Go to full page →

நமது பேரவசியம் LST 221

“நீங்கள் எனக்குச் சாட்சிகளா யிருப்பீர்கள்,” இயேசுவினுடைய இந்த வார்த்தைகள் தங்கள் சக்தி யாதொன்றையும் இழக்கவில்லை.மார்க்க ஒப்பாசாரத்தின் இந்த நாட்களில் நமது இரட்சகர் உண்மையுள்ள சாட்சிகளைக் கேட்கிறார்; ஆனால் கிறிஸ்துவின் ஸ்தானாபதிகள் என்னப்பட்டவர்களுக்குள்ளுங் கூட தங்கள் ஆண்டவருக்காகஉண்மையுள்ள சொந்த சாட்சியைக் கொடுக்க ஆயத்தமா யிருக்கிறவர்கள். எவ்வளவு சொற்பம்! சென்ற தலைமுறைகளிலுள்ள அநேக பெரிய நல்ல மனிதர் என்ன செய்தார்கள்,துணிந்தார்கள் கஷ்டப்பட்டார்கள்,சந்தோஷமடைந்தார்கள் என்று அவர்கள் சொல்லக் கூடும்.மற்றவர்களுக்கு நேரிட்ட கடுமையான போராட்டங்களில் அவர்களைக் களிகூரவும்,கொடிய சோதனைகளில் உறுதியாய் எதிர்த்து நிற்கவும் செய்த சுவிசேஷ வல்லமையைப் பற்றி விஸ்தரித்து சொல்லுவதில் அவர்கள் நிபுணர்களா யிருக்கிறார்கள்,இயேசுவுக்கு சாட்சியாக மற்ற கிறிஸ்தவர்களை முன கொண்டு வருவதில் அவ்வளவு ஊக்கம் காண்பித்தவர்கள்,சமயத்திற்கேற்க தங்கள் சொந்த அனுபோகத்திலிருந்து யாதொன்றும் எடுத்து சொல்லக் கூடாதவர்களாய்க் காணப்படுகிறார்கள். LST 221.3

கிறிஸ்துவின் ஊழியர்களே, நீங்கள் உங்களுக்காக சொல்லுவதற்கு உங்களிடத்தில் என்ன உண்டு? உங்களுடைய நன்மைக்காகவும் தேவனுடைய மகிமைக்காகவும் நீங்கள் அடைந்திருக்கும் ஆத்தும் போராட்டங்கள் என்ன?உலகத்திற்கு கடைசி பக்திவிநய தூதைக் கூறியறிவிக்கிறதாக சொல்லுகிற நீங்கள் சத்தியதித்தைப் பற்றிய அறிவில் என்ன அனுபோகமுடைய யவர்களாயிருக்கிறீர்கள்? அதினால் உங்கள் சொந்த இருதயங்களில் ஏற்பட்டுள்ள பயன் என்ன?உங்கள் நடக்கை கிறிஸ்துவுக்காக சாட்சி பகருகிறதா? இயேசுவிலுள்ள சத்தியத்தின் சுத்திகரிக்கிற,மகிமைப்படுத்துகிற,பரிசுத்தமாக்குகிற அவ் வில்லமையைப் பற்றி நீங்கள் கண்டதென்ன, அறிந்ததென்ன? இவ்வித சாட்சியையே ஆண்டவர் கேட்கிறார்,அதற்காகத் தான் சபைகள் பாடுபடுகின்றன. LST 222.1

உன் சொந்த இரட்சகராக கிறிஸ்துவின் மேல் உனக்கு உயிருள்ள விசுவாசம் இல்லாவிடில் அவிசுவாச உலகில் உன் விசுவாசத்தை உணரச் செய்வது கூடாத காரியம், விரைந்தோடும் ஓட்டத்திலிருந்து நீ பாவிகளை இழுத்துக் கொள்ள விரும்பினால் உன் சொந்த பாதங்கள் சருக்கலான இடங்களில் நிற்கக் கூடாது. LST 222.2

ஆண்டவருடைய ஊழியத்தில் அமர்ந்திருக்கிறவர்களுக்கு இன்னும் அநேகர் தாங்கள் அடைந்திருக்கிறதாக எண்ணுகிற அனுபோகத்தை விட அதிக உயரமும், ஆழமும்,அகலமுமானதோர் அனுபோகம் தேவை. இயற்கனவே தேவனுடைய பெரிய குடும்பத்தின் அங்கத்தினாராயிருக்கிறவர்கள் அநேகருக்கு அவருடைய மகிமையைப் பார்ப்பதும் மகிமையின் மேல் மகிமை யடைவதும் இன்னதென்று தெரியாது, அநேகர் கிறிஸ்துவின் மகத்துவத்தைப் பற்றி மங்கலான அறிவுடையவர்களாயிருக்கிறார்கள், அவர்களுடைய இருதயமோ சந்தோசத்தினால் பொங்குகிறது.அவர்கள் இரட்சகருடைய அன்பின் பூரண,ஆழ்ந்த அறிவுக்காக வாஞ்சிக்கும் வாஞ்சையை எல்லாம் காத்துக் கொள்ளுவார்களாக---G.W.273-4. LST 222.3