Go to full page →

தேவன் போடும் அடையாளத்தை தூதர்கள் வாசிக்கமுடியும்!, ஆகஸ்டு 23 Mar 469

“ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம்பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள்” என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். - வெளிப்படுத்தல் 7:2,3. Mar 469.1

உலகத்திலுள்ள அனைத்தும் ஒழுங்கும் அமைதியும்கெட்ட ஒரு நிலையில் இருக்கிறது. நாடுகள் கோபத்தில் இருக்கின்றன. யுத்தத்திற்காக மாபெரும் ஆயத்தங்கள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு விரோதமாகவும், ஒரு இராஜ்யம் இன்னொரு இராஜ்யத்திற்கு விரோதமாகவும், சதித் திட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. தேவனுடைய மகா நாள் மாபெரும் துரித வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. நாடுகள் யுத்தத்திற்கும், இரத்தஞ்சிந்துதலிற்கும் அவர்களது படைகளை பேரணிகளாகத் திரட்டிக்கொண்டிருந்தாலும், தூதர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை இன்னும் நடைமுறையில் இருக்கிறது; ஏனெனில், தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத்தீருமளவும், தூதர்கள் அந்த நான்கு காற்றுகளையும் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். Mar 469.2

தேவனுடைய ஊழியக்காரர்களது நெற்றிகளில் முத்திரை போட்டுத்தீருமளவும் நான்கு காற்றுகளும் பிடிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன; பின்னர், இறுதி மாபெரும் யுத்தத்திற்காக பூமியின் அனைத்து வல்லமைகளும் தங்களது சேனைகளை அணியணியாக வரிசைப்படுத்துவார்கள். நமது தவணையின் காலத்தில், மீந்திருக்கிற குறுகிய அந்த காலத்தை, எவ்வளவு மேம்பட்ட நிலையில் நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்! Mar 469.3

கட்டுப்பாடற்ற சிந்தனைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட உள்ளங்கள், மாறுதலடையவேண்டியது அவசியம்…நினைவுகள் தேவனிலே மையங்கொண்டிருக்க வேண்டும்; மாம்சம் இயல்பான மனப்பாங்குகளை மேற்கொள்ள ஊக்கமாக முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். Mar 469.4

இக்கட்டுக்காலத்திற்குள் பிரவேசிப்பதற்கு சற்றுமுன்னர், ஜீவனுள்ள தேவனின் முத்திரையை நாம் பெற்றுக்கொண்டோம்; அதன் பிறகு, அந்த நான்கு தூதர்களும் நான்கு காற்றுகளையும் பிடித்துகொண்டிருப்பதை விட்டுவிட்டதை நான் கண்டேன்; அதன்பிறகு, பஞ்சம், கொள்ளை நோய், யுத்தம் ஆகியவை ஏற்பட்டன. நாட்டுக்கு விரோதமாக நாடு எழும்பிற்று; முழு உலகமும் குழப்பத்தால் நிறைந்தது. அவரது மக்களுடைய நெற்றிகளிலே ஜீவனுள்ள தேவனின் முத்திரை போடப்படுதல் என்றால் என்ன? இந்த முத்திரையை மனிதர்கள் வாசிக்க முடியாது; தூதர்கள் மட்டுமே வாசிக்க முடியும்; ஏனெனில், அழிக்கின்ற தூதன் இந்த மீட்பின் முத்திரையை கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். ஆண்டவரது சுவீகாரமுள்ள குமாரர்களிலும் குமாரத்திகளிலும் புத்தி கூர்மையுள்ள மனங்கள் கல்வாரிச் சிலுவையின் அடையாளத்தைக் கண்டது. தேவ பிரமாணத்தை மீறுவதினால் ஏற்பட்ட பாவங்கள் அகற்றி வெளியேற்றப்பட்டு விட்டன. அவர்கள் இப்பொழுது கல்யாண வஸ்திரந்தரித்திருக்கிறார்கள். தேவனுடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் விசுவாசத்தோடும் கீழ்ப்படிதலோடும் இருக்கின்றார்கள். Mar 470.1

சத்தியத்தை அறிந்தபின்னர், அதன்படி அவரது கட்டளைகளுக்கு வார்த்தையிலும் செய்கைகளிலும் கீழ்ப்படியாவிட்டால், தேவன் அவர்களை மன்னிக்கமாட்டார்.⋆ Mar 470.2

வாக்குத்தத்த வசனம்: Mar 470.3

“இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின் படியெல்லாம் செய்ய நீ கவனமாக இருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவி கொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.” - உபாகமம் 28:1. Mar 470.4