ஆத்தும இரட்சிப்பின் வேலையில் தாங்கள் செய்யவேண்டிய முயற்சிகளுக்கு ஓர் அளவு உண்டென்று மானிடர் எண்ணுவதற்கு அவர்களுக்கு ஒரு நியாயமும் கிடையாது. தமது வேலையில் கிறிஸ்து எப்போதாயினும் இளைப்படைந்தாரா?எப்போளுதாயினு எப்பொழுதாயினும் அவர் தியாகம் செய்யவும் கஷ்டப்படவும் பின் வாங்கினார? அவர் முயற்சித்தது போல சபை அங்கத்தினர் ஓயாமல் விடாமுயற்சியாய் முயற்சிக்க வேண்டும். ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து உடனே வேலை செய்ய அவர்கள் எப்பொழுதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். செய்யப்பட வேண்டிய வேலை செய்யப்படாமல் காத்திருப்பதை நாம் காணும்போது இயேசுவை எப்பொழுதும் நோக்கினவர்களாய் நாம் உடனே அதை எடுத்துச் செய்யவேண்டும். நமது சபை அங்கத்தினர் இப்போதனைக்குச் செவிகொடுப்பார்களாகில் நூற்றுக் கணக்கான ஆத்துமாக்கள் இயேசுவுக்கென்று ஆதாயப் படுவார்கள். LST 167.1