Go to full page →

தேவனுடைய வேலை முடிவடைகிறது!, செப்டம்பர் 10 Mar 505

“ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசிங்கப்படும், அப்போது முடிவு வரும்.” - மத்தேயு 24:14. Mar 505.1

இந்த பயபக்தியான-பரிசுத்தமான எச்சரிப்பின் தூதானது மிகவும் கடினமான பணித்தளங்களிலும், பாவத்தில் மிகவும் அதிகமாக மூழ்கியிருக்கும் பட்டணங்களிலும், இந்தப் பெரிய முத்தூதின் ஒளி பிரகாசித்திராத இடங்களிலும் கூறியறிவிக்கப்பட வேண்டும். ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்திற்கான கடைசி அழைப்பை ஒவ்வொருவரும் கேட்கவேண்டும். நரகத்திலிருந்து நாட்டிற்கும் இந்த நிகழ்கால சத்தியம் கூறியறிவிக்கப்படவேண்டும். வெளிப்பகட்டோடு அல்ல, ஆவியின் வல்லமையோடு கூறியறிவிக்கப்பட வேண்டும். Mar 505.2

தேவ கிருபையின் புதுப்பிக்கும் வல்லமையின் தூதானது பல்வேறு தட்பவெட்ப நிலையுடைய அனைத்து நாடுகளுக்கும், உலகம் முழுவதும் சத்தியத்தினால் சுற்றிவளைக்கப்படத்தக்கதாக கொண்டுசெல்லப்படும். முத்திரையைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களில், எல்லா ஜாதி, கோத்திரம், பாஷை, ஜனக்கூட்டத்தாரும் இருப்பார்கள். ஒவ்வொரு தேசத்திலுமிருந்து சேர்க்கப்படப்போகிற ஆண்களும் பெண்களும் தேவனுடைய சிங்காசனத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்பாக நின்று, “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கு ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக” (வெளிப்படுத்தல் 7:10) என்பார்கள். Mar 505.3

ஆண்டவருடைய சத்தியத்தின் மகிமையினாலே பூமிமுழுவதும் பிரகாசமாக்கப்படும். அந்த ஒளி எல்லா மக்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் பிரகாசிக்க வேண்டும். அதைப் பெற்றுக்கொண்டவர்களிடமிருந்து அந்த ஒளி பிரகாசிக்க வேண்டும். விடிவெள்ளி நம்மேல் உதித்திருக்கிறது. நாம் அதன் வெளிச்சத்தை இருளிலிருக்கிற மக்களின் பாதைகள்மேல் காட்டவேண்டும். Mar 505.4

ஒரு நெருக்கடியான காலகட்டம் நம்மேல் வந்திருக்கிறது. நாம் இப்போது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் கடைசிக்காலத்திற்குரிய மாபெரும் சத்தியங்களை கூறியறிவிக்க வேண்டும். வெகுசீக்கிரம் ஒவ்வொருவரும் எச்சரிப்பைக்கேள்விப்பட்டு, தீர்மானம் எடுப்பார்கள்; அப்பொழுது முடிவு வரும். Mar 506.1

முதலாம், இரண்டாம், மூன்றாம் தூதர்களுடைய தூதுகளில் பொதிந்திருக்கிற சத்தியம் ஒவ்வொரு ஜாதிக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்கார்ருக்கும் ஜனக்கூட்டதிற்கும் போய்ச்சேரவேண்டும்; ஒவ்வொரு கண்டங்களிலும் பரவியிருக்கிற இருளை அது குறைக்க வேண்டும்; அது கடல்களிலிருகிக்கிற தீவுகளுக்கும் சென்று சேரவேண்டும்; இந்த வேலையிலே தாமதம் கூடாது. Mar 506.2

நமது கோட்பாடுச் சொல்லானது, முன்னேறு! எப்போதும் முன்னேறு! என்பதே. பரலோகத்தின் தூதர்கள் வழியை ஆயத்தப்படுத்தத்தக்கதாக நமக்கு முன்னே செல்வார்கள். முழு உலகமும் ஆண்டவருடைய மகிமையினால் பிரகாசமடையும்வரை, நமக்கு அப்பாலிருக்கிற இடங்களைக்குறித்த பாரமானது நம்மைவிட்டு ஒருபோதும் அகலக்கூடாது.⋆ Mar 506.3

வாக்குத்தத்த வசனம்: Mar 506.4

“வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.” - ஏசாயா 1:18. Mar 506.5