Go to full page →

அசைக்கப்படும் அந்த நேரம்!, ஜூலை 11 Mar 383

“அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.” --மத்தேயு 24:12 Mar 383.1

தேவனுடைய மக்கள் அவர்களுடைய நெற்றிகளிலே முத்திரையிடப்படுகின்றனர்; அதாவது இது காணப்படத்தக்கதான முத்திரையோ அல்லது அடையாளமோ அல்ல. அவர்கள் அசைக்கப்படாதபடிக்கு, ஆவிக்குரிய பிரகாரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் சத்தியத்திலே உறுதிபட நிலைப்படுத்தப்படுவதாகும். தேவனுடைய மக்கள் முத்திரையிடப்பட்டு, அந்த மாபெரும் அசைக்கப்படுதலிற்கு ஆயத்தமாக்கப்பட்டபின்பு அந்தக் காரியம் நடைபெறும். உண்மையிலேயே அது ஆரம்பமாகிவிட்டது; என்ன வரப்போகிறது என்பதை அறிந்துகொள்வதற்காக, நமக்கு எச்சரிப்புகொடுப்பதற்காக, தேவன் கொடுக்கும் நியாயத்தீர்ப்புகள் (தண்டனைகள்) இவ்வுலகில் வந்திருக்கின்றன. Mar 383.2

மாபெரும் கலக்கமும் குழப்பமும் நிறைந்த நாட்கள் வேகமாக நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன. தூதனுடைய உடைகளை அணிந்தவனாக சாத்தான் வந்து நம்மை எமாற்றுவன். கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையுங்கூட வஞ்சித்துப்போடுவான். அநேக கர்த்தாக்களும் அநேக ஆண்டவன்மார்களும் இருப்பார்கள். அனைத்து வகையான கொள்கைகளையும் காற்று அடித்துக் கொண்டுவரும். Mar 383.3

மிருகத்தின் முத்திரையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புரறுத்தப்படுவோம். ஏளனத்திற்கும் அவமதிப்பிற்கும், சிறைவாசம், மரணதண்டனை என்ற பயமுறுத்தல்களுக்கும் தங்களை ஒப்புக்கொடுப்பதைவிட, படிப்படியாக உலகப்பிரகாரமான கோரிக்கைகளுக்கும் உலகப்பிரகாரமான பழக்கவழக்கங்களுக்கும் ஒத்திசைவாகச்சென்று, அந்த வல்லமைகளுக்கு ஒப்புக்கொடுப்பது அதிகக் கடிமான காரியமல்ல என்பதைக் காண்பார்கள். இது தேவனுடைய கட்டளைகளுக்கும் மனிதனுடைய கட்டளைகளுக்கும் இடையே உள்ள போராட்டமாகும். இந்தக் காலத்தில் சபையிலே பொன்னிலுள்ள களிம்பு அகற்றப்பட்டு, சுத்திகரிக்கப்படும். உண்மையான தேவபக்கியானது, அற்பமான பகட்டுப்பொருள், தோற்றம் ஆகியவையினின்று தெளிவாக வேறுபட்டுக் காணப்படும். நம்மால் வியந்து பாராட்டப்பட்ட-மின்னுகிற நட்சத்திரங்களைப்போன்று பிரகாசித்த-அநேகர், பின்னர் இருளிலே சென்று, மங்கி, மறைந்துபோவார்கள். உமியானது மேகம்போன்று மேலே எழும்பி, காற்றினால் அடிக்கப்பட்டு, கொண்டுபோகப்பட்டுவிடும். வளமான கோதுமைக் களங்களிலுங்கூட உமியானது பறக்கடிக்கப்பட்டுப்போய்விடும், ஆசரிப்புக்கூதாரத்தின் அணிமணிகளை ஏற்றுக்கொண்டவர்கள், கிறிஸ்துவின் நீதியின் வஸ்திரத்தினால் தரிப்பிக்கப்படாவிட்டால், தங்கள் சொந்த நிர்வாணத்தின் வெட்கத்திலே காணப்படுவார்கள். Mar 383.4

ஆனால் சாத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் மனிதருமுண்டு, ஒழுங்கைமீறி சத்தியத்தைவிட்டு விலகிச்செல்வதினால் ஏற்படும் வெற்றிடங்களை, சத்தியத்தை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களை நிரப்புவார்கள்... Mar 384.1

உண்மையான கிறிஸ்துவக் கொள்கைகளைப் பின்பற்றுவோர் இத்தகையோர் விட்டுச்சென்ற இடங்களைப் பெற்றுக்கொள்வார்கள், அவர்கள் விசுவாசமுள்ள- நம்பிக்கைக்குரிய குடும்பங்களாக இருந்து, தேவனுடைய வார்த்தையை அதின் உண்மையான தோற்றத்திலும் எளிமையிலும் எடுத்துக்கூறுவார்கள். உண்மையான உத்தமமான மக்களினின்று பற்றுறுதியற்றவர்கள் பிரிக்கப்படத்தக்கவிதத்தில் ஆண்டவர் கிரியை செய்வார். அணிவரிசைகள் குறைவுபடுவதில்லை. ஒழுங்குமீறி மருளவிழுந்துபோனவர்களால் எற்பட்ட வெற்றிடங்களை, உறுதியான உண்மையான மக்கள் நிரப்பிவிடுவார்கள்.⋆ Mar 384.2

வாக்குத்தத்த வசனம்: Mar 384.3

“அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்..”- சங்கீதம் 91:4. Mar 384.4