Go to full page →

பிரிவினை உண்டாக்குபவர்களைக்குறித்து விழிப்போடிருங்கள்!, மே 29 Mar 297

“…இடறல்கால் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” - லூக்கா 17:1. Mar 297.1

ஒரு மக்கள் கூட்டத்தை தேவன் வெளியே கொண்டுவந்து கொண்டிருக்கிறார். அவர்கள் ஒரே நபரைப்போன்று இணைந்து, அதே காரியங்களைப் பேசும்படியாகவும், கிறிஸ்து தமது சீடர்களுக்காகச்செய்த பின்வரும் ஜெபத்தை நிறைவேற்றும்படியாகவும் நிற்கத்தக்கதாக அவர் ஆயத்தஞ்செய்துகொண்டிருக்கிறார்… “அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பியதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” — யோவான் 17:21. Mar 297.2

தொடர்ந்து எழும்பிக்கொண்டிருக்கும் சிறுசிறு குழுக்கள் இருக்கின்றன. மிகவும் சிதறிக்கிடக்கும் அந்த சிலரோடுமாத்திரந்தான் இருக்கிறாரென்று இந்தக் குழுக்களிலுள்ளவர்கள் நம்புகிறார்கள். தேவனுடைய ஊழியர்கள கட்டி எழுப்பிக்கொண்டிருக்கும் வேலையை, இவர்களது செல்வாக்கு தகர்த்து கீழே தள்ளி சிதறிப்போடுவதாக அமைகிறது. ஒன்றாயிருக்கவேண்டுமென்ற தேவ வார்த்தைக்கு ஒத்திசைவாக, அனைத்து முயற்சிகளையும் செயல்படுத்திக்கொண்டிருக்கும் மக்கள், மூன்றாம் தூதனின் தூதிலே நிலைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள், தங்களது வேலையை விரிவடையச் செய்துகொண்டிருக்கிறார்கள்; சத்தியத்திற்காக ஆத்துமாக்களைக் கூட்டிச்சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக, அவர்களை சந்தேகத்தோடு நோக்கிப் பார்க்கிறார்கள். உலகத்திலே அவர்களுக்குச் செல்வாக்கு இருப்பதினால், அவர்களை உலகப் பற்றுடையோர் என்றென்ணி நோக்கிப்பார்க்கிறார்கள்… Mar 297.3

தான் தேவனால் நடத்தப்படுவதாக உரிமைகோரிக்கொண்டு ஒரு நபர் எழும்புகிறார். அவர் துன்மார்க்கருக்கு உயிர்தெழுதல் இல்லையென்ற முரணான சமயக் கருத்தை ஆதரித்து வாதிடுகிறார்….மற்றொருவர் வரப்போகிற காலத்தைக்குறித்து தவறான கருத்துக்களை மனதார நேசிக்கிறார்… அவர்களனைவரும் முழுமையான மார்க்க சுதந்திரம் வேண்டுமென்கிறார்கள். ஒவ்வொரு நபரும் மற்றவர்களை விட்டுவிட்டு தனித்தியங்குகிறார்; எனினும், அவர்களுக்கு மத்தியில் தேவன் தனிச் சிறப்போடு வேலை செய்கிறார் என்று உரிமைகோருகிறார்கள்… இந்த மக்களின் புத்தி தெளிவாக இல்லை. இவர்கள் ஒரு பொய்யான பரபரப்பினால் இழுத்துச்செல்லப்படுகிறார்கள். இவர்களிடத்தில் சத்தியமில்லை என்று நமக்குத் தெரியும்… தேவனுக்காக சீர்திருத்தம் அடைவார்கள் அல்லது ஓய்வுநாள் ஆசரிப்பை விட்டுவிடுவார்கள்; அப்படியானால், அவர்கள் அவிசுவாசிகளுக்கு இடையூறாக இருக்கமாட்டார்கள்… Mar 298.1

உலகம் தங்களை வெறுக்கத்தக்கதான ஒரு வழியைப் பின் பற்றுகிறவர்கள்மீது தேவன் கோபத்தோடிருக்கிறார். ஒரு கிறிஸ்தவன், அவனது நல்ல செயல்களுக்காகவும், அவன் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதற்காகவும் வெறுக்கப்பட்டால், அவனுக்கு ஒரு வெகுமதி உண்டு. தான் நேசிக்கப்படத்தக்கதான ஒரு போக்கை கடைப்பிடிக்காமல் இருப்பதற்காக அவன் வெறுக்கப்படாமல், அவனது பண்படாத தன்மைக்காக வெறுக்கப்பட்டால், சத்தியத்தை தனது அண்டை அயலகத்தாரோடு சண்டைபிடிப்பதற்கான ஒரு பொருளாக ஆக்கி, அல்லது ஒருவிதமான போக்கைப் பின்பற்றி, ஓய்வுநாளில் அவர்களுக்கு எவ்வளவு எரிச்சல் உண்டாக்கக் கூடுமோ, அவ்வளவு எரிச்சல் உண்டாக்கத்தக்கதான காரியங்களைச் செய்தால், அவன் பாவிகளுக்கு ஒரு முட்டுகட்டையாகவும், பரிசுத்த சத்தியத்திற்கு ஒரு இகழ்ச்சியாகவும் இருக்கிறான். அவன் மனந்திரும்பாவிட்டால், ஒரு இயந்திரக் கல்லை அவன் கழுத்திலே கட்டி, சமுத்திரத்தில் அவனை எறிந்துபோடுவது அவனுக்கு நலமாக இருக்கும்.⋆ Mar 298.2

வாக்குத்தத்த வசனம்: Mar 298.3

“நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.” - யோபு 17:9. Mar 298.4