Go to full page →

நித்திய சுதந்திரம்!, டிசம்பர் 15 Mar 697

“ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்க்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்...” - கொலோசயர் 1:12,13 Mar 697.1

மீட்பின் கிரயம் செலுத்தப்பட்டுவிட்டது. நித்திய வாழ்வைப்பெறுவதற்கு, தேவனுக்குக் கீழ்படிந்து வாழ்வதின்மூலம், அனைவரும் தேவனிடம் வரலாம்; ஆனால், அத்தகைய அழியாத சுதந்தரவீதத்தை மனிதன் ஒதுக்கிவிட்டு, பெருமை, சுயநலம், பகட்டு நிறைந்த வாழ்கையின்மூலம் திருப்தியடைவதற்காக வாழ்கிறான்; அதனால், இம்மைக்கும் மறுமைக்கும் உரிய ஆசீர்வாதத்தை இழந்துபோகிறான். மனிதன் பரலோகத்தின் மாளிகைகளில் நுழையலாம்; கிறிஸ்துவோடும் பரலோகத் தூதர்களோடும் தேவனுடைய பிரபுக்களோடும் சமத்துவமாகப் பழகலாம்; இருப்பினும், இத்தகைய பரலோகத்தின் கவர்ச்சிகளைவிட்டு, அவர்கள் விலகுவது நம்பக்கூடாததாகவே தோன்றுகிறது. Mar 697.2

அனைத்து உலகங்களின் சிருஷ்டிகர், தாம் தன் குமாரனை நேசிப்பதைப்போன்று தன் ஒரேபேறான, குமாரனைத் தங்கள் சொந்த இரட்சகராக நம்புகிறவர்களையும் நேசிப்பதாக வாக்குக்கொடுத்திருக்கிறார்; இப்பொழுதே, இங்கேயே அவரது கிருபையின் அனுகூலம் ஆச்சரியமான அளவில் நம்மீது பொழியப்படுகிறது. பரலோகத்தின் ஒளியும் மகத்துவமுமானவரை மனிதர்களுக்கு ஈவாகக் கொடுத்ததின்மூலம், பரலோகப் பொக்கிஷங்கள் அனைத்தையும் தேவன் நம்மேல் பொழியப்பண்ணியிருக்கிறார். இனி வரப்போகும் வாழ்வை நமக்கு வாக்குப்பண்ணினதோடு அல்லாமல், இந்த வாழ்விலும் மேன்மையான ஈவுகளால் தேவன் நம்மை நிரப்புகிறார். அவரது கிருபைக்குப் பாத்திரவாங்களாகிய நாம், சிறந்த-பரந்த-உன்னதமான-குணனலங்களைப் பெற்று மகிழ விரும்புகிறார். பரலோகத்தின் மேன்மையான வாழ்விற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குவதே அவரது திட்டம். Mar 697.3

ஆனால், மனித ஆத்துமாக்களுக்காக சாத்தான் போராடிக்கொண்டிருக்கிறான்... பரலோகத்தின் மகிழ்ச்சியை ருசிபார்க்கும் அனுபவங்களை மனிதன் பெற்றுக்கொள்ளாதபடியும், பரலோகவாசிகளுக்காகக் காத்திருக்கிற நித்திய மகிமையையும் கனத்தையும் பற்றிய ஒரு சிறு கண்ணோட்டத்தையுங்கூட மனிதன் பெற்றுவிடக்கூடது என்பதிலும் சாத்தான் கவனமாக இருக்கிறான். Mar 698.1

கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு இம்மையும் மறுமையும் வாக்களிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சீடர்களில் மிகச்சிறியவன் கூட, பரலோகவாசியாகவும் தேவனுக்கு சுதந்தரவாளியாகவும், அழியாததும் வாடாததுமாகிய சுதந்தரவீதத்தைப் பெற்றுக்கொள்வான். ஆ! அனைவரும் பரலோக ஈவைத் தெரிந்து கொண்டு, தேவனுக்குச் சுதந்தரவாளிகளாக, யாராலும் அழிக்க இயலாத-முடிவில்லாத-உலகத்தின் சுதந்தரவீதத்தைப் பெற்றுக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஓ! இந்த உலகத்தைத் தெரிந்தெடுக்க வேண்டாம்! மேன்மையான சுதந்தரவீதத்தையே தெரிந்துகொள்ளுங்கள்! கிறிஸ்து இயேசுவில் அழைக்கப்பட்ட உன்னத அழைப்பிற்குள் இலக்கை நோக்கி பிரயாசப்பட்டு முன்னேறுங்கள்!⋆ Mar 698.2

வாக்குத்தத்த வசனம்: Mar 698.3

“நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” - எவேசியர் 6:11. Mar 698.4