தற்காலச்சத்தியத்தை அறிவிக்கிற ஊழியமே அனைவருடைய ஆர்வமாக இருக்கவேண்டுமெனக் கண்டேன். சத்தியமடங்கிய வெளியீடுகளை வெளியிடுவது தேவன் நியமித்துள்ள திட்டமாகும். சத்தமின்றி, ஆரவாரமின்றி பேசுகிற அந்தத் தூதுவர்களைக் கவனிக்கிற அனைவருக்கும் அது எச்சரிப்போ ஆறுதலோ கடிந்து கொள்ளுதலோ புத்திசொல்லுதலோ உணர்த்துதலோ தருகிற வழி முறைகளாக இருக்கவேண்டும் என்பதே அவருடைய திட்டமாகும். வெளியிடப்படும் சத்தியங்களால் பரிசுத்தமாக்கப்பட்ட இருதயங்களை ஆயத்தப்படுத்துவதில் தேவதூதர்கள் பங்காற்றுகிறார்கள்; நடக்கப்போகிற பயபக்தியான நிகழ்ச்சிகளுக்கு அவர்களை ஆயத்தமாக்குவதிலும் தேவதூதர்கள் பங்காற்றுகிறார்கள். 21T, 590 TamChS 203.2