Go to full page →

வேத வசனத்திற்கான ஒரு பஞ்சம் கச 170

தேவனுடைய ஊழியக்காரர்களால் பேசப்பட்ட தேவனுடைய வார்த்தையை இப்பொழுது பாராட்டாமலும், அதை படித்து ஆராய்ந்து தியானிக்காமலும், அருமையானதாக உயர்வாக மதிக்காமலும் இருப்பவர்கள் கடுந்துயருடன் இனிமேல் புலம்யி அழுவதற்கான காரணத்தை உடையவர்களாயிருப்பர். நியாயத்தீர்ப்பின் முடிவான நேரத்தில், கர்த்தர் பூமியின்மீது கடந்துசெல்வார் என்பதை நான் கண்டேன். அப்போது, நடுங்க வைக்கும் பயங்கரமான வாதைகள் விழ ஆரம்பிக்கும். அப்போது தேவனுடைய வார்த்தையை இகழ்ந்து உதாசினப்படுத்ததினவர்களும், அதை வெகு அற்பமாக மதிப்பிட்டவர்களும், கர்த்தருடைய வசனத்தைத் தேட “ஒரு சமுத்திரம் தொடங்கி மறு சமுத்திரமட்டும், வட திசை தொடங்கி கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும், அதைக் கண்டடையாமற் போவார்கள்” — ஆமோ. 8:12. வேத வசனம் கேட்கக் கிடையாத ஒரு பஞ்சம் தேசத்திலே வந்திருக்கின்றது. — Ms 1,1857. கச 170.4