Go to full page →

புத்தகம் விற்றல் TamChS 199

அநேகர் கவலைப்பட்டு, அதைரியமடைந்து, விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் பெலவீனர்களாக இருக்கிறார்கள். தங்களைவிட அதிக தேவையில் இருக்கிற ஒருவருக்கு உதவும்படி அவர்கள் ஏதாவது செய்தால், தேவனுடைய பெலத்தில் அவர்கள் வளருவார்கள். நம்முடைய புத்தகங்களை விற்கிற நற்பணியில் அவர்கள் ஈடுபடுவார்களாக. அவ்வாறு அவர்கள் மற்றவர்களுக்கு உதவலாம்; அதில் கிடைக்கிற அனுபத்தால், தாங்கள் தேவனுடைய உதவிக்கரங்கள் என்கிற நிச்சயத்தைப் பெற்றுக்கொள்வார்கள். தங்களுக்கு தவும்படி ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்போது, வெளிச்சத்தைத் தேடுகிறவர்களிடம் அவர்களை அவர் வழி நடத்துவார். கிறிஸ்து அவர்களுக்கு அருகிலேயே இருந்து, என்ன பேசவேண்டும், என்ன செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கிறார். மற்றவர்களை ஆறுதல் படுத்துவதன்மூலம் அவர்கள்தாமே ஆறுதலடைவார்கள். 1CEv, 40 TamChS 199.4