Go to full page →

ெபலவீனத்தின் மேல் வெற்றி LST 63

சீக்கிரத்தில் என் வீட்டுக்கு முப்பது மைலுக்கு அப்பால் உள்ள போலந்திலிருக்கும் என் சகோதரி வீட்டுக்கு நான் என் மைத்துனருடன் போவதற்கு கர்த்தர் எனக்கு வழியுண்டாக்கினார். நான் அங்கிருக்கையில் சாட்சி கொடுப்பதற்கு எனக்குச் சமயம் கிடைத்தது. மூன்று மாதங்களாய் என் தொண்டையும் சுவாச பையும் காய்ந்து புண்ணாயிருந்த படியால், நான் அற்பமாய் அதுவும் தாழ்ந்த குரலில் மட்டும் பேசினேன். இச்சமயம் நான் கூடத்தில் எழும்பிக் கம்மிய குரலாய் பேச ஆரம்பித்தேன். அவ்விதம் நான் சுமார் ஐந்து நிமிஷம் போல் பேசினேன், அப்போது என் தொண்டை கம்மலும் அடைப்பும் என்னை விட்டு போயிற்று. என் சத்தம் தெளிவாயும் பழமையும் இருந்தது. நான் சுளுவாய் பூரண சுயாதீனத்துடன் சுமார் இரண்டு மணி நேரம் மட்டும் பேசினேன். பேசி முடிந்ததும் என் சத்தம் திரும்பவும் கம்மலாயிற்று; மறுபடியும் நான் ஜனங்கள் முன் நின்ற போது அதே விதம் சத்தம் அதிசயமாய் எழும்பிற்று. நான் தேவனுடைய சித்தத்தின் படியே செய்தேன் என்னும் நிச்சயம் எனக்கு எப்போதும் உண்டாயிருந்தது, என் பிரயத்தனங்கள் விசேஷ பயன் பெறுவதை நான் கண்டேன். LST 63.4

மெயினின் கீழ் பாகம் போவதற்கு எனக்கு தெய்வாதீனமாய் வழி திறக்கப்பட்டது. சகோதரர் உவில்லியம் ஜோர்டான் தமது சகோதரியுடன் ஆரிங்க்டனுக்கு ஓர் ஜாலியாய் போனார், நானும் அவர்களுடன் போகும்படஈ ஏவப்பட்டேன். கர்த்தர் எனக்கு முன் திறக்கும் பாதையில் நடக்க நான் அவருக்கு வாக்கு கொடுதிருந்தபடியினால் அதை மறுக்க நான் துணியவில்லை.நான் இவ்விடத்தில் கொடுத்த தூது தேவ ஆவியின் அருள் பெற்றிருந்தது. பலர் சத்தியத்தில் பூரிப்படைந்தனர். அதைரியப்பட்டிருந்தோர் அனைவரும் தங்கள் விசுவாசத்தைப் புதுப்பித்துக்கொள்ள தைரியப் படுத்தப் பட்டனர். LST 64.1

ஆரிங்டனில் நான் போதகர் ஜேம்ஸ் உவைட்டை சந்தித்தேன். அவர் என் தோழருக்கு அறிமுகமானவரும் தாமாய் ஆத்துமாக்கள் இரட்சிப்படைவதர்கான வேலையில் ஈடுபட்டுள்ளவருமாயிருந்தார். LST 64.2

இதற்கு பின் நான் தேவன் எனக்கருளிய சாட்சியைக் கூறி விட்டு சகல விஷயத்திலும் அவருக்கு உகந்து நடக்கும் அனுபோகம் அடையப் பெற்று சீக்கிரம் போர்ட்லாந்து திரும்பினேன். LST 64.3