Go to full page →

மற்றுமொரு பெந்தகொஸ்தே நாள் வரப்போகிறது!, செப்டம்பர் 5 Mar 495

“நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசிர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப் பண்ணுவேன்; ஆசிர்வாதமான மழை பெய்யும்.” - எசக்கியேல் 34: 26 Mar 495.1

விதைப்பின் காலத்திலும், அறுவடையின் காலத்திலே கிழக்கத்திய நாடுகளில் பெய்கிற முன்மாரி மற்றும் பின்மாரியை உதாரணங்களாக வைத்து, எபிரெய தீர்க்கதரிசிகள் தேவனுடைய சபையின்மேல் வியக்கத்தக்க ஆவிக்குரிய கிருபை வழங்கப்படுவதை முன்னறிவித்தார்கள். அப்போஸ்தலர் காலத்தில் கொடுக்கப்பட்ட ஆவியின்மழை முன்மாரியாகும்; அதுதான் முன்மாரியின் துவக்கம். அதனுடைய விளைவு மகிமையுள்ளதாயிருந்தது; ...ஆனால், இந்த பூமியின் அறுவடை நெருங்குகிற காலத்தில், ஆவிக்குரிய கிருபை விசேஷமான முறையில், தமது சபையை மனுஷகுமாரனுடைய வருகைக்கு ஆயத்தப்படுத்தும்படி வழங்கப்படும் என்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்விதமாக, அருளப்படுகிற ஆவியானவர், பின்மாரி பொழியப்படுவதற்கு ஒப்புமைப்படுத்தப்படுகிறார். Mar 495.2

சுவிசேஷம் தொனிக்க ஆரம்பித்த காலத்தில, தேவ வல்லமை எவ்விதம் வெளிக்காட்டப்பட்டதோ, அதைக்காட்டிலும் அதிகச் சிறப்பான வெளிப்பாட்டுடன், அந்த ஊழியம் முடிவடைய இருக்கின்றது. முன்மாரியைக்குறித்துச் சொல்லப்பட்ட தீர்க்க தரிசனங்கள் சுவிசேஷ ஊழியத்தின் துவக்க காலத்தில் நிறைவேறியதைப் போலவே, முடிவு காலத்திலும் மீண்டும் பின்மாரியோடு நிறைவுபெறவிருக்கின்றன... Mar 495.3

தேவ ஊழியர்கள், முகங்களில் ஒளி நிறைந்தவர்களாக, பரிசுத்த அர்ப்பணிப்பின் பிரகாசத்தோடு பரலோகத்தின் செய்தியைக் கூறி அறிவிக்க, இடம் விட்டு இடம் விரைவார்கள். உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் மூலமாக எச்சரிப்பு கொடுக்கபடும்; அற்புதங்கள் நிகழ்த்தப்படும்; வியாதியஸ்தர் சுகமாக்கப்படுவார்கள்; விசுவாசிகளை அடையாளங்களும் அற்புதங்களும் பின் தொடரும்; பொய் அற்புதங்களை சாத்தானும் நிகழ்த்துவான். மனிதருக்கு முன்பாக வானத்திலிருந்து அக்கினியையும் இறங்கப்பண்ணுவான்-வெளி. 13:13. இவ்வாறாக, தங்கள் பங்கைத் தெரிந்துகொள்ள இவ்வுலகின் குடிமக்கள் அனைவரும் கொண்டுவரப்படுவார்கள். Mar 495.4

மிகுதியான வாக்குவாதத்தைக் காட்டிலும், தேவ ஆவியின் அசைவாடுதலினாலே, சுவிசேஷ செய்தி எடுத்துச் சொல்லப்படும். சத்திய உபதேசம் கொடுக்கப்பட்டாயிற்று. விதை விதைக்கப்பட்டு விட்டது, இனி அது முளைத்து பலன் கொடுக்கும்... சத்திய ஒளி எல்லா இடங்களிலும் ஊடுருவிச்செல்லுகிறது; சத்தியம் தெளிவாக காணப்படுகிறது. தேவனுடைய உண்மையான மக்கள், அவர்களைக் கட்டியிருந்த கட்டுகளை அறுத்தெறிகிறார்கள். குடும்பதொடர்புகள், சபை உறவுகள் எல்லாம் இப்போது அவர்களை பிடித்துவைக்க சக்தியற்றுப்போய்விட்டது. இவைகளெல்லாவற்றைக்காட்டிலும், சத்தியம் இப்போது விலைமதிப்புள்ளதாயிற்று. சத்தியத்திற்கு எதிரிடையாக இருக்கின்ற அனைத்துத் தடைகளையும் தாண்டி, பெருந்திரளான மக்கள் கூட்டம் ஆண்டவரின் பக்கம் தங்கள் பங்கைத் தெரிந்துகொள்கிறார்கள்.⋆ Mar 496.1

வாக்குத்தத்த வசனம்: Mar 496.2

“... அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்யவிரும்புகிறபடியால், அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்; அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்தரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.” - மீகா 7:18,19. Mar 496.3