Go to full page →

தேவன் தமது மக்களுக்காக இடைபடுகிறார்!, செப்டம்பர் 11 Mar 507

“சகல ஜனங்களே, கேளுங்கள்; பூமியே, அதிலிள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார். இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வரிகிறார்; அவர் இறங்கி பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார்.” - மீகா 1:2,3. Mar 507.1

நெருக்கடியான ஒரு காலக்கட்டத்தில்தான் ஒரு மனிதனின் குணம் வெளிப்படுகின்றது… ஆத்துமாவின் தேவை சந்திக்கப்படக் கூடாதவிதத்தில், பிந்திவிட்ட நிலையில், மானிடருக்காக நியமிக்கப்பட்ட அந்த கிருபையின் காலமுடிவிலே, மிகப் பெரிய கடைசிச்சோதனை வருகிறது. Mar 507.2

நாடுகளைக்குறித்து தீர்க்கவேண்டிய கணக்குகள் ஆண்டவரிடம் இருக்கிறது. இந்த உலகின் வரலாற்றிலே, அனைத்து நூற்றாண்டுகளின் நெடுக்கிலும் தீமையின் கூட்டாளிகள் தேவ கோபத்தை, தேவனுடைய உக்கிர கோபாக்கினையின் நாளுக் கெதிராக சேர்த்துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். காலம்நிறை வேறும்போது, அக்கிரமம் தேவனுடைய இரக்கத்தின் எல்லையை எட்டுகிறபோது, அவருடைய பொறுமை முடிவடையும். பரலோகப் புத்தகங்களிலே சேகரிக்கப்பட்டிருக்கிற பாவங்களின் தொகை, மீறுதலின் விளிம்பை தெடும்போது, இரக்கம் கலக்கப்பட்டிராத தேவனுடைய உக்கிர கோபம் வந்துசேரும்; அப்போதுதான், தெய்வீகப் பொறுமையை அலட்சியப்படுத்தியது எத்தனை பயங்கரமான காரியம் என்பது தெளிவாகும். தேவனுடைய கற்பனைகளை பயனற்றதாக்கிவிடுவதற்காக, நாடுகள் ஒன்று சேரும்பொழுது, அந்த நெருக்கடி அதன் உச்சக்கட்டத்தை அடையும். Mar 507.3

அக்கிரமம் மிகுதியாவதினாலே, நீதிமான்கள் தேவனுக்காக பக்தி வைராக்கியம் காண்பிக்கிற நாட்கள் வரும். தெய்வீக வல்லமையைத் தவிர வேறு எதுவும் தீய மக்களோடு இணைக்கப் பட்டிருக்கிற சாத்தானுடைய இறுமாப்பைத் தகர்க்கமுடியாது. சபைக்கு வருகிற அந்த மாபெரும் ஆபத்தான மணி வேளையில் சபைக்காக, உண்மையான மீதமானவர்களால் ஊக்கமான ஜெபம் ஏறெடுக்கப்படும். துன்மார்க்கரின் பாவம் அதன் உச்சக்கட்டத்தை எட்டுகிற அந்த வேளையில் தானே தேவன் தமது பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார். “இரவும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற தம்முடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்காக, அநேக நாள் பொறுத்திருந்த போதிலும் அவை பழிவாங்குவார்.” Mar 508.1

உண்மைக்குப் பதிலாக பொய்யை நியமிப்பதே இந்த நாடகத்தின் கடைசிச் செயலாக, இருக்கும். இந்த நியமனத்தை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும்போது, தேவன் தம்மை வெளிப்படுத்துவார். மனிதனுடைய சட்டங்கள் தேவனுடைய சட்டங்களுக்கும்மேலாக உயர்த்தப்படும்பொழுது, இவ்வுலகின் வல்லமைகள் வாரத்தின் முதல்நாளை ஆசரிக்கும்படி மனிதரைக் கட்டாயப்படுத்தும்போது, தமது வேலையை நடப்பிக்கத் தக்கதான வேளை தேவனுக்கு வந்ததென்பதை அறியுங்கள். அவர் தமது மாட்சிமையிலே எழும்புவார்; பூமியை பயங்கரமாகக் குலுக்குவார். உலகவாசிகளை, அவர்களுடைய அக்கிரமத்தினிமித்தம் தண்டிப்பதற்காக, தம்முடைய ஸ்தானத்திலிருந்து எழுந்தருளுவார். பூமி தன்னில் கொலையுண்டவர்களை ஒப்புக்கொடுக்கும்; அது இனி அவர்களை மறைக்காது.⋆ Mar 508.2

வாக்குத்தத்த வசனம்: Mar 508.3

“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” - நீதிமொழிகள் 28:13. Mar 508.4