Go to full page →

கிறிஸ்துவே நமது ஆசிரியர்!, டிசம்பர் 22 Mar 711

“இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்: இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன்: என்று கர்த்தர் சொல்லுகிறார். - ஏசாயா 52:6. Mar 711.1

ஆதியில் இருந்ததைப் போலவே-மனிதன் மீண்டும் தேவனுடைய பிரசன்னத்திற்குமுன் கொண்டுவரப்பட்டு, அவரால் போதிக்கப்படுவான். Mar 711.2

நமக்கு முன்பாக என்ன வெளிப்படுத்தப்படும் என்று நாம் இப்பொழுது சிறிதுகூட எண்ணிப்பார்க்கமுடியாது. கிறிஸ்துவோடு ஜீவத்தண்ணீர்களண்டையில் உலாவுவோம். இயற்கையின் மருத்துவங்களையும் அழகையும் அவர் நமக்கு காண்பிப்பார். நமக்கு அவர் எப்படியிருக்கிறார், நாம் அவருக்கு எப்படியிருக்கிறோம் என்பதை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். நாம் தற்போது அறிவில் குறைவுள்ளவர்களாதலால், நம்மால் அறிந்துகொள்ள இயலாத சத்தியங்களை, நித்தியத்தில் அறிந்துகொள்வோம். Mar 711.3

இனி வரப்போகின்ற உலகத்தில் மீட்கப்பட்டவர்களை கிறிஸ்து பெருமான், ஜீவநதியண்டை நடத்திச்சென்று, சத்தியத்தின் மகத்துவம் நிறைந்த பாடங்களைப் போதிப்பார். இயற்கையின் புதிர்களையும்-இரகசியங்களையும் அவர் வெளிப்படுத்துவார். தலைமை நிலைக்குரிய அவரது கரம் உலகத்தை கட்டுப்படிற்குள் வைத்திருக்கிறது என்பதை அவர் காண்பிப்பார். ஒவ்வொரு ஒளிக்கதிரையும் சிதறிப்பிரகாசிக்கச்செய்யும் நம் இரக்கமுள்ள பிதாவின் நோக்கங்களை அறிந்துகொள்வார்கள்; எனவே, பரிசுத்த தூதர்களுடன் மீட்கப்பட்டவர்களும் சேர்ந்து, இந்த நன்றியற்ற உலகத்தின்மேல் தேவன் பாராட்டிய உன்னத அன்பை, நன்றியோடு நினைவுகூர்ந்து, போற்றிப்பாடுவார்கள். Mar 711.4

சொல்லிமுடியாத ஐசுவரியத்தைப்பற்றியும் எல்லையற்ற வாய்ப்புகளின் வரலாற்றைப்பற்றியும் ஒவ்வொரு மாணவனுக்கும் வெளிப்படுத்தப்படும்... பாவம் ஊடுருவிய வரலாறு, மரணத்திற்கு ஏதுவான பொய்மையின் கோணலான செயற்பாடுகள், நேர்கோடுகளிலிருந்து பிசகாத சத்தியம் எப்படி தவறிகளைச் சந்தித்து, ஜெயித்தது என்பதெல்லாம் வெளிப்படுத்தப்படும். நாம் காண்கின்ற உலகத்திற்கும், நம்மால் காணக்கூடாத உலகத்திற்கும் ஊடாக இருக்கும் திலை அகற்றப்பட்டு, அற்புதமான காரியங்கள் வெளிப்படுத்தப்படும். Mar 712.1

சொல்லொண்ணா ஆனந்தத்தோடு, விழுந்துபோகாத சிருஷ்டிகளின் மகிழ்ச்சியிலும், ஞானத்திலும் பங்கேற்போம். தேவனுடைய கரங்களின் கிரியைகளை யுகங்கள் நெடுகிலும் தியானித்ததினால், பெற்றுக்கொண்ட பொக்கிஷத்தில் பங்கிகொள்வோம். நித்தியத்தின் ஆண்டுகள் உருண்டோட, நாம் தொடர்ந்தமேலான-மகத்துவமான வெளிப்பாடுகளைப் பெற்றுக்கொண்டே இருப்போம். நித்திய நித்திய காலமாக, நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளவிருக்கும் ஈவுகள், “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்க்கும் மிகவும் அதிகமாய்” இருக்கும் - எபேசியர் 3:20 Mar 712.2

தேவனோடு நித்தியகாலமாக நாம் வாழ, நம்மைத் தகுதிபடுத்துவதற்கேற்ற கல்வியை, நாம் இங்கேயே பெற்றிருக்க வேண்டும். இங்கே நாம் ஆரம்பிக்கும் கல்வி, பரலோகத்தில் பூரணமாக்கப்படும். நாம் ஒரு மேலான படித்தரத்தின் ஆரம்பத்திற்க்குள் மாத்திரமே பிரவேசிக்கிறோம்.⋆ Mar 712.3

வாக்குத்தத்த வசனம்: Mar 712.4

“என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.” - மல்கியா 3:17. Mar 712.5