Go to full page →

நமது பிரசுரங்களைச் சிதறடித்தல் LST 232

மூன்றாம் தூதனுடைய தூது கூறியறிவிக்கப்படாதிருக்கும் இடங்களுக்கு தேவனுடைய ஜனங்களில் அநேகர் நமது பிரசுரங்களைக் கொண்டு போக வேண்டும். நமது புத்தகங்கள் பற்பல பாஷைகளில் பிரசுரிக்கப்பட வேண்டும். இப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு, மனத் தாழ்மையும் உண்மையுமுள்ள மனுஷர், கோல்போர்ட்டர் - சுவேஷர்களாகப் புறப்பட்டுப் பொய் மற்றப்படி ஒருபோதும் பிரகாசிக்கப்பட இடம் அற்றிருப்போருக்கு சத்தியத்தைக் கொடுப்பார்களாக இந்த வேலையை எடுத்துக் கொள்வோர் வைத்திய மிஷனரி வேலையைச் செய்வதற்காயத்தக்க உள்ளவர்களாய்ப் போக வேண்டும். நோய்ப்பட்டோர், கஷ்டப்பட்டோருக்கு உதவி செய்ய வேண்டும். இரக்கமுள்ள இவ் வேலை செய்யப்பெற்ற அநேகர் சத்திய வசனங்களைக் கேட்டு ஏற்றுக் கொள்ளுவார்கள். LST 232.2

தன இருதயம் பரிசுத்த ஆவியினால் ஊறப்பெற்றுள்ள புத்தக வேலையாளான சுவேஷிகனுடைய வேலை நன்மைக் கேதுவான அதிசய பலன்கள் நிறைந்துள்ளது. LST 232.3

அவர்கள் இரட்சகரின் அதிசீக்கிர வருகையைப் பற்றிய வாக்குத்தத்தங்கள் அடங்கிய பிரசுரங்களை பட்டணங்கள் தோறும், தேசங்கள் தோறும் கொண்டு போக வேண்டும். இப் பிரசுரங்கள் ஒவ்வொரு பாஷையிலும் மொழிபெயர்க்கப் பட வேண்டும்; ஏனெனில் உலகமெங்கும் சுவேஷம் பிரசங்கிக்கப்பட வேண்டும். தன வேலைகள் பயன்படச் செய்யும் தேவ வல்லமையை ஒவ்வொரு ஊழியனுக்கும் அருளிச் செய்வதாக கிறிஸ்து வாக்களிக்கிறார். ----- 9 T 33-4. LST 232.4