தங்களுடைய இரட்சகரின் வருகைக்காக மிகுந்த ஆவலுடன் விழித்துக் காத்திருந்தோரின் மனப்பான்மை எவ்விதம் இருக்குமென்பதை இயேசுவை நேசிப்போர் அறிந்து கொள்ளக்கூடும். எதிர் பார்த்த விஷயம் சமீபித்து வந்தது. அவரைச் சந்திப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்த வேலை சமீபமாயிற்று. வெகு நகதி விநயத்துடன் நாங்கள் இவ்வேளையை அடுத்து வந்தோம். உண்மையுள்ள விசுவாசிகள் தேவனோடு ஐக்கியம் பெற்றிருந்தார்கள். அது அவர்கள் இனிவரும் பேரொளி உலகில் அடைந்து அனுபவிக்கும் சமாதானத்திற் கோர் அச்சமாயிருந்தது. இந்த நம்பிக்கையையும் உறுதியையும் பரீட்சித்தறிந்த எவரும் பார்த்துப் பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அந்த அருமையான மணி நேரங்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். LST 26.3
உலக ஜோலி எல்லாம் அநேகமாய்ச் சில வாரங்களாக அப்புறப் படுத்தப்பட்டன. நாங்கள் எங்கள் மரணப் படுக்கைகளில் இருப்பது போலவும் இன்னும் சில மணி நேரங்களுக்குள் பூவுலகின் காட்சி களுக்கு எங்கள் கண்களை என்றென்றைக்கும் மூடிக் கொள்ளப் போவது போலவும் நாங்கள் எங்கள் இருதயத்தின் எண்ணங்களையும் நோக்கங்களையும் ஜாக்கிரதையாய்ப் பரிசோதனை செய்தோம். நமது இரட்சகரின் இரத்தத்தால் பாவமறக் கழுவப்பட்டு ஆத்துமம் சுத்திகரிக்கப் பட்டிருக்க வேண்டியதின் அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம். LST 26.4