Go to full page →

அட்வென்டிஸ்ட் சபையிலும்கூட கச 114

வெளியிலிருந்து வருகின்ற காரியங்களைக்காட்டிலும், உள்ளே இருந்து வருகின்ற காரியங்களுக்குத்தான் நாம் அதிகம் பயப்பட வேண்டியதாயிருக்கிறது. நமது பெலத்திற்கும் வெற்றிக்கும் வருகின்ற தடங்கல்கள் வெளி உலகத்திலிருந்து வருவதைக் காட்டிலும் நமது சபைக்குள்ளிருந்து வருவதுதான் மிகுதியாக இருக்கின்றன. தேவனுடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசுவின் விசுவாசத்தைக் கொண்டிருக்கின்றோம் என்று சொல்லிக்கொள்ளுகிறவர்கள், தாங்கள் வெளிக்காட்டுகின்ற செயல் நோக்கத்தை மற்ற எந்த வகுப்பினரைக் காட்டிலும், கொள்கை மாறாத தங்களது ஊக்கமான செல்வாக்கினாலும் அதிகமாய் விருத்தியடையச் செய்து கனப்படுத்துவார்கள் என்று அவிசுவாசிகள் எதிர்பார்ப்பதற்கு உரிமை உள்ளது. ஆனால், சத்தியத்தை ஆதரிக்கின்றோம் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள், அதனுடைய முன்னேற்றத்திற்கு மாபெரும் தடைகளாக இருந்திருப்பதை எத்தனைமுறை நிரூபித்திருக்கின்றார்கள். அவிசுவாசத்திற்கு இடமளிப்பதும், சந்தேகங்களை வெளிப்படுத்துவதும், இருளை வாஞ்சித்து வளர்ப்பதும் தீய தூதர்களின் பிரசனைத்தை ஊக்கப்படுத்தி சாத்தானின் உபாய தந்திரங்கள் நிறைவேறத்தக்கதாக வழிதிறக்கும். — 1SM 122 (1887). கச 114.1