Go to full page →

அற்புதங்கள் நடத்தப்படும் கச 121

நமக்கு முன்பாக வியாதியஸ்தர்கள் குணப்படுத்தப்படுவார்கள். நம் கண்களுக்கு முன்பாக அற்புதங்கள் செய்யப்படும். சாத்தானுடைய பொய்யான அற்புதங்கள் முழு வீச்சில் நடத்தப்படும்போது, நமக்காகக் காத்துக்கொண்டிருக்கும் சோதனையைச் சந்திக்க நாம் ஆயத்தமாக இருக்கின்றோமா? — 1T 302 (1862). கச 121.1

தீய ஆவிகளுடைய செல்வாக்கின்கீழ் உள்ள மனிதர்கள் அற்புதங்களை செய்வார்கள். அவர்கள் தங்களது மந்திரங்களை மக்கள்மீது செலுத்தி சுகவீனமாக்குவார்கள். பின்பு அந்த மந்திரங்களை நீக்கி, சுகவீனமாக இருந்தவர்கள் அதிசயமான முறையில் குணமடைந்தார்கள் என்று மற்றவர்கள் சொல்லும்படி வழிநடத்துவார்கள். சாத்தான் மீண்டும் மீண்டுமாக இதைச் செய்திருக்கின்றான். — 2SM 53 (1903). கச 121.2

சாத்தான் சம்பந்தப்பட்டிருக்கின்ற அதிசயமான காட்சிகள் வெகு சீக்கிரத்தில் சம்பவிக்கும். சாத்தான் அதிசயங்களை செய்வான் என்று தேவனுடைய வார்த்தை அறிவிக்கின்றது. அவன் மனிதரை வியாதியஸ்தராக்கி, பின்பு அவர்களிடமிருந்து சடுதியில் தனது சாத்தானிய வல்லமையை விலக்கிவிடுவான். அதன்பிறகு, அவர்கள் சுகப்படுத்தப்பட்டதாக கருதப்படுவார்கள். இப்படிப்பட்ட தெளிவான குணமாக்கும் கிரியைகள், ஏழாம்நாள் அட்வென்டிஸ்ட் மக்களை சோதனைக்குள்ளாகக் கொண்டுவரும். — 2SM 53 (1904). கச 121.3

உண்மையான அற்புதங்கள்போன்று தோற்றமளிக்கும் விதத்தில், சாத்தான் தனது வகைவகையான வஞ்சகங்கள் மூலமாக அற்புதங்களை செய்யமுடியும். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாக்கப்படும் நேரத்தில், அவர்களுக்கு முன்பாக ஒரு சோதனைக் கேள்வியாக வைப்பதற்கு சாத்தான் இதைத்தான் நம்பியிருந்தான். — 2SM 52 (1907). கச 121.4