Go to full page →

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மருள விழுகையும் அதைப் பின்தொடரும் அழிவும்...!, ஜூலை 27 Mar 415

“தேசம் தன் குடிகளின் மூலமாய்த் தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள்.” - ஏசாயா 24:5. Mar 415.1

அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கள் ஒரு சிறப்பான சலுகையைப்பெற்ற மக்களாவர்; ஆனால், அவர்கள் மார்க்க சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, புரொட்டஸ்டாண்டு கொள்கையைக் கைவிட்டு, ரோமன் கத்தோலிக்க சபைக்கு இசைவுகாட்டும் பொழுது, அவர்களின் குற்றத்தின் அளவு நிறைவடையும். பரலோகப் புத்தகத்திலே நாடு முழுவதும் மருளவிழுகைக்குச் சென்றுவிட்ட காரியம் பதிவு செய்யப்படும். இந்த மருளவிழுகையின் விளைவு, நாடு முழுவதற்கும் ஏற்படும் அழிவேயாகும். Mar 415.2

தேவப் பிரமாணத்தை மீறி, பாப்பானவரின் அமைப்பாகிய ஞாயிறு ஆசரிப்பை நடைமுறைப்படுத்த இயற்றப்படும் சட்டத்தினால், நமது நாடு (U.S.A.) நீதியினின்று தன்னை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ளும். புரொட்டஸ்டாண்டு மார்க்கமானது, ரோம வல்லமையின் கரத்தைப் பற்றிக்கொள்ளத்தக்கதாக, பெரும் பிளவிற்கு அப்பால் தனது கரத்தை நீட்டும். மேலும் புரொட்டஸ்டாண்டுகள் அந்த ஆவிமார்க்கத்தின் கரங்களை பற்றிப்பிடிப்பதற்காக, அந்தப் படுகுழிக்குமப்பால் தங்கள் கரங்களை நீட்டுவார்கள். இந்த முக்கூட்டு உறவின் செல்வாக்கினால், ஒரு புரொட்டஸ்டாண்டு குடியரசு நாட்டின் அமைப்பின் கொள்கையையும் நமது நாடு (U.S.A.) மறுத்துவிடும்பொழுது, பாப்பானவரின் பொய்யான கொள்கைகளையும் வஞ்சகங்களையும், பரப்புவதற்காக, எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்பொழுது, அப்பொழுது சாத்தான் தனது அற்புதமான கிரியைகளை நடப்பிக்கும் காலம் வந்துவிட்டது என்றும், மேலும் முடிவு சமீபம் என்பதையும் நாம் அறிவோம். Mar 415.3

ஆவி மார்க்கத்தின்மூலமாக மானிட இனத்திற்கு நன்மை செய்கிறவனைப்போன்று சாத்தான் தோற்றங்கொடுப்பான்; மனிதனின் வியாதிகளைக் குணமாக்குவான்; மேலும், ஒரு புதிய-மிகவும் உயர்ந்த விசுவாசமார்க்க அமைப்பை வழங்கப்போவதாகக் கூறுவான்; ஆனால், அதே சமயத்தில், அழிவைக்கொண்டு வருபவனாகச் செயல்படுவான்... Mar 416.1

ஒரு மாபெரும் வைத்தியனைப்போன்று, மக்கள் அனைவருடைய பிணிகளையும் குணமாக்குவதாகத் தோற்றங்கொடுப்பான்; ஆனால் அதே சமயத்தில், ஜனத்திரள் மிகுந்த பட்டணங்களிலே, வியாதிகளையும் பேரழிவுகளையும் கொண்டுவந்து, அழித்துப் பாழாக்கிப்போடுவான். Mar 416.2

பின்னர், தேவனைச் சேவிக்கிறவர்களே இத்தகைய தீமைகளைக் கொண்டுவருகிறார்களென்று இந்த மாபெரும் வஞ்சகன் மனிதரை நம்பச்செய்ய முயற்சிசெய்வான். Mar 416.3

மனிதன் தேவனைவிட்டு விலகிச் செல்லச்செல்ல, கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மீது அதிக வல்லமையைப் பெறத்தக்கதாக சாத்தான் அனுமதிக்கப்படுகிறான். மனிதர் மத்தியில் அழிவைச் சுழற்றி வீசுகிறான். தரையிலும் கடலிலும் பேரழிவுகள் ஏற்படுகின்றன. நெருப்பினாலும், வெள்ளத்தினாலும் உயிரும் சொத்துக்களும் அழிக்கப்படுகின்றன. இந்த அனைத்துத் தீய காரியங்களையும் தான் நிலைநாட்டியுள்ள விக்கிரகத்திற்கு (ஞாயிறு ஆசரிப்பிற்கு) தலைவணங்க மறுப்பவர்கள்மீது சாட்டுவான். துன்பத்திற்கான காரணம் ஏழாம் நாள் வருகை சபையினர் தான் என்று அவனது பிரதிநிதிகள் சுட்டிக்காட்டுவார்கள். “இந்த மக்கள் சட்டத்தை எதிர்த்து நிற்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமையை பரிசுத்தக்குலைச்சல் ஆக்குகிறார்கள். ஞாயிறு ஆசரிப்புச்சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டால் மட்டுமே, இத்தகைய பயங்கரமான தண்டனைகளுக்கு ஒரு முடிவு ஏற்படும்” என்று அவர்கள் கூறுவார்கள்.⋆ Mar 416.4

வாக்குத்தத்த வசனம்: Mar 416.5

“என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.” — எரேமியா 33:3. Mar 416.6