Go to full page →

அர்மெகதோன் யுத்தம்!, செப்டம்பர் 6 Mar 497

“இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால், அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள்” என்றான். - வெளிப்படுத்தல் 17:14. Mar 497.1

ஏழாவது கலசம் ஊற்றப்படுவதைக்குறித்து நாம் படிக்க வேண்டியது அவசியம். தீமையின் வல்லமைகள் பெரிய போராட்டம் நடத்தாமல், தங்கள் எதிர்ப்பைக் கைவிடாது; என்றாலும், இந்த அர்மெகதோன் யுத்தத்திலே தேவதிட்டத்திற்கு முக்கியமான ஒரு பங்கு இருக்கிறது. வெளிப்படுத்தல் 18-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள தூதனின் மகிமையால் பூமி பிரகாசமாகும் பொழுது, நன்மை மற்றும் தீமையான அடிப்படைக்கூறுகள் நித்திரையினின்று விழித்துக்கொள்ளும்; ஜீவனுடைய தேவனுடைய சேனைகள் அப்பொழுது களத்தில் இறங்கும். Mar 497.2

தேவனுடைய ஊழியக்காரர் நெற்றிகளில் முத்திரைப்போடப்படும் வரைக்கும், நான்கு வல்லமையான தூதர்களும் பூமியின் வல்லமைகளைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். பூமியின் இராஜ்யங்கள் யுத்தஞ்ச்செய்ய ஆவலோடு இருக்கின்றன; ஆனால், தேவதூதர்களால் அவைகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தக்கட்டுப்பாடு எடுக்கப்படும்போது, வேதனை நிறைந்த ஒரு இக்கட்டுக்காலம் வரும். பயங்கரமான-சாவிற்கேதுவான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படும். கப்பல்கள் தாங்கள் சுமந்து வரும் அனைத்து மக்களோடும் மகா ஆழங்களில் புதைக்கப்படும். சத்திய ஆவியைப் பெற்றிராத அனைவரும் சாத்தானுடைய தலைமையின் கீழ் ஒன்று சேர்ந்துக்கொள்வார்கள்; ஆனாலும், அர்மெகதோன் யுத்தத்திற்கான காலம் வரும்வரையில் அவர்களும் தேவ வல்லமையினால் அடக்கப்பட்டிருப்பார்கள். Mar 497.3

தீமையின் அனைத்து வகையான வல்லமைகளும் முழுவீச்சில் வேலை செய்யும். தீய தூதர்கள், தீய மனிதர்களோடு தங்களது வல்லமைகளை இணைத்துச் செயல்படுவர். அவர்கள் தொடர்ந்து யுத்தஞ்செய்துகொண்டே இருப்பதினாலும், ஏமாற்றுவதிலும், சண்டைசெய்வதிலும் மிகத் திறமையான வழிமுறைகளில் அனுபவத்தை முயன்று பெற்றிருப்பதினாலும், இக்காரியங்களிலே நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக தங்களைப் பலப்படுத்திக்கொண்டிருப்பதினாலும், இந்தக் கடைசிப் போராட்டத்தை வெறித்தனமான யுத்தமின்றி விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இந்த மிக்கியமான கட்டத்தில், உலகின் மக்கள் அனைவரும் உலகில் காணப்படும் இரு பிரிவுகளில் ஒரு பிரிவைத் தெரிந்துகொள்வார்கள். அர்மெகதோன் யுத்தம் நடத்தப்படும் அந்நாளிலே, நாம் ஒருவரும் உறங்குகிறவர்களாகக் காணப்படக்கூடாது. தங்கள் விளக்குகளுக்கு எண்ணெய் வைத்திருந்த புத்தியுள்ள கன்னிகைகளைப் போல, நாமும் அதிக விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்... Mar 497.4

பரிசுத்த ஆவியின் வல்லமை நம்மேல் இருக்க வேண்டும். சேனையின் அதிபதியாகிய கர்த்தர், பரலோகத் தூதர்களின் அதிபதியாக நின்று, இந்த யுத்தத்தை நடத்துவார். குறிப்பிடத்தக்க பக்திவிநயமான சம்பவங்கள் நம்முன் இனி நடைபெறவிருக்கின்றன; எக்காளம் மீண்டும் மீண்டும் முழங்கப்படவிருக்கின்றது; வாதையின் கலசங்கள் பூமியின் குடிகள்மீது ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றப்பட போகின்றன; பிரமிப்பை ஏற்படுத்தும் காட்சிகள் நம்மீது ஏற்கனவே வந்துவிட்டன.⋆ Mar 498.1

வாக்குத்தத்த வசனம்: Mar 498.2

“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்கு கொடுக்கப்படும்.” - யாக்கோபு 1:5. Mar 498.3