Go to full page →

அண்டசராசரத்தையும் ஆராய்வதற்கான ஓர் வாய்ப்பு!, டிசம்பர் 25 Mar 717

“கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.” - சங்கீதம் 104:24. Mar 717.1

இந்த உலகில் தேவனுடைய கிரியைகளையும் வழிகளையும் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள ஆரம்பிக்க மாத்திரமே நம்மால் கூடும். அந்தக்கல்வி நித்திய காலம் முழுவதும் தொடரும். மனிதனின் ஒவ்வொரு சக்தியும் திறம்பட வேலைசெய்யதக்கதாக, சிந்தனைக்கான ஆய்வுப்பொருட்க்களை தேவன் மனிதனுக்காக வழங்கியிருக்கிறார். இதயத்தை நன்றியாலும் ஸ்தோத்திலங்களாலும் நிறைக்கத்தக்கதாக நமது சிருஷ்டிகரின் குணாதிசயங்களை மேலே வானத்திலும், கீழே பூமியிலும் நாம் படிக்கலாம். தேவனுடைய மட்டற்ற அன்பை அவரது மகத்துவமான கிரியைகளில் கண்டு, நம் ஒவ்வொரு நரம்பும் அதை வெளிப்படுத்திக்காட்டும். Mar 717.2

நம் பார்வையை மறைக்கும் திரை நீக்கபடும்பொழுது, அந்த அழகிய உலகை நம் கண்கள் காணும். தற்போது அந்தக் காட்சியில் ஒரு மினுக்கொளியளவே நாம் நிண்நோக்கியின்மூலமாக பெற்றுக்கொள்கிறோம்; வானமண்டலங்களின் மகத்துவத்தை தற்போது தொலைநோக்கி வாயிலாக நாம் காண்கிறோம். ஆனால் பாவத்தின் சாபம் நீக்கப்பட்ட பின்பு, இந்த ஒரு உலகமும் ‘கர்த்தராகிய தேவனின் மகிமையில்’ தோன்றும். நமது ஆராய்ச்சிக்காக எத்தகைய களம் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது! அங்கே அறிவியல் படிக்கும் மாணவன் சிருஷ்டிப்பின் பதிவேடுகளை வாசித்து, தீமையின் பிரமாணங்களை நினைவூட்டு வகையில் எதுவும் இல்லை என்பதைக் காண்பான். புலம்பலின் தொனியையோ அல்லது துக்கத்தின் அடங்கிய குரலையோ அங்கு கேட்கமாட்டான், இந்த பரந்தகன்ற பிரபஞ்சத்திலுள்ள சகலவிதமான படைப்பிலும் தேவனுடைய நாமம் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். பூமியிலோ அல்லது சமுத்திரத்திலோ அல்லது வானத்திலே தீமையின் அடையாளம் ஒன்று மீந்திருக்காது. Mar 717.3

மீட்கப்பட்ட கூட்டத்தார், ஒவ்வொரு உலகமாகப் பார்த்துக்கொண்டே வருவார்கள். அவர்கள் தங்கள் நேரத்தின் பெரும் பகுதியை, மீட்பின் இரகசியத்தை ஆராய்ந்துபார்ப்பதிலேயே செலவழிப்பார்கள். நித்திய வாழ்வு நெடுகிலும் இந்த ஆய்வுப் பொருளே, அவர்கள் சிந்தைக்குத் தொடர்ந்து வெளிப்படும். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், அவர்களது சாட்சியின் வசனத்தாலும் ஜெயம்பெற்றவர்களுடைய சிறப்புரிமைகள் விளங்கிகொள்ளுவதற்க்கும் மேம்பட்டதாக இருக்கும். Mar 718.1

அண்டசராசரங்களின் பொக்கிஷங்கள் அனைத்தும் தேவனுடைய பிள்ளைகள் படிப்பதற்காக திறந்துவைக்கப்படும். வீழ்ந்துபோகாத உலகத்து மக்களின் மகிழ்ச்சியிலும், ஞானத்திலும், சொல்லொண்ணாகளிப்போடும் நாம் பிரவேசிப்போம். யுகண்கள் நெடுகிலும், தேவனுடைய கரங்களின் கிரியைகளைத் தியானித்ததின் விளைவாக, சம்பாதித்த பொக்கிஷங்களை நாம் பகிர்ந்துகொள்வோம். நித்தியத்தின் ஆண்டுகள் உருண்டோடும்போது, நமக்கு இன்னும் மேன்மையான-மகிமையான வெளிப்படுகள் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருக்கும். “நாம் நினைப்பதற்க்கும் கேட்ப்பதற்கும் மிகவும் அதிகமாக” என்றென்றைக்கும் தேவனின் ஈவுகள் நமக்கு வழங்கப்படும்.⋆ Mar 718.2

வாக்குத்தத்த வசனம்: Mar 718.3

“இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்க்குள்ளே கொண்டுவருவார்கள்.” - வெளிப்படுத்தல் 21:24. Mar 718.4