித்தான்.PPTam 202.1

    ஏசாசுயத்தை திருப்திப்படுத்துவதில் விருப்பம் கொண்டவனா கவும், தன் விருப்பங்களையெல்லாம் நிகழ்காலத்தின் மேல் வைத்தவனாகவும் வளர்ந்தான். கட்டுப்பாட்டில் பொறுமையிழந்து, வேட்டையாடுவதிலிருக்கும் சுதந்திரத்தில் மகிழ்ச்சி கொண்டு, இளமையிலேயே ஒரு வேட்டைக்காரனின் வாழ்க்கையைத் தெரிந்தெடுத்தான். என்றபோதும் அவன் தகப்பனுக்குப் பிரியமான வனாயிருந்தான். அமைதியான சமாதானப் பிரியனாயிருந்த அந்த மேய்ப்பன், பயமின்றி மலைகள் மேலும் வனாந்தரங்களிலும் அலைந்து, தன் தகப்பனுக்கான பொழுதுபோக்கோடும் தனது சவா லான வாழ்க்கையின் உணர்ச்சியூட்டுகிற சம்பவங்களோடும் வீட் டுக்குத் திரும்பின் இந்த மூத்த குமாரனின் தைரியத்தாலும் வீரியத் தாலும் கவரப்பட்டான். யாக்கோபு சிந்தனையுள்ள, ஜாக்கிரதையான, கவனிப்புக் கொடுக்கிற, நிகழ்காலத்தைவிடவும் எப்போ தும் எதிர்காலத்தை யோசிக்கிறவனாக, மந்தைகளை கவனிப்பதிலும் நிலத்தை உழுவதிலும் ஈடுபட்டு இல்லத்திலே வசிப்பதில் திருப்தியடைந்திருந்தான். அவனுடைய பொறுமையான விடா முயற்சியும், பணத்தை கவனமாக செலவிடும் குணமும், தொலை நோக்கும் அவனுடைய தாயால் மதிக்கப்பட்டது. அவனுடைய பிரியங்கள் ஆழமும் பலமுமாயிருந்தது. அவனுடைய மென்மையான இடையறாதகவனம், ஏசாவினுடைய கொந்தளிக்கிற மற்றும் எப்போதாகிலும் காட்டப்படுகிற தயவு கொடுத்ததைக்காட்டிலும் அதிகமான சந்தோஷத்தை அவளுக்குச் சேர்த்தது. ரெபெக்காளுக்கு யாக்கோபுதான் அன்பான பிள்ளை.PPTam 202.2

    ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்டு, அவனுடைய குமாரனுக்கு உறுதிபண்ணப்பட்ட வாக்குத்தத்தங்கள் தான் ஈசாக்காலும் ரெபெக் காளாளும் அவர்களுடைய ஆசைகள் மற்றும் நம்பிக்கைகளின் மாபெரும் பொருளாயிருந்தது. இந்த வாக்குத்தத்தங்களோடு ஏசாவும் யாக்கோபும் பரீட்சயமாகியிருந்தனர். சேஷ்ட புத்திரபாகம் உலக சம்பத்தை சுதந்தரிப்பது மாத்திரமல்ல. ஆவிக்குரிய தலைமை யையும் உள்ளடக்கியிருந்ததால், அதை மிக முக்கியமான காரிய மாக கருதும்படி அவர்கள் கற்பிக்கப்பட்டனர். அதைப் பெற்றுக் கொண்டவன் குடும்பத்தின் ஆசாரியனாயிருக்கவேண்டும். அவ னுடைய வம்சத்தில் தான் உலகத்தின் மீட்பர் வருவார். மறுபக்கம், சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் மேல் கடமை களும் தங்கியிருந்தது. அதன் ஆசீர்வாதங்களை சுதந்தரிப்பவன், தன் வாழ்க்கையை தேவனுடைய சேவைக்கு அர்ப்பணிக்க வேண்டும். ஆபிரகாமைப் போல, அவன் தெய்வீக கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். தன் திருமணத்திலும் குடும்ப உறவு களிலும் பொது வாழ்க்கையிலும் தேவனுடைய சித்தத்தை ஆலோ சிக்கவேண்டும்.PPTam 203.1

    இந்த சிலாக்கியங்களையும் நிபந்தனைகளையும் ஈசாக்கு தன் பிள்ளைகளுக்குத் தெரியப்படுத்தினான். கூடவே, முதல் மகனான ஏசாதான் சேஷ்டபுத்திர பாகத்துக்கு தகுதியானவன் என்றும் தெளிவாக அறிவித்தான். ஆனால் ஏசாவுக்கு அர்ப்பணிப்பதில் விருப்பமில்லை. மதவாழ்க்கை வாழ எந்த நாட்டமும் இல்லை. ஆவிக்குரிய சேஷ்ட புத்திரபாகத்தோடு இணைந்திருந்த கோரிக் கைகள் அவனுக்கு வரவேற்கத்தகாதவையாக, வெறுக்கக்கூடிய கட்டுப்பாடுகளாகக் கூட இருந்தன. ஆபிரகாமோடு செய்யப்பட்ட தெய்வீக உடன்படிக்கையின் நிபந்தனையான தேவனுடைய பிரமாணம், அடிமைத்தனத்தின் நுகமாக ஏசாவால் கருதப்பட்டது. சுயத்தில் திளைப்பதை விரும்பின் அவன், தான் விரும்பின்படி செய்கிற சுதந்தரத்தைப் போல வேறு எதையும் வாஞ்சிக்கவில்லை. அவனுக்கு அதிகாரமும், செல்வமும், விருந்தும், களியாட்டமும் தான் மகிழ்ச்சியானவைகள். கட்டுப்பாடற்ற சுதந்திரம் தந்த தனது வனாந்திர அலைச்சல் வாழ்க்கையில் அவன் மேன்மை பாராட்டினான். ரெபெக்காள் தூதனுடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, தன் குமாரர்களுடைய குணங்களை தனது கணவனைவிடவும் தெளிவான நுண்ணறிவோடு வாசித்தாள். தெய்வீக வாக்குத்தத்தத் தின் சுதந்திரம் யாக்கோபிற்காகத்தான் உத்தேசிக்கப்பட்டிருக்கிறது என்பதில் நம்பிக்கையாயிருந்தாள். ஈசாக்கிடம் தூதனின் வார்த்தைகளை அவள் மீண்டும் சொன்னாள். ஆனால் தகப்னுடைய பிரியம் மூத்தமகனில் மையங் கொண்டிருந்தது. அவன் தனது நோக்கத்தில் அசையாது இருந்தான்.PPTam 203.2

    சேஷ்ட புத்திரபாகம் தனக்குத்தான் வரவேண்டும் என்கிறதைக் குறித்த தெய்வீக அறிவிப்பை யாக்கோபு தன் தாயிடமிருந்து அறிந்து கொண்டான். அது அவனுக்கு அளிக்கக்கூடிய வாய்ப்பு களுக்காக அவன் சொல்லமுடியாத வாஞ்சையால் நிரப்பப்பட்டான். அவனுடைய தகப்பனின் சொத்துக்களை அடைவதற்காக அவன் தாகமாயிருக்கவில்லை. ஆவிக்குரிய சேஷ்ட புத்திரபாகமே அவனுடைய ஏக்கத்தின் காரியமாக இருந்தது. நீதியுள்ள ஆபிர காமைப் போல தேவனோடு பேசி, தனது குடும்பத்துக்காக பாவ நிவாரண பலியை செலுத்தி, தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்துக்கும் வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவிற்கும் மூதாதையனாக இருந்து, உடன்படிக்கையின் ஆசீர்வாதத்தில் சேர்க்கப்பட்டிருந்த நித்திய சுதந்தரத்தை சுதந்தரித்து இங்கேதான் அவனுடைய தீவிரமான வாஞ்சையைத் தூண்டிவிட்ட வாய்ப்புகளும் கனங்களும் இருந்தன. அவனுடைய மனதுகாணப்பட்டிராத அதன் ஆசீர்வாதங்களைத் தேடி எப்போதும் எதிர்காலத்தை நோக்கிப்போய்க்கொண்டிருந்தது.PPTam 204.1

    தன் தகப்பன் ஆவிக்குரிய சேஷ்ட புத்திரபாகத்தைக்குறித்து சொன்ன அனைத்தையும் அவன் கவனித்துக் கேட்டான். தன் தாயிடமிருந்து கேட்டவைகளை கவனமாகப் பாதுகாத்து வைத்திருந்தான். அவனுடைய வாழ்க்கையின் ஆட்கொள்ளும் ஆசை யாகும் வரை இரவும் பகலும் இந்த காரியம் அவன் மனதை ஆட் கொண்டது. அவன் இவ்வாறு நித்தியமானவைகளை தற்காலிக ஆசீர்வாதங்களுக்கு மேலாக மதித்தபோது, தான் பக்தி காட்டிய தேவனைக் குறித்த அனுபவ அறிவு இல்லாதிருந்தான். அவன் இருதயம் தெய்வீகக் கிருபையால் புதுப்பிக்கப்படவில்லை . முதல் குமாரனின் உரிமைகளை ஏசா வைத்திருக்கும் வரையிலும் தன்னைக் குறித்த வாக்குத்தத்தம் நிறைவேற முடியாது என்று அவன் நம்பினான். தன் சகோதரன் அலட்சியமாக நினைத்திருந்த, ஆனால் தனக்கு மிகவும் விலையேறப்பெற்றதாயிருந்த ஆசீர்வாதத்தை அடையும்படி தொடர்ச்சியாக ஏதாவது வழியைத் திட்டமிட யோசித்துக்கொண்டிருந்தான்.PPTam 204.2

    ஒருநாள் தன் வேட்டையிலிருந்துகளைப்புற்று இளைத்த வனாக வீடு திரும்பிய ஏசா, யாக்கோபு தயாரித்துக்கொண்டிருந்த உணவைக் கேட்டான். ஒரே சிந்தையால் ஆட்கொள்ளப்பட்டிருந்த யாக்கோபு, இதைச் சாதகமாக்கிக்கொண்டு, சேஷ்ட புத்திரபாக விலையினால் தன் சகோதரனின் பசியை திருப்திப்படுத்துவதாகக் கூறினான். அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். பொறுப்பற்ற சுயத்தில் திளைத்த வேட்டைக்காரன், ஒரு பாத்திரம் சிவப்புக் கூழுக்காக தன் சேஷ்ட புத்திர பாகத்தை விட்டுக்கொடுத்து, தன் வியாபாரத்தை ஒரு ஆணையினால் உறுதிப்படுத்தினான். மிகக் குறைந்த நேரத்தில் அவனுடைய தகப்பனுடைய கூடாரத்தில் அவனுக்கு உணவு கிடைத்திருக்கும். ஆனால் அந்த நொடியின் விருப்பத்தை திருப்தி செய்யும்படியாக, கவனமின்றி, தேவன்தாமே அவனுடைய பிதாக்களுக்கு வாக்குப்பண்ணியிருந்த மகிமையான சுதந்தரத்தை பண்டமாற்றினான். அவனுடைய முழு விருப்பமும் நிகழ்காலத்தில் இருந்தது. பரலோகத்தினுடையதை உலகத்தினுடை யதற்காக தியாகம் செய்ய, எதிர்கால நன்மையை நொடிப்பொழுது இன்பத்திற்காக மாற்றிக்கொள்ள அவன் ஆயத்தமாயிருந்தான்.PPTam 205.1

    இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணி னான். அதை அப்புறப்படுத்தியதில் ஒரு சுமை தணிந்ததாக உணர்ந் தான். இப்போது அவன் பாதை தடைபடாது. தான் விரும்பினபடி அவன் செய்யலாம். அந்த, சுதந்திரம் என்று தவறாக அழைக்கப்பட்ட கட்டுப்பாடற்ற இன்பத்திற்காக பரலோகத்திலிருக்கிற தூய்மையும் களங்கப்படாததும் நித்தியமுமான சுதந்தரத்தை இன்றைக்கும் எத்தனை பேர் விற்றுக்கொண்டிருக்கிறார்கள் !PPTam 205.2

    வெளிப்புறமான உலக கவர்ச்சிகளுக்கே எப்போதும் உட் பட்டு, ஏத்தின் குமாரத்திகளில் இருவரை ஏசா தனக்கு மனைவிகளாக எடுத்துக்கொண்டான். அவர்கள் பொய் தேவர்களை சேவிக் கிறவர்கள். அவர்களுடைய விக்கிரக வணக்கம் ஈசாக்கிற்கும் ரெபெக்காளிற்கும் கசப்பான வேதனையாயிருந்தது. தெரிந்து கொள்ளப்பட்ட ஜனத்திற்கும் புறஜாதிகளுக்குமிடையே திருமணத்தைத் தடை செய்திருந்த உடன்படிக்கையின் நிபந்தனை களில் ஒன்றை ஏசாமீறிவிட்டான் . என்றபோதும், அவன் மீது சேஷ்ட புத்திரபாகத்தை வைக்கிறதற்கான தீர்மானத்தில் ஈசாக்கு உறுதி யாயிருந்தான். ரெபெக்காளின் காரணங்களும் ஆசீர்வாதத்திற்கான யாக்கோபினுடைய வலிமையான கூஞ்சையும் அதன் கடமை களுக்கு ஏசாகாட்டின் அலட்சியமும் எதுவும் தகப்பனுடைய நோக் கத்தில் மாற்றம் கொண்டுவரவில்லை.PPTam 206.1

    ஈசாக்கு வயதாகி, குருடாகி, விரைவில் மரித்துப்போவதை எதிர்பார்த்து, தனது மூத்த குமாரன் மேல் ஆசீர்வாதங்களை வைப் பதை இன்னும் தாமதிக்கக்கூடாது என்று தீர்மானிக்கும் வரையிலும் வருடங்கள் கடந்துபோனது. ஆனால் ரெபெக்காள் மற்றும் யாக்கோபின் எதிர்ப்பை அறிந்ததினால், இந்த புனிதமான ஆராதனையை இரகசியமாக நடத்த அவன் தீர்மானித்தான். இப்படிப்பட்ட சமயங்களில் செய்யப்படும் வழக்கமான விருந்தின்படி முற்பிதா ஏசாவை அழைத்து : வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்க என்னிடத்தில் கொண்டுவா என்றான்.PPTam 206.2

    ரெபெக்காள் அவனுடைய நோக்கத்தை அறிந்தாள். தேவன் தமது சித்தமாக அறிவித்ததற்கு இது முரணானது என்பதில் அவள் நம்பிக்கையாயிருந்தாள். தெய்வீக அதிருப்தியை சம்பாதிக்கும் ஆபத்திலும் அவனது இளைய மகனை தேவன் அழைத்திருக்கிற தகுதியிலிருந்து தடுக்கும் ஆபத்திலும் ஈசாக்கு இருந்தான். ஈச ராக்கோடு காரணப்படுத்திப் பேச அவள் வீணாகவே முயற்சித்தாள். எனவே ஒரு உபாயத்தை நாட தீர்மானித்தாள்.PPTam 206.3

    ஏசாதன் வேலையைச் செய்ய புறப்பட்டவுடனேரெபெக்காள் தன் நோக்கத்தை நிறைவேற்ற இறங்கினாள். ஆசீர்வாதம் முடிவாகவும் திரும்ப எடுக்கக்கூடாமலும் ஏசாவின் மேல் வைக்கப்படுவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய தன் அவசியத்தை வலியுறுத்தி, நடந்ததை யாக்கோபுக்கு அவள் கூறினாள். தனது நடத்து தலை பின்பற்றினால் தேவன் வாக்குப்பண்ணினவிதமாக அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தன் மகனுக்கு உறுதியளித்தாள். அவள் முன்மொழிந்த திட்டத்துக்கு யாக்கோபு உடனே உடன்படவில்லை. தன் தகப்பனை ஏமாற்றும் நினைவு அவனுக்குமிகுந்த துயரத்தைக் கொடுத்தது. அப்படிப்பட்ட பாவம் ஆசீர்வாதத்தைக் காட்டிலும் சாபத்தையே கொண்டுவரும் என்று அவன் உணர்ந்தான். அவனுடைய மனப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அவன் தனது தாயின் ஆலோசனைகளை செயல்படுத்த முன் சென்றான். நேரடியான பொய்யைப் சொல்வது அவனுடைய எண்ணமாயிருக்கவில்லை. ஆனால் தகப்பனுடைய சமுகத்துக்கு வந்தபோது, திரும்பிப் போகக்கூடாத தூரத்துக்கு அவன் சென்றுவிட்டதாகத் தோன்றியது. எனவே இச்சித்திருந்த ஆசீர்வாதத்தை வஞ்சகத்தினால் அடைந்தான்.PPTam 206.4

    யாக்கோபும் ரெபெக்காளும் தங்களுடைய நோக்கத்தில் வெற்றி அடைந்திருந்தாலும் தங்களுடைய வஞ்சகத்தினால் பிரச்சனையையும் வருத்தத்தையுமே அடைந்தார்கள். யாக்கோபுதான் சேஷ்ட புத்திர பாகத்தை பெறவேண்டும் என்று தேவன் அறிவித் திருந்தார். அவர் தங்களுக்காக கிரியை செய்யும்படி அவர்கள் விசுவாசத்தோடு காத்திருந்தார்களென்றால், அவருடைய சொந்த நேரத்தில் அவருடைய வார்த்தை நிறைவேறியிருந்திருக்கும். ஆனால் தேவனுடைய பிள்ளைகளென்று இன்று தங்களை அழைத்துக்கொள்ளுகிற அநேகரைப்போல், காரியத்தை அவர் கைகளில் கொடுக்க அவர்கள் சித்தமில்லாதிருந்தார்கள். தன் மகனுக்குக் கொடுத்த தவறான ஆலோசனைக்காக ரெபெக்காள் மிகக் கசப்பாக வருந்தினாள். அதுவே அவனை அவளிடமிருந்து பிரிக்கும் காரணமாயிற்று. அவள் அவனுடைய முகத்தை அதற்குப்பின்பு காணவே இல்லை. சேஷ் புத்திரபாகத்தை வாங்கின அந்த மணி நேரத்திலிருந்து யாக்கோபு சுய குற்ற உணர்வினால் வாதிக்கப்பட்டான். அவன் தன் தகப்பனுக்கு எதிராகவும், தன் சகோதரனுக்கு எதிராகவும், தேவனுக்கு எதிராகவும் குற்றஞ் செய்தான். ஒரு குறுகிய மணி நேரத்தில் அவன் வாழ்நாள் முழுவதும் மனம் வருந்துகிற வேலையை நடப்பித்தான். அவன் பிள்ளைகளுடைய துன்மார்க்க செயல் அவன் ஆத்துமாவை வாதித்த பின் நாட்களில் இந்த காட்சி அவன் முன் தெளிவாக இருந்தது.PPTam 207.1

    யாக்கோபு தன் தகப்பனுடைய கூடாரத்தை விட்டு வெளி யேறின சற்று நேரத்தில் ஏசா நுழைந்தான். அவன் தனது சேஷ்ட புத்திரபாகத்தை விற்றுப் போட்டு, அதை ஒரு ஆணையினாலே உறுதிப்படுத்தியிருந்தபோதும் அவனுடைய சகோதரனின் உரிமைகளை கருத்தில் கொள்ளாது, அதன் ஆசீர்வாதங்களைப் பெறுவதில் தீர்மானமாயிருந்தான் . ஆவிக்குரியதோடு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பையும் தகப்பனுடைய செல்வத்தில் இரண்டு பங்கையும் கொடுக்கக்கூடிய உலகத்துக்குரிய சேஷ்ட புத்திரபாகமும் இணைக் கப்பட்டிருந்தது. இவைகள்தான் அவனுக்கு மதிப்பான ஆசீர்வாதங்கள். உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும் படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட் டையாடிக் கொண்டு வந்ததைப் புசிப்பாராக என்றான்.PPTam 207.2

    திகைப்போடும் துயரத்தோடும் நடுங்கியவனாக, தனக்கு நடந்த வஞ்சகத்தை, வயதான குருடாகியிருந்த தகப்பன் அறிந் தான். அவன் நீண்டகாலமாக நெஞ்சார நேசித்திருந்த நம்பிக்கைகள் முறியடிக்கப்பட்டன. தன் மூத்தகுமாரனுக்கு நிகழ்ந்த ஏமாற்றத்தை அவன் நன்றாக உணர்ந்தான். என்ற போதும், அவனுடைய நோக்கத்தை முறியடித்து, தடுக்கும்படி அவன் தீர்மானமாயிருந்த அதே காரியத்தை நடப்பித்தது தேவனுடைய ஏற்பாடுதான் என்ற உணர்த்துதல் அவன் மனதில் பளிச்சிட்டது. தூதன்ரெபெக்காளிடம் சொன்ன வார்த்தைகளை அவன் நினைவுகூர்ந்தான். இப்போது யாக்கோபு குற்றவாளியான குற்றம் ஒருபுறமிருக்க, தேவனுடைய நோக்கத்தை மிக மேன்மையாக நிறைவேற்றும் ஒருவனை அவனில் கண்டான். ஆசீர்வாத வார்த்தைகள் தன் உதடுகளின் மேல் இருந்தபோது, ஆவியானவரின் ஏவுதல் தன்மேல் இருந்ததை அவன் உணர்ந்திருந்தான். சூழ்நிலைகள் அனைத்தையும் அறிந்தவனாக, யாக்கோபின் மேல் அறியாமல் கூறப்பட்ட ஆசீர் வாதத்தை நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர் வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்று அவன் உறுதிப் படுத்தினான்.PPTam 208.1

    தனது தொடும் எல்லைக்குள் இருந்தபோது, ஏசா ஆசிர் வாதத்தை குறைவாக மதிப்பிட்டிருந்தான். அது இப்போது அவனை விட்டு என்றைக்குமாக போனபின்பு, அதைப் பெற்றுக்கொள்ள வாஞ்சித்தான். அவனுடைய அவசரமான, உணர்ச்சி சார்ந்த இயற்கையின் பலம் அனைத்தும் எழும்ப, அவனுடைய துக்கமும் கோப மும் பயங்கரமாயிருந்தன. மிக அதிக கசப்பான அலறுதலோடு என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்று ஏசா சத்தமிட்டு அழுதான். ஆனால் கொடுக்கப்பட்ட வாக்குறுதி திரும்ப பெறப்பட முடியாது. மிக அலட்சியமாக அவன் பண்டமாற்றம் செய்த சேஷ்ட புத்திரபாகத்தை அவனால் மீண்டும் அடைய முடியாது. ஒருவேளைப் போஜனத்துக்காக ஒருபோதும் கட்டுப்படுத்தப்பட்டிராத பசியை நிமிடத்தில் திருப்தி செய்யும் படி யாக ஏசா தன் சுதந்தர வீதத்தை விற்றான். தன் மதியீனத்தை அவன் பார்த்தபோது, ஆசீர்வாதத்தைத் திரும்ப அடையக்கூடாதபடி தாமதமாகியிருந்தது. அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான் எபி. 12:16, 17. மனம் வருந்தி தேவனுடைய தயவை அடையும் வாய்ப்பிலிருந்து அவன் வெளியே அடைக்கப்படவில்லை. ஆனால் சேஷ்ட புத்திர பாகத்தை மீண்டும் அடையும் எந்த வழியையும் அவனால் காண முடியவில்லை. அவனுடைய துக்கம் பாவ உணர்த்துதலிலிருந்து துளிர்க்கவில்லை. தேவனோடு ஒப்புரவாகிறதை அவன் வாஞ்சிக்கவில்லை. பாவத்தின் விளைவுகளுக்காக அவன் துக்கப்பட்டான், பாவத்துக்காக அல்ல.PPTam 208.2

    தெய்வீக ஆசீர்வாதங்களுக்கும் அதன் கோரிக்கைகளுக்கும் அலட்சியம் காட்டினதினால் ஏசா வேத வாக்கியங்களால் வேசிக்கள்ளன் (வச. 16) என்று அழைக்கப்படுகிறான். கிறிஸ்துவினால் தங்களுக்கு சம்பாதிக்கப்பட்டிருக்கிற மீட்பை சாதாரணமாக எண்ணுகிறவர்களையும் பரலோக சுதந்தர வாளி என்னும் உரி மையை அழிந்துபோகிறபூமிக்குரியவைகளுக்காகதியாகம் பண்ண ஆயத்தமாயிருக்கிறவர்களையும் அவன் எடுத்துக்காட்டுகிறான். திரளானோர் எதிர்காலத்திற்கான எந்த ஒரு சிந்தையும் கவனமும் இல்லாது, நிகழ்காலத்துக்காக பிழைக்கிறார்கள். ஏசாவைப்போல புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் (1 கொரி. 15:32) என்று அவர்கள் கூறுகிறார்கள்; அவர்கள் நாட்டங்களினால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். சுயமறுப்பை செயல்படுத்துவதற்குப்பதிலாக, மிகவும் மதிப்பு வாய்ந்தவைகளாக கருதப்படுகிறவைகளை விட்டுவிடுவார்கள். கீழ்த்தரமான பசியை திருப்தி செய் வதையோ, அல்லது சுயத்தை மறுத்து தேவனுக்குப் பயப்படுகிற வர்களுக்கு மாத்திரம் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிற பரலோக ஆசீர்வாதங்களையோ, இதில் ஒன்றை விட்டுவிட அழைக்கப்படும் போது, பசியின் உரிமைகள் மேற்கொள்ளுகிறது. தேவனும் பர லோகமும் கிட்டத்தட்ட வெறுக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களென்று அழைத்துக்கொள்ளுகிறவர்களிலும் எத்தனைபேர், ஆரோக் கியத்தை பாதித்து ஆத்துமாவின் உணர்வுகளை உணர்வற்றதாக் குகிற உணவில் திளைப்பதைப் பற்றிக்கொள்ளுகிறார்கள். ஆத்துமாவிலும் மாம்சத்திலுமிருக்கிற அனைத்து அசுசியிலுமிருந்து தங்களை சுத்திகரிக்கிற, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூர ணப்படுத்துகிற கடமை கொடுக்கப்படும் போது எரிச்சலடை கிறார்கள். இந்த பாதிக்கக்கூடிய திருப்திகளையும் தக்கவைத்துக் கொண்டு, பரலோகத்தையும் அடைய முடியாது என்கிறதை அவர்கள் கண்டு, நித்தியஜீவனுக்கான பாதை மிகக்குறுகலாக இருக்கிற படியால், தாங்கள் இனி அதில் நடக்கமாட்டோம் என்று முடிவு செய்கிறார்கள்.PPTam 209.1

    சிற்றின்பங்களில் திளைப்பதற்காக திரளானோர் தங்கள் சேஷ்ட புத்திர பாகத்தை விற்கிறார்கள்; ஆரோக்கியம் தியாகம் பண்ணப்படு கிறது, மனதின் திறமைகள் பெலமிழக்கின்றன; பரலோகம் விட் டுக்கொடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் தற்காலிக இன்பத் துக்காக பெலவீனப்படுத்தி குணத்தை தரந்தாழ்த்துகிற பசியின் திளைப்பிற்காக! அவசரமாக தான் மாற்றிக்கொண்டதன் மதி யீனத்தைக் காணும்படி, மீட்கக்கூடாதளவு மிகத்தாமதமான பிறகு ஏசா எழுந்ததைப்போலவே, பரலோகத்திற்கான தங்களுடைய சுதந்தரத்தை சுயநலமான திருப்திப்படுத்தும் காரியங்களுக்காக மாற்றிக்கொண்டவர்களின் நிலையும் தேவனுடைய நாளில் இருக்கும்.PPTam 210.1