Go to full page →

ஆவிக்குரிய, சரீர பாரங்களை சிறுவர்கள் பகிரவேண்டும் TamChS 271

எல்லாருமே ஏதாவது செய்யலாம். சிலர், ‘என் வீட்டுக் கடமைகளையும் என் பிள்ளைகளையும் பார்ப்பதிலேயே என் நேரமும் ஆற்றல்களும் செலவாகிகின்றன’ என்று சாக்குப்போக்குச் சொல்கிறார்கள். பெற்றோரே, உங்களுடைய பிள்ளைகள் உங்களுடைய உதவிக்கரங்களாக இருந்து, அவர்களும் ஊழியம் செய்யவேண்டும்; அதன்மூலம், எஜமானுக்காக வேலைசெய்ய உங்கள் திறனும் ஆற்றலும் அதிகரிக்கும். ஆண்டவருடைய குடும்பத்தின் இளைய அங்கத்தினர்கள்தாம் சிறுவர்கள். படைப்பாலும் மீட்பாலும் தேவனுக்குச் சொந்தமானவர்கள். அவருக்காக தங்களை அர்ப்பணிக்குமாறு அவர்களை வழி நடத்தவேண்டும். TamChS 271.2

சரீரத்தின், மனதின், ஆத்துமாவின் சகல ஆற்றல்களும் அவருக்கே உரியவை என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். வெவ்வேறு துறைகளில் சுயநலமற்ற சேவைசெய்ய அவர்களைப் பயிற்றுவிக்கவேண்டும். உங்களுடைய பிள்ளைகள் தடைகளாக இருப்பதற்கு அனுமதிக்காதீர்கள். உங்களோடு சேர்ந்து உங்களுடைய பிள்ளைகளும் ஆவிக்குரிய பாரங்களையும், சரீரபாரங்களையும் சுமக்கவேண்டும். பிறருக்கு உதவுவதால் அவர்கள்தாமே தங்கள் சந்தோஷத்தையும் பயன்மிக்க தன்மையையும் அதிகரித்துக் கொள்கிறார்கள். 17T; 63 TamChS 272.1