Go to full page →

நிறுவனப் பணி TamChS 181

சுகாதார உணவகங்களையும் சிகிச்சை அறைகளையும் நிறுவ வேண்டும். கடற்கரையோர பிரமாண்ட சொகுசு விடுதிகளருகே இதுபோன்ற நிறுவனங்கைளை அமைப்பது இடம்பெறவேண்டும். ‘கர்த்தருக்கு வழியைச் செவ்வை பண்ணுங்கள்’ என்று வனாந்தரத்தில் கேட்கப்பட்ட யோவான் ஸ்நானனுடைய சத்தத்தைப்போல, பிரமாண்டமான சுற்றுலா விடுதிகளிலும், கடற்கரை சொகுசு விடுதி களிலும் ஆண்டவருடைய தூதுவர்களின் சத்தம் கேட்கவேண்டும். 17T; 55, 56 TamChS 181.6

அநேக நகரங்களில் ஓர் உணவகத்தோடு சேர்ந்து சிகிச்சை அறைகளும் இருந்தால் நல்லதென எனக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டது. சரியான நியதிகளை உயர்த்திப் பிடித்துச்செல்ல இவை ஒன்றுக்கொன்று உதவ முடியும். இதோடு கூட சிலவேளைகளில் வியாதியஸ்தர்கள் தங்குவதற்கான அறைகள் இருந்தாலும் நல்லது. கிராமங்களில் அமைந்துள்ள சுகாதார மையங்கள் வளர்ந்து பெருகுவதற்கு இத்தகைய ஏற்பாடுகள் உதவும். 27T, 60 TamChS 182.1

நம் நகரங்களுக்கான ஒரு செய்தி தேவனிடம் உள்ளது. அந்தச் செய்தியை நம் முகாம் கூட்டங்களில் அறிவிக்கவேண்டும். வேறு பொது நடவடிக்கைகளாலும் நம்முடைய வெளியீடுகளாலும் அறிவிக்கவேண்டும். இதோடு கூட, நகரங்களில் சுகாதார உணவகங்களை நிறுவவேண்டும். அவற்றின்மூலம் இச்சையடக்கச் செய்தியை அறிவிக்கவேண்டும். நம் உணவகங்கள் சம்பந்தப்பட்ட கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இயலுகிற சமயங்களில் எல்லாம், புரவலர்களை அழைத்து, சுகாதார அறிவியல் குறித்தும், கிறிஸ்தவ இச்சையடக்கம் குறித்தும் விளக்கவுரைகள் கொடுப்பதற்காக ஓர் அறையை ஒதுக்கவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை ஆயத்தப்படுத்துவது குறித்தும், வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் அங்கே அவர்கள் அறிவுரை பெறலாம். 37T, 115 TamChS 182.2

நம்முடைய உணவகங்களுக்கு வருவோருக்கு வாசிப்பதற்குப் புத்தகங்களைக் கொடுக்கவேண்டும். இச்சையடக்கம், உணவுப் பழக்க சீர்திருத்தம் குறித்த நம்முடைய எழுத்துகளுக்கு அவர்களுடைய கவனம் திரும்பவேண்டும். கிறிஸ்துவின் போதனைகள் அடங்கிய துண்டுப்பிரதிகளையும் அவர்களுக்குக்கொடுக்கவேண்டும். இந்த வாசிப்பு விஷயங்களை விநியோகிக்கும் செலவை நம்மவர்கள் அனைவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். வருகிற அனைவருக்கும் வாசிப்பதற்கு ஏதாவது கொடுக்கவேண்டும். பலர் துண்டுப்பிரதியை வாசிக்காமல் விட்டுச்செல்லலாம். ஆனால் யாருடைய கரங்களில் கொடுக்கிறீர்களோ அவர்களில் சிலர் வெளிச்சத்தைத் தேடுபவர்களாக இருக்கலாம். நீங்கள் கொடுப்பதை அவர்கள் வாசிப்பார்கள்; பின்னர், ஆராய்வார்கள்; பிறகு மற்றவர்களுக்கு அவற்றைக் கொடுப்பார்கள். 17T, 116 TamChS 182.3

சுகாதார உணவகங்களையும் சிகிச்சை றைகளையும் மாபெரும் நகர மையங்களில் நிறுவுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று என்ன தெரியுமா? இந்த வழிமுறைகள்மூலம் முக்கிய நபர்களுடைய கவனம் மூன்றாம் தூதனுடைய தூதின்பக்கம் திரும்ப வாய்ப்புள்ளது என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டது. சாதாரண உணவகங்களை நடத்துவதிலும் இத்தகைய உணவகங்களை நடத்துவதிலும் அடியோடு வித்தியாசம் இருப்பதைக் கவனித்து, இந்தத் தொழில்முறை வித்தியாசத்திற்கான காரணங்களை புத்திசாலி மனிதர்கள் விசாரிப்பார்கள்; தரம் உயர்ந்த உணவுகளை நாம் பரிமாறுவதற்கான நியதிகள் குறித்து ஆராய்வார்கள். அவ்வாறு இக்காலத்திற்கான சத்தியத்தின் செய்திகுறித்து அறிந்துகொள்ள வழி நடத்தப்படுவார்கள். 27T, 122, 123 TamChS 183.1