Go to full page →

சிக்காகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கச 83

சிக்காகோ மற்றும் மற்ற பெரிய பட்டணங்களிலே, விரைவில் நடக்க இருக்கின்ற காட்சிகள்கூட எனக்கு முன்பாகக் கடந்து சென்றன. துன்மார்க்கம் அதிகரித்து, தேவனுடைய பாதுகாக்கும் வல்லமை விலக்கப்பட்டபோது, அங்கே அழிவுண்டாக்கும் காற்றுகளும் சூறாவளிகளும் உண்டாயின. அங்கிருந்த கட்டிடங்கள் அக்கினியினால் அழிக்கப்பட்டன, பூமியதிர்ச்சியினால் தரைமட்டமாக்கப்பட்டன… கச 83.3

இதற்குச் சற்றுநேரத்திற்குப் பின், சிக்காகோவிலுள்ள கட்டிடங்கள் மற்றும் அவைகளைக் கட்டியெழுப்ப நமது ஜனங்களுடைய பணத்திற்குரிய காசோலையைக் குறித்த தரிசனம் எனக்குக் காட்டப்பட்டது. அவைகளின் அழிவு — சிக்காகோவிலோ அல்லது வேறு எந்த பட்டணத்திலோ நமது ஜனங்கள் சொத்துடையவர்களாகும் விதத்தில் தங்களது பணத்தைப் பெருமளவில் முதலீடு செய்யக்கூடாது என்றும், எச்சரிப்பின் தொனியைக் கொடுப்பதற்கேதுவாகக் கட்டவோ அல்லது வாங்கவோ வேண்டிய கடமையை தேவகிருபை தெளிவாய் உணர்த்தி, சாதகமான வழியைத் திறக்கும்போது மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்ற எச்சரிப்பையளிக்கும் ஒரு பொருட்பாடமாக இருந்தது. லாஸ்ஏஞ்சல்ஸ் பட்டணத்திலே கட்டிடங்களைக் கட்டுவதைக்குறித்தும் இதேபோன்ற ஒரு எச்சரிப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. விலையுயர்ந்த கட்டிடங்களை பட்டணங்களிலே கட்டுவதில் நம்முடைய பொருட்களை முதலீடு செய்யக்கூடாது என்று மறுபடியும் மறுபடியுமாக நான் அறிவுறுத்தப்பட்டேன். — PC 50 (1906). கச 83.4