Go to full page →

விளைவுகள் நிச்சயம் TamChS 242

சபை அங்கத்தினர்கள் தாங்கள் செய்யக்கூடிய பணியைச் செய்வதற்கு எழும்பவேண்டும்; இயேசுவுக்காக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதில் தங்களால் எவ்வளவு சாதிக்கமுடியும் என்பதை அறிந்தவர்களாக விருப்பத்தோடு தொடர்ந்து போராடினால், அநேகர் சாத்தானுடைய படையிலிருந்து விலகி கிறிஸ்துவுடைய கொடியின்கீழ் வருவதைக்காணலாம். இந்த ஒரு சில வார்த்தைகளில் சொல்லப்படும் வெளிச்சத்தின் பேரில் நம் மக்கள் செயல்பட்டால், தேவனுடைய இரட்சிப்பை நிச்சயமாகவே காணலாம். அற்புதமான எழுப்புதல்கள் உண்டாகும்; பாவிகள் மனமாற்றமடைவார்கள்; அநேக ஆத்துமாக்கள் திருச்சபைகளில் சேருவார்கள். 28T, 246 TamChS 242.1

உள்ளூர் ஊழியப்பணிகளிலும், அயல்நாட்டு ஊழியப்பணிகளிலும் நம் திருச்சபையின் அங்கத்தினர்கள் மிகுந்த ஆர்வம் காட்டவேண்டும். புதிய பகுதிகளில் சத்தியத்தின் கொடியை ஏற்றுவதற்கு சுயதியாக முயற்சிகளை எடுக்கும்போது, மிகுந்த ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். இந்தப் பணிக்காகச் செய்யப்படுகிற பண முதலீடுகள் மிகுந்த பலன்களைக் கொடுக்கும். புதிதாக மனமாறினவர்கள், வேத வசனத்திலிருந்து கிடைத்த வெளிச்சத்தில் களிகூர்ந்து, அதற்குப் பிரதிபலனாக தங்களிடமுள்ள வசதிகள் மூலம் சத்தியத்தின் வெளிச்சத்தை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல கொடுத்துதவுவார்கள். 39T, 49 TamChS 242.2

சில இடங்களில் விரும்பத்தகாத, வருத்தகரமான சூழ்நிலைகள் நிலவுவதால், ஊழியர்கள் அங்கே செல்ல மறுக்கிறர்கள். சுயாதீன ஊழியர்கள் சுயதியாகத்துடன் அங்குமுயற்சிகளை மேற்கொண்டால் குறிப்பிட்டத்தக்க நன்மையான மாற்றங்கள் உண்டாகும். தாழ்மையான இந்த எளிய ஊழியர்கள் அதிகமாகச் சாதிப்பார்கள். ஏனென்றால், மனித அதிகாரத்தைச் சாராமல், தங்களுக்குத் தயவு காட்டுகிற தேவனைச் சார்ந்து, பொறுமையோடும் விடாமுயற்சி யோடும் பிரயாசப்படுவார்கள். இந்த ஊழியர்கள் எவ்வளவுக்கு நன்மையை விளைவித்துள்ளார்கள் என்பதை இந்த உலகம் ஒரு போதும் அறியாது. 17T, 22, 23 TamChS 242.3